பக்கங்கள்

வியாழன், 30 மே, 2019

ஊடகத் துறையை சார்ந்தவர்களைப் பார்த்து "எந்த ஜாதி" என்று கேட்பதா? தமிழர் தலைவர் கண்டனம்



சென்னை, மே 29  ஊடகத் துறையை சார்ந்தவர் களைப் பார்த்து என்ன ஜாதி என்று கேட் டதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.

நேற்று (28.5.2019)  சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: ஆளுங்கட்சியில் இருக் கின்ற அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க.,வோ, தே.மு.தி.க.வோ, புதிய தமிழ கம் கட்சியாக இருந்தாலும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்களிடம் என்ன ஜாதி என்று கேட்கின்ற பட்சத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் இன்னும் ஜாதி அரசியல் நடந்துகொண்டிருக்கிறதா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே இப்படிப் பட்டவர்களின் ஜாதி அடையாள த்தைக் கண்டு, அதையே மூலதனமாக்கிக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்களை மக்கள் புறந்தள்ளிவிட்டனர், தோல்வியினுடைய பிரதிபலிப்பு என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல், ஊடகத் தோழர்களைப் பார்த்து, ஜாதி என்ன? என்று கேள்வி கேட்டதற்குபெரியார் பிறந்த மண் இத்தகையவர்களை ப் புறக்கணிக்கும்.

இனிமேல் எந்த ஊடகங்களாக இருந் தாலும், அவர்கள் ஜாதியைப்பற்றி பேசுவது, இன்னும் சிலர், அந்த ஊடகத் துறையில் இருக்கும் பெண்களைப்பற்றி கொச்சைப் படுத்துவது, நீதிமன்றத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டிருப்பது, பிறகு ஆட்சியாளர்கள் அவர்களைப் பாதுகாப் பது என்ற பழைய நிலை காரணமாகத்தான் இந்தத் துணிச்சல் வருகிறது. இந்த எண் ணமே இருக்கக்கூடாது. ஊடகத் தோழர்க ளுக்கும் இது நினைவில் இருக்கவேண்டும். அவர்களை நீங்களும் புறக்கணிக்க வேண்டும்.

செய்தியாளர்: ஊடகத் துறையிலேயே இப்படி அவர்கள் நடக்கும்பொழுது, மக்கள் மத்தியில் அவர்கள் எப்படி இருப்பார்கள்?

தமிழர் தலைவர்: மக்கள் அவர்களை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தீர்ப்பு.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களி டையே கூறினார்.

-  விடுதலை நாளேடு, 29.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக