பக்கங்கள்

திங்கள், 17 ஜூன், 2019

ஆஷ்சை கொன்று வெறி தீர்த்த வாஞ்சி

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆஷ், (Robert William Escourt Ashe) வாஞ்சிநாதன் எனும் சாதி வெறியரால் சுட்டு கொல்லப்பட்ட நாள் - 17.06.1911.

''குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்கள் மட்டுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்று கடவுளின் பெயரால் விதிக்கப்பட்டிருந்த  "விதியை" உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருந்த  தாழ்த்தப்பட்டிருந்த சாணார் (நாடார்) சமூகப் பெண்ணை தன் காரில் ஏற்றிய ஆட்சித் தலைவர், சுற்றிப்போகும் வழியால் காலதாமதமாகும் என்பதால் குறுகிய வழி எது எனக் கேட்கிறார்.

அருகிலிருந்தவர்கள் அக்ராஹாரம் வழியே போனால்தான் சீக்கிரமாக போகமுடியும் ஆனால் அது பிராமணர்கள் வசிக்கும் தெரு, பிறர் சென்றால் தீட்டாகிவிடும் என்றனர்.

அதை  stupid என்று சொல்லி காரை அக்ரஹாரப் பாதையில் கொண்டுசெல்லும்படி ஓட்டுனருக்கு கட்டளையிடுகிறார் மாவட்ட ஆட்சியர் .

அதை அறிந்து வழிமறித்த பார்ப்பனர்கள் அக்ரஹாரம் தீட்டாகிவிட்டது என்று வழி மறித்து ஆஷ்க்கு  எதிராகக்  கத்துகிறார்கள்.

தனது பிஸ்டலை காட்டி மிரட்டிவிட்டு அக் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் ஆஷ்.

பார்ப்பனர்கள் அக்ரஹாரத்தின் புனிதத்தைக்  கொடுத்த ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல சீட்டுக் குலுக்கி போட்டு அதில் வாஞ்சிநாதன் பெயரை தெரிவுசெய்கின்றனர்.

தனது அக்ரஹாரத்தை தீட்டாக்கிய ஆஷ்-ஐ மறைந்திருந்து சுட்டுக்கொள்கிறார் வாஞ்சிநாதன்.

பின்னாளில் அதையே வெள்ளையனை இந்திய விடுதலைக்காக சுட்டுக் கொன்ற சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாத ஐயர் என்று கதை அளந்து வரலாறாக்கப்படுகிறார் வாஞ்சிநாதன்.

கொலைக் கேசில் ரோட்டோரப்  புளிய மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட கட்டமொம்முலு எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை தூக்கி சாப்பிடும் கதை வாஞ்சிநாதன் கதை.  நன்றி விஷ்வா விஸ்வனாத்
- பகிரி வழியாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக