பக்கங்கள்

வெள்ளி, 22 மார்ச், 2019

துக்ளக்’கே கூறு! அவமானமா? பெருமையா?

மின்சாரம்


கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால், இன்று பாரத நாடு எப்படி இருக்கும்?

பதில்: ஆர்.எஸ்.எஸ். இல்லை என்றால், நம் நாட்டில் ஹிந்துக்கள் தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளவே அவமானபட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த விதத்தில் ஆர்.எஸ்.எஸ். சாதனை மகத்தானது.

- ‘துக்ளக்’ 6-3-2019

பக்கம் 15

ஏன் இதையும் சேர்த்துக் கொள்ளலாமே- காந்தியார் என்ற மனிதர் உயிரோடு இருந்திருப்பார்.

காமராசரைப் பட்டப்பகலில் கொலை செய்யும் முயற்சியும் நடந்திருக்காது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்காது. குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்படாமல் தப்பித்து இருப்பார்கள்.

மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது - மாலேகான் குண்டுவெடிப்பும் நடந்திருக்காது, அஜ்மீர் தர்கா மீதான குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மீது குண்டுவெடிப்பு, நாசிக் -அய்தராபாத் குண்டு வெடிப்புகள் நடந்திருக்காது என்று எழுத வேண்டியதுதானே - ஏன் நிறுத்தி விட்டீர் - இந்த வகையில் எழுத இன்னும் ஏராளம் உண்டே!

ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளவே அவமானப்பட்டு கொண்டிருப்பார்கள் என்று கண்ணீர் ஆற்றைக் கரை புரள ஓட வைக்கும் ‘துக்ளக்’கையும், குருமூர்த்தி அய்யர் வாளையும் பார்த்துக் கேட்கிறோம்!

ஹிந்துக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அவமானப் படுவதாகக் கூறும் ‘துக்ளக்’கே, குருமூர்த்தியே.

ஹிந்து என்று கூறிக் கொள்ளவதாலேயே ஏற்படும் அவமானத்தைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்ததுண்டா? இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களாகிய பார்ப்பனர் அல்லாதார் இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு மிஞ்சுவது என்ன?

பெருமைக்குரிய மனிதன் என்ற மகுடமா?  அல்லது சிறுமைக்குரிய சீழ்பிடித்த நிலையா?

ஹிந்து என்று நீட்டி முழங்குகிறீர்களே! அந்த ஹிந்து என்பதற்கு என்ன பொருள்?

இந்து என்றால் யார்?

பாரசீகம் என்ன சொல்லுகிறது?

In Persian, says our author, the word means slave, and according to Islam, all those who did not embrace Islam were termed as slaves. (Dayanand Saraswati Aur Unka Kaam, edited by Lala Lajpat Rai, published in Lahore, 1898, in the Introduction)

பாரசீகத்திலிருந்து வந்த அரபு, மற்றும் பார்ஸி மக்கள் தங்கள் பகுதியான மத்திய ஆசியாவில் இருந்து இந்தியத் தீபகற்பத்திற்குள் நுழைந்த மக்களை (ஆரியர்களை) அடிமைகள், நாடோடிகள் என்று குறிக்கும் சொல்லாக ஹிந்த் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். அவர் களது மதநூல்களிலும் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தியுள் ளனர். (லாலா லஜ்பத் ராய் எழுதிய 'தயானந்த சரஸ்வதி - அவரது பணிகள்' என்ற நூலின் முன்னுரையில் எழுதியது).

Furthermore, a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964, gives the meaning of the word Hindu as “chore [thief], dakoo [dacoit], raahzan [waylayer), and ghulam [slave].” In another dictionary.

இதன் பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழைமையான பார்சி டிக்ஸ்னரி நீண்ட இடை வெளிக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்சி பதிப்பகம் ஒன்றில் மறுபதிப்பானது.

அதில் இந்து என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமானது திருடன் (வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் பிடுங்கி ஓடுபவன்),

கொள்ளைக்காரன் (இருவர் - அதற்கு மேல் சேர்ந்து கொள்ளையடிப்பவர்கள்), பிறருக்கு எப்போதும் தொல்லை கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும்போது பிடிபட்டு தண்டனைக் குள்ளாக்கப்பட்டு வாழ் நாள் முழுவதும் அடிமைச் சேவகம் புரிபவர்கள்) என்ற பல்வேறு அளவுகளில் பொருள் கொடுத் துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளதே, இதற்கு என்ன பதில்?

“என்சைக்ளோப் பீடியா” என்ன சொல்லுகிறது?

“இந்து மதம் என்பது ஒரு சமுக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது. இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் அல்லது வேறு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக் கின்றன.


இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால், இந்த வரையறை வேலை மேலும் திருப்தி யற்றதாயிருக்கின்றது.”

(என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 889)

ஆர்.எஸ்.எஸ். இல்லை என்றால், நம் நாட்டில் ஹிந்துக்கள் தங்களை ஹிந்து என்று கூறிக் கொள்ளவே அவமானப்பட்டுக் கொண்டிருப்பார்கள்என்று மூக்கால் அழும் குருமூர்த்தியார் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்?

ஹிந்து என்று சொல்லுவதுதான் அவ மானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு வகையில் ஹிந்து என்று பார்ப்பனர் அல்லாதார் தன்னை ஏற்றுக் கொண்டால் அவன் அவமானப்படு வதைத் தவிர வேறு வழியில்லையே.

அவன் பிறவியிலேயே சூத்திரனாகி விடுகிறான் - விளங்கும்படிச் சொல்ல வேண்டுமானால் வேசி மகன் ஆகி விடுகிறான்.

ஆதாரம் வேண்டுமானால் ஹிந்து மதத்தின் முக்கிய ஸ்மிருதியான மனு தர்மத்தைப் புரட்டினாலே புரட்டர்களின் உண்மையை அறிந்து கொள்ளலாமே!

மனுதர்மம் எட்டாம் அத்தியாயம் 415ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?

சூத்திரன் ஏழுவகைப்படுவான். 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2. யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்கிறவன். 4. விபசாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப் பட்டவன், 7. தலைமுறை தலைமுறையாக ஊழியன் செய்கிறவன் என்று சொல்லுகிறது மனுதர்மம்; இந்த இழிவை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இதனைப் பெருமையாகக் கருத வேண்டும் என்பதுதான் ‘துக்ளக்’கின் எதிர்ப்பார்ப்பா?

உமது ஹிந்துமதத்தை ஏற்றுக் கொண்டால் பெண்களின் கெதி (பார்ப்பனப் பெண்கள் உட்பட) என்னாவது?

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய் துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17).

தன் தாயையே இப்படி அசிங்கப்படுத்தும் ஹிந்து மதம் பற்றி குருமூர்த்திகளுக்குக் கவலை இல்லை என்றால் இவர்கள் எதற்காக அவமானப்பட போகிறார்கள்?

யார் இளித்தவாயர்கள்?


கேள்வி: ஒரு ஹிந்துவாய் இருந்தும் ஸ்டாலின் பிற மதங்களை விட்டு விட்டு ஹிந்து மதச் சடங்குகளையும், செயல்களையும் கிண்டலடிப்பது ஏன்?

பதில்: ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள், வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பதால்தான் (‘துக்ளக்’ 6.3.2019, பக்கம் 16)

இதன் மூலம் மறைமுகமாக குருமூர்த்தி வன்முறையைத் தூண்டுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் - வேசி மக்கள் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக இழிவுபடுத்தி வைத்திருந்த கூட்டத்தை பிராமணன், பெரிய ஜாதி என்று ஏற்றுக் கொண்டு இருந்தானே - இதைவிட இளிச்சவாய்த்தனம் வேறு என்ன  தான் இருக்க முடியும்?

நியாயமாக இவர்கள்தானே வன்முறையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். எவ்வளவு இளிச்சவாயர்கள் இந்தப் பார்ப்பனர் அல்லதார் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தால் இந்த 2019லும் இதனை எதிர்த்துப் பேசுவோர் மீது வன்முறையைத் தூண்டும் படி எழுதுவார்?

பிஜேபி ஆட்சி மத்தியில் வந்தாலும் வந்தது, கிராப்புக்குள் ஒளிய வைத்திருந்த சிண்டுகளை வெளியே எடுத்து விட்டு வீண் வம்புக்கு வருகிறார்கள் - இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த ஆட்டமெல்லாம் பார்ப்போம்!

-  விடுதலை ஞாயிறு மலர், 2.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக