பக்கங்கள்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

காந்தியார் படுகொலையும் பெரியாரின் எதிர்வினையும்

சு.குமாரதேவன்




இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் "தந்தை" என்று போற்றப்பட்ட காந்தியார் வி.டி. சாவர்க்கரால் மூளைச் சலவை செய்யப்பட்ட நாதுராம் வினாயக் கோட்சேவால் கொல்லப்பட்டார். அரசியலில் மதத்தைக் கலப்பது என்பது வாயகன்ற அகலப் பாத்திரத்தில் நிரப்பப்பட்டுள்ள பாலில் ஒரு சில துளிகள் விஷம் கலந்தால் மொத்த பாலும் விஷமாகி யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பதை உலக மக்கள் குறிப்பாக இந்திய மக்கள் அறிந்துகொண்ட நாள் ஜனவரி 30 என்று சொன்னால் அது உண்மைக் கலப்பில்லாத ஒரு சொல்லாகும். "ராம ராஜ்யம்" தேவையென்று காந்தியார் சொன்ன உட் கருத்து வேறு, ஆனால் கோட்சே முதல் ராம் கோபாலன் வரை சொல்லும் ராமராஜ்யம் என்பது வேறு . இதை இன்று வரை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களுக்குப் புரியவைப்பதுமான பணியை எந்த அரசியல் கட்சியையும், இயக்கத்தையும் விட திராவிடர் கழகம்தான் இன்று வரை புரிந்து கொண்டு காந்தியாரின் படுகொலைக்கு எதிர் வினையாக மதமும் அரசியலும் கலத்தல் கூடாது என்பதை அறிவுப் பூர்வமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

காந்தியார்  முகாமைப் பாராட்டினாரா?


இன்று நாம் பார்க்கும் தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகைகளில் வரும் சில கட்டுரைகள் போன்றவற்றில் வலதுசாரி சிந்தனையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் ஏதோ பாகிஸ்தான் பிரிந்ததற்கு காந்தியார் தான் காரணம் என்பது போலவும், கோட்சேவை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் மறைமுகமாகவும், வெளிப்படை யாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். நமக்கும் அடிக்கடி அதை கேட்பதினாலும், படிப்பதினாலும் அவை உண்மையாக இருக்குமோ என்கின்ற "கருத்து மயக்கம் " ஏற்படுவது இயல்பாகி சந்தேகமும் தோன்றும்.  காரர்கள் 1934ஆம் ஆண்டு காந்தியார்  முகாமிற்கு வந்தார் என்றும் அப்போது  ஸிஷிஷி-ன் பணிகளை பாராட்டினார் என்றும் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். அந்த பேச்சுக்கள் உண்மைதான் என்றாலும் உடனிருந்தே கொல்லும் வியாதி யாகத்தான் ஸிஷிஷி-யை காந்தியார் பார்த்தார் என்பதை 16.09.1947 அன்று காந்தியார்  உறுப்பினர்களிடையே பேசும் போது பொட்டில் அடித்தாற்போல் சில அறிவுரைகளை ஸிஷிஷி-க்கு சொன்னார். இந்துக்களிடையே ஒற்றுமை வளர்க் கும் எண்ணத்தை உருவாக்குவதாக சொல்லும்  ஸிஷிஷி தன் னுடைய பலத்தை மத நல்லிணக்கத்திற்காகவும் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் ஆகியவர்களின் ஒற்றுமைக்கு வழி வகை காணப்பயன்படுத்த வேண்டும் என்றும், சங்கத்தில் உறுப்பினர்கள் ஸிஷிஷி ஒழுங்காக நடந்துகொள்வதாக என்னால் உறுதி கூற முடியாது என்றும் சொன்ன காந்தியார்,  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுதல், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை பொய்யானவை என்று தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் ஸிஷிஷி நிரூபிக்கவேண்டும் என்றுக் கூறினார். மேற்படி கூட்ட முடிவில் கேள்விகள் கேட்கச் சொன்ன காந்தியார் அப்படி வந்த ஒரு கேள்விக்குப் பதில் கூறும் போது தீய செயல்கள் செய்பவர்களை கொன்றுவிட இந்து தர்மம் அனுமதிக்கிறதா? என்று கேட்க, தனிப்பட்ட யாரையும் தண்டிப்பது என்பது அரசாங்கத்தின் வேலையே தவிர தனிப்பட்ட நபர்களின் அல்லது மக்களின் வேலையல்ல என்று மேற்கண்ட கூட்டத்தில் ஆணித்தரமாக பதிலளித்தார். மேற்கண்ட கூட்டம் நடந்த காலம் என்பது இந்தியா - பாகிஸ் தான் என்று நாட்டு பிரிவினை நடந்து ஒருவருக்கொருவர் விரோதமாகவும், குரோதமாகவும் வெட்டிக்கொண்டும் கொலை செய்து கொண்டும் இருந்த காலம் அதிகபட்சமான இந்துக்கள் தரப்பில் மற்றவர்களை அரவணைக்கும் நோக்கம் பெருக வேண்டும் என்பதற்காக ஒருவருக்கொருவர் குரோதத்தை வளர்த்துக் கொண்டே சென்றால் அதற்கு முடி வில்லாமல் போய்விடும் என்பதும், பெரும்பான்மையினரான இந்துக்கள் சிறுபான்மையினரான மற்ற மத மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதும் காந்தியாரின் இறுதிக் கால நோக்கமாக இருந்தது.

காந்தியார் கொலையில் பங்கு பெற்றவர்கள்


ஆனால் காந்தியாரின் எண்ணத்திற்கு மாறாக இந்து மத வெறியர்கள் எங்கே காந்தியாரின் சொற்கள் மக்களை சென்றடைந்து ஒரு மத நல்லிணக்கம் உருவாகிவிடுமோ என்பதற்காகவும் அப்படி மத நல்லிணக்கம் உருவாகும் பட்சத்தில் தங்களின் சித்தாந்தமும் நோக்கமும் மக்களால் புறக்கணிக்கப்படும் என்ற அச்சத்தில் காந்தியைக் கொன்று விட முடிவு செய்திருந்தனர். அந்த முடிவுக்கு இந்து மத வெறியர்கள் தேர்ந்தெடுத்த கைகூலிகள்தான் வினாயக் கோட்சே, நாராயணன் ஆப்தே இவர்களை இயக்கும் மூளை வி டி. சாவர்க்கர். காந்தியார் படுகொலைக்கு எல்லா முமாக இருந்து உதவி செய்த நபர்கள் விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, டாக்டர்.பார்சுரே, சங்கர் கிஸ்தையா, திகம்பர் பாட்கே (அப்ரூவர்) கோபால் கோட்சே ஆகியோர் . காந்தியாரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, டாக்டர் பார்ச்சுரே வாங்கித் தந்ததாகும். காந்தியார் கொலையில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு திகம்பர் பாட்கேவின் வாக்கு மூலம் பெரிதும் உதவியாக இருந்தது . தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு இந்த வழக்கிற்கு (காந்தியார் கொலை) யார் மூலகாரணமாக இருந்தார்கள் என்பதை நீதிமன்றத்தில் அஞ்சாமல் எடுத்துரைத்தார். அந்த அப்ரூவர் சாட்சியத்தில் தயாத்ராவ் (சாவர்க்கர்) காந்தியார் கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோட்சேவும், ஆப்தேவும் சந்தித்தபோது ஆசீர்வாதம் வழங்கி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொன்னதை தான் கேட்டதாகச் சொன்னார். ஆனாலும் கூட விசாரணை நீதிமன்றத்தால் அந்தமான் சிறை கைதியாக இருந்து ஆங்கிலேயரிடம் மண்டியிட்டு பல மன்னிப்பு கடிதம் எழுதித்தந்த சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். இதில் இன்னொரு கொடுமை சாவர்க்கர் விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. இது மக்களுக்கு பலத்த சந்தேகங்களை உண்டாக்கியது. 15.11.1949 அன்று கோட்சேவும் ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டவுடன் எஞ்சிய குற்றவாளிகள் மூவர் மதன் லால் பா வா, கோபால் கோட்சே மற்றும் விஷ்ணு கார்க்கரே ஆகிய மூவரும் பதினான்கு ஆண்டுகள் சிறையிலிருந்து வெளிவந்தார்கள். வெளிவந்த மூவரில் இருவர் (விஷ்ணு கார்க்கரே மற்றும் கோபால் கோட்சே) தங்கள் செய்கை நியாயமானது என்று பல இடங்களில் கூட்டம் போட்டும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளிலும் பேசிவந்தனர். தவளை தன் வாயால் கெடும்" என்பது போல தாங்கள் செய்த செயலுக்கு சாவர்க்கார் துணையாக இருந்தார் என பல இடங்களில் கூறியது மட்டுமல்லாமல் அவரை வெகுவாகப் பாராட்டி சிலாகித்துப் பேசிவந்தனர். பொதுமக்களும் காந்தியார் கொலை செய்தியில் மறைந் துள்ள உண்மைகள் வெளிவராமல் போய்விட்டன என்று பகிரங்கமாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். சாவர்க்கரை விடுதலை செய்தது தவறு என்றும் அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் பேசினார்கள். ஆனால் 26.02.1962 அன்று சாவர்க்கர் இயற்கையாகவே மரணம் அடைந்தார். பின்பு இந்திரா அம்மையார் ஆட்சிக் காலத்தில் ஜீவன்லால் கபூர் என்கின்ற உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்துக் காந்தியார் கொலைக் கான உண்மை காரணம் ஆராயப்பட்டது. கிட்டத்தட்ட 407 ஆவணங்கள் மற்றும் 101 சாட்சிகள் ஆகியோரை பரிசீலித்தும், விசாரித்தும் காந்தியார் கொலையில் சாவர்க்கருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி அறிக்கையும் 1969ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பே சாவர்க்கார் மறைந்து விட்ட காரணத்தால் அவர்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாமல் போய்விட்டது.

பெரியார் காங்கிரசில் சேர்ந்து எப்படி?


தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டிருப்பதை அறிந்த டாக்டர்.வரதராஜுலு நாயுடு, ராஜ கோபாலச்சாரியார், திரு.வி.க. ஆகியோர் அவரை ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நேரத்தில் பார்த்து, பேசி காங்கிரசுக்கு அழைத்துவந்தார்கள். தந்தை பெரியாருக்கு காங்கிரஸின் தீண்டாமை ஒழிப்பு என்ற கொள்கை மிகவும் பிடித்திருந்தது. மேலும் தந்தை பெரியாருக்கு இயற்கை யாகவே ஜாதி மீது அபிமானம் இல்லாததால் தந்தை பெரியார் "காங்கிரஸ் ஜாதியை ஒழிக்கும்"  என்றும் அதுவும் "காந்தியார் ஜாதி ஒழிப்பிற்காக பாடுபடுவார்" என்றும் நம்பி காங்கிரஸில் சேர்ந்தார். காந்தியாரின் முரட்டு பக்தராக விளங்கிய தந்தை பெரியார் கிட்டத்தட்ட 29 பதவிகளை விட்டுவிலகி காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் விளைவாக முரட்டு கந்தை துணிகளை தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றும், தனது குடும்ப உறுப்பினர்களை கதர் அணியச் செய்தார். காந்தியாரின் நிருமாண திட்டங்களில் பங்குபெற்று இரவும் பகலுமாக காங்கிரஸை வளர்க்க அரும்பாடுபட்டார். திரு.வி.க. வாழ்க்கை குறிப்புகள், கோவை அய்யா முத்துவின் நினைவுகள் மற்றும் அக்கால தலைவர்களின் சுய சரிதை களில் பெரியாரின் காங்கிரஸ் ஆதரவு எவ்வளவு வேகமாக இருந்தது என்பதை அறியலாம். கள்ளுக்கடை மறியலில் தனது குடும்ப பெண்களை நாகம்மையார் தங்கை கண் ணம்மாள்) பங்குபெறச் செய்து வெற்றி கண்ட பெருமை பெரியாரை மட்டுமே சாரும். ஆனால் காந்தியார் வர்ணா சிரமக் காவலராகவும், பார்ப்பனர்கள் சொல்வதை அப்படியே கேட்கும் நிலையில் இருந்ததற்காகவும், தீண்டாமை ஒழிப் பிற்கு காட்டும் அக்கறையை ஜாதி ஒழிப்பிற்கு காட்டவில்லை என்பதற்காகவும், மன வருத்தத்தில் இருந்தார் தந்தை பெரியார். அனைத்து ஜாதியினருக்கும் பிரதி நிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற தனது தீர்மானம் நிறைவேறாமல் போய்விட்டதற்காக 1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட் டில் கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போதிலிருந்து "காங்கிரஸ் அழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும், மதம் அழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும் மற்றும் பார்ப்பனர் ஒழிய வேண்டும்" என்கின்ற அய்ந்து முழக்கங்களை முன் வைத்து "சுய மரியாதை" இயக்கத்தைக் கட்டமைத்தார். ஆனாலும் காந்தியாரின் கதர் கொள்கையினை சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த சிறிது காலம் வரை தொடர்ந்தார். காந்தியார் கொள்கைகள் மீது தான் அவருக்கு மாறுபாடும், வெறுப்பும் இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் காந்தியார் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் தந்தை பெரியார்.

காந்தியார் - பெரியார் சந்திப்பு


1927ஆம் ஆண்டு சர் ஆர்.கே.சண்முகம் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ) காந்தியாரை சந்தித்து பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தமிழ் நாட்டில் பார்ப்பனர் , பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சி வேகமாக பரவியிருப்பதையும் அதற்கான காரணங்களையும் சுவைபட விளக்கிச் சொன்னார். இந்த செய்திகளை எல்லாம் எப்படி ஆதாரபூர்வமாக பேசுகிறீர்கள் என்று ஆர்.கே. எஸ்சிடம் காந்தியார் கேட்க எல்லாம் உங்கள் முன்னாள் சிஷ்யரான ஈ.வெ. ராமசாமியிடம் தெரிந்து கொண்டவைதான் என பதிலளிக்க, காந்தியாரோ நான் ஈ.வெ.ரா.வை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதன்படி பெங்களூரில் முகாமிட்டு இருந்த காந்தியாரை முன்னாள் அமைச்சர் எஸ்.ராமநாதனுடன் சென்று பெரியார் சந்தித்தார். அப்போது பெரியார் காந்தியாரிடம் மூன்று செய்திகளை ஆழமாக வலியுறுத்தினார். அவை, காங்கிரஸ் ஒழிக்க பட வேண்டும், ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் அதற்கு இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டியது, பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும், என்று வலியுறுத்தினார். அதற்கு காந்தியார் சொன்ன சமா தானங்கள் பெரியார் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. உத்தமமான பிராமணர்கள் ஏன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என காந்தியார் வினவ பெரியார் அப்படி இந்தியாவில் யார் இருக்கிறார்கள் என திருப்பிக் கேட்டார். காந்தியார் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஏன் கோபால கிருஷ்ண கோகலே இருக்கிறாரே என்று சொல்ல மகாத்மா ஆன உங்களுக்கே இந்த பரந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே தெரியும் போது சாதாரண ஆத்மாவான எனக்கு எப்படி அவர் தெரிவார் என சொல்லி காந்தியாரை வாயடைக்கச் செய்தார். 1927-இல் இறுதியாக காந்தியாரிடம் பெரியார் சொன்ன கருத்து , இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு தேவை என்னும் போது உங்களை தூக்கிவைத்துக் கொண்டாடு கிறார்கள், நாளை அவர்களுக்கு தேவை இல்லை என்றால் உங்களைக் கொலை செய்யக் கூட அஞ்சமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வந்தார். பின்னாளில் அதான் நடந்தது. பின்பு 1929ஆம் ஆண்டு பெரியார் தவிர்த்த சுய மரியாதை இயக்கத்தின் நிர்வாகிகள் .ராமநாதன், குத்தூசி குருசாமி, ஜீவானந்தம் போன்றோர் சென்று காந்தியாரை சந்தித்து சுய மரியாதை இயக்கக் கொள்கைகளை எடுத்துச் சொல்லிவிட்டு வந்தார்கள்.

தமிழ் நாட்டில் காந்தியார்


காந்தியாருக்கு தமிழ் நாட்டின் மேல் அதிகமான பிரியமுண்டு, குஜராத்தி குடியானவனை போல் தலைப்பாகை நீளமான ஜிப்பா அணிந்த காந்தியார் மதுரையில் விவசாயி களை பார்த்து மேல் சட்டை அணியாமல் வாழக் கற்றுக் கொண்டார். "மோ.க. காந்தி" என்று தமிழில் அவர் கையெழுத் துப் போடுவதற்க்கு உதவியாக இருந்தவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மன உறுதி, வலிமையையும் தில்லையாடி வள்ளியம்மையிடம் இருந்து பெற்றதாக பல இடங்களில் காந்தியார் சொல்லியுள்ளார். சமூக சீர்திருத்த எண்ணங்கள் அதிகம் தோன்றுவது தமிழ்நாட்டில் என்ப தையும் அவர் ஒத்துக் கொண்டார் என்பதை அ.ராமசாமி எழுதிய "தமிழ் நாட்டு காந்தி என்ற நூலில் அறிந்து கொள்ளலாம்.

பெரியாரின் காந்தியக் கொள்கை எதிர்ப்பு


எந்த அளவிற்கு தந்தை பெரியார் காந்தியாரை ஆதரித்தாரோ அதே அளவிற்கு சற்றும் குறையாமல் அவர் கொள்கைகளை விமர்சனம் செய்தார். காங்கிரஸ், ராட்டை, கதர், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் நேர் எதிரான கருத்துக்களை கொண்டிருந்தது மட்டுமில்லாமல் அதை கடுமையாக எதிர்தும் பிரச்சாரம் செய்துவந்தார். "பூனா ஒப்பந்தம்" ஏற்படுவதற்கு முன்பு டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவாக நின்றார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. காந்தியாரின் நிர்மாண திட் டங்கள் குறிப்பாக ராமராஜ்யம், வர்ணாசிரம ஆதரவு நிலை ஆகியவற்றை பக்கம் பக்கமாக பெரியார் விமர்சித்து எழுதி வந்தார். 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தையும் காங்கிரஸின் அராஜக ப்போக்கையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார். காந்தியாராலும் அவரது கொள்கையாலும் நாடு முன்னேற்றம் அடையாது, அது பல நூற்றாண்டுகள் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் பெரியார் கூறினார். 1927 முதல் 1947 வரை காந்தியாரை விமர்சனம் செய்த தந்தை பெரியார் கோட்சேவால் காந்தியார் கொலை செய்ய பட்டவுடன் மிகுந்த துயரம் அடைந்து அதற்காக உளப்பூர்வமாக வருந்தினார்.

தன்னுடைய மனநிலை காந்தியார் கொலை நடந்த போது எவ்வாறு இருந்தது என்பதை அன்று கீழ்க்கண்டவாறு தந்தை பெரியார் பதிவு செய்கிறார்.

1927 அன்று தான் காந்தியா ரை பெங்களூருவில் சந்தித்த போது காந்தியாரை பார்ப்பனர்கள் கொலை செய்து விடுவார்கள் , என்று சொன்னது உறுதியாகிவிட்டதே என்று எண்ணி கலக்கமுற்ற பெரியார், காந்தியார் இறந்த போது வன்முறை பரவி விடக் கூடாது என்று மிகுந்த அக்கறை கொண்டார் . காந்தியாரை கொலை புரிந்த படுபாதக செயல் புரிந்த காவி கட்சியினர் காந்தியாரை ஒரு முஸ்லிம் நபர்தான் கொன்றுவிட்டார் என புரளியை பரவவிட்டனர் மேலும் திருப்பூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பள்ளப்பட்டி மற்றும் வாணியம்பாடி ஆகிய ஊர்களில் இருந்த முஸ்லிம் களின் உடைமைகளை கொள்ளையடித்தும், தீக்கிரையாக் கியும் அக்கிரமம் செய்தார்கள். இந்த வன்முறை தமிழகம் எங்கும் பரவி விட கூடாது என்ற எண்ணம் மனித நேயம் மிக்க தந்தை பெரியாரிடம் இருந்தது. எனவே பெரியார் கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டார்.

"காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற சேதி யானது, எனக்குக் கேட்டதும் சிறிது கூட நம்ப முடியாத தாகவே இருந்தது . இது உண்மைதான் என்ற நிலை ஏற் பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்கு திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்கு ஆகப்பாடு பட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச்செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையேயாகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாக நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.

மகாராஷ்டிராவும் தமிழ்நாடும்


காந்தியாரைக் கொன்றது ஒரு சித்பவன் பார்ப்பனர் என்று தெரிந்தவுடன் மகராஷ்ராவில் பல பார்ப்பனர் குடி யிருப்புகள் தாக்கப்பட்டன. பார்ப்பனர்களை காங்கிரஸில் சேர்க்கக் கூடாது என தீர்மானம் போட்டார்கள் ஆனால் பார்ப்பனர் எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்ற தமிழ் நாட்டில், தந்தை பெரியார் இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அப்படி எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது இல்லை. இது ஒன்றே தந்தை பெரியார் தனது இயக்கத்தை எவ்வாறு அறிவு இயக்கமாக மாற்றியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழ் நாட்டில் வன்முறை பரவக் கூடாது என்று நினைத்த தந்தை பெரியாரை கண்டுகொள்ளாமல் இருந்த வானொலி நிலையத்தார் தந்தை பெரியார் தங்கியிருந்த திருச்சிக்கே சென்று அவரது இரங்கல் உரையினை பதிவு செய்து 04.02.1948 அன்று ஒலி பரப் பினார்கள். இதன் மூலம் சமூகப் பதற்றம் தணிந்து தமிழ் நாட்டில் அமைதி நிலவியது. காவி கூட்டத்தினரின் கலவரத் திட்டம் பெரியாரின் ஒரு பேச்சால் தவிடு பொடியானது. தந்தை பெரியார் தன்னுடைய அறிக்கையில் காந்தியார் படுகொலையினை கடுமையாகக் கண்டித்து இந்த நாட்டிற்கு "காந்தி தேசம் அல்லது "காந்திஸ்தான் என பெயர் வைக்க வேண்டும் என கூறினார். கீழ்க்கண்டவாறு அவரது கருத்து அமைந்தது.

"காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது நிரந்தரமானதாகவும், அதிசயமான பயனுள் ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை.

1. இந்தியாவுக்கு ஹிந்துஸ்தான் என்கிற பெயருக்குப் பதிலாக காந்தி தேசம் அல்லது காந்திஸ்தான் என்ற பெயரிடலாம்.

2. இந்து மதம் என்ப தற்குப் பதிலாக காந்தி மதம் அல்லது காந்தினிசம் என்பதாக மாற்றப்படலாம்.

3. இந்துக்கள் என்பதற்குப் பதிலாக மெய்ஞானிகள் அல்லது சத்ஞானஜன் என்று பெயர் மாற்றப்படலாம்.

4. காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு. வர்ணாஸ்ரம தர்மமுறை அநுசரிக்கப்பட மாட்டாது ஞானமும் (அறிவும்) பக்ஷமும் என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிருஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக காந்தி ஆண்டு என்று துவக்கலாம்."

காந்தியார் மறைவிற்கு தமிழ் நாடு முழுவதும் 29.02.1948 அன்று அனுதாப கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் , ஆடம்பர மற்றும் அதிக செலவு இல்லாமல், பேச்சாளர்கள் யாரும் பேசாமல், காந்தியார் கொலையை பற்றி மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அனைவரும் மவுன  அஞ்சலி செலுத்திவிட்டு கலைந்து சென்று விட வேண்டும் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார். தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18 வது மாநில மாநாட்டில் பெரியார் பேசும் போது "இருந்தவர் ஆரிய காந்தி, இறந்தவர் திராவிட காந்தி" என்று அவர் பேசிய பேச்சு 15.05.1948 மற்றும் 25.05.1948 அன்று வெளியான குடியரசு இதழில் பதிவு செய் யப்பட்டுள்ளது. மேற்படி பேச்சு கீழ்க்கண்டவாறு அமைந்தது.

"காந்தியார் உயிரோடிருந்தவரை அவருடைய போக் கைப் பெரும் அளவுக்குக் கண்டித்து வந்த எனக்கு, காந் தியார் மறைவுக்கு துக்கப்படவோ, அவரது மறைவுக்குப்பின் அவரைப் பற்றி புகழ்ந்து பேசவோ என்ன உரிமை யுண்டென்று சிலர் கேட்கலாம். சில காங்கிரஸ்காரர்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே நான் இவ் விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதியிருக்கலாம். ஆனால் தோழர்களே! இவை உண்மையல்ல காந்தியார் மறைவுக்கு ஆக எந்தக் காங்கிரஸ்காரர் துக்கப்பட்டார் ? அழுதார்...?

இருந்த காந்தியார், ஆரிய காந்தியார் ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தியார் , நம் எதிரிகளின் காந்தியார். ஆனால் இறந்த காந்தியார் நம் காந்தியார் ஆரியம் அழிந்து விடுமே என்று பயந்து ஆரியரால் கொல்லப்பட்டு கொலை யுண்ட காந்தியார். அதனால்தான் மற்றவர்களை விட நமக்கு தான் அவர் மறைவுக்காகத் துக்கப்படவும் உரிமையுண்டு என்றும் கூறிக்கொள்கிறோம்.

காந்தியார் மேலும் அவர் கொள்கைகள் மேலும் கடும் விமர்சனத்தை வைத்திருந்த தந்தை பெரியார் அவற்றை விமர்சனமாக மட்டுமே பார்த்தாரே தவிர தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு எதிரான ஒரு வெறுப்பாக அவர் பார்க்கவில்லை. இதுதான் தந்தை பெரியார் கொண்டிருந்த மனிதநேயம் ஆகும். சக மனிதனை, மதவெறி எப்பேற்பட்ட மனிதராக இருந்தாலும் கொன்றுவிடும் என்பதற்கு காந்தியார் ஒரு உதாரணம் என்றால் அப்படிபட்ட மதவெறியினை ஒழித்து நல்லிணக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவது பெரியார் எனும் பெருநெறி என்று தாராளமாக நாம் சொல்லலாம்.

-  விடுதலை நாளேடு, 30.1.19

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

கன்னிகாதானம்போல் புத்திர தானம் உண்டா?

தஸ்லிமா நஸ்ரீன் எழுப்பியுள்ள பகுத்தறிவுக் கேள்வி




எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவரு டைய எழுத்தின் காரணமாக இசுலாமிய அடிப்படைவாதிகளால் தண்டனைவிதிக் கப்பட்டவர். வங்கதேசத்திலிருந்து வெளி யேறி, அடைக்கலமாக இந்தியாவில் வசித்து வருபவர்.

அவர் எந்த மத அடிப்படைவாதத்தை யும் ஏற்காமல், சுதந்திரமாக தன்னுடைய கருத்தை வெளியிட்டுவருபவர். அவரு டைய டிவிட்டர் பக்கத்தில் இந்துமதத்தி லுள்ள பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தந்தை தன் மகளை மணமகனுக்கு பரிசுப்பொருளை அளிப்பதைப்போல் அளிப்பது கன்னிகாதானம் என்று உள்ளது. பரிசாக அளிக்கப்படுகின்ற ஒரு பொருளாக ஒரு பெண்ணை எப்படி கருத முடியும்? கன்னியாதானம் போல், புத்திரதானம் என்று எந்த சடங்கும் இருக்கிறதா? இல்லையே.

மனித சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும். திருமணம் என்பது வயதுக்கு வந்த மனிதர்களில் இருவரை, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இணைப்பது என்று பொருள் ஆகும்.

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19

மதநம்பிக்கை என்று சும்மா இருந்திருந்தால் இந்த மாற்றங்கள் வந்திருக்குமா?



பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளு த்திக் கொல்லுவது இந்துமத நம்பிக்கை என விட்டிருந்தால், உடன்கட்டை தடுப்புச்சட்டம் வந்திருக்குமா?

குழந்தைத் திருமணம் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பால்ய விவாக தடுப்புச் சட்டம் வந்திருக்குமா?

வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்னும் உரிமை கிடைத்திருக்குமா?

கணவன் இறந்தால், மனைவிக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்காரவைப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா?

மொட்டைப் பார்ப்பனத்தி என்ற நிலை தான் மாறியிருக்குமா?

பெண்களுக்குப் பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா?

பார்ப்பனர் அல்லாதோர் படிக்கக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், நாட்டின் பெரும்பான்மை யான மக்கள் படித்திருக்க முடியுமா?

சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத் தக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்துப் பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம் வந்திருக்குமா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெ தற்கு என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பெண் கல்வி சாத்தியப் பட்டிருக்குமா?

திருமணம் முடிந்த பெண், முதல் நாள் பார்ப்பன நம்பூதிரியுடன்தான் முதலிரவைக் கழிக்க வேண்டும் என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த இழி பழக்கம் மறைந்திருக்குமா?

ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தீண்டாமைத் தடை சட்டம் வந்திருக்குமா?

ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு,  எங்கள் கோவிலினுள் நுழை யாதே என்று  மக்களின்  ஒரு பிரிவினரைத் தடுப்பது  இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், அனைத்து ஜாதிக்கும் ஆலய நுழைவுசாத்தியப்பட்டிருக்குமா?

பார்ப்பனர்கள் கடல்தாண்டி போகக் கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால்,இன்றைய நிலையில் லட்ச கணக்கான  பார்ப்பனர்கள் வெளிநாடு களில் வசிக்க, வேலைசெய்ய முடியுமா?

உலகம் தட்டையானது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், உலகம் உருண்டையானது என்பது நிரூபிக்கப் பட்டிருக்குமா?

பூமியைத்தான் சூரியன் சந்திரன் போன்றவை சுற்றிவருகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அறிவியல் வளர்ந்திருக்குமா?

ராகு - கேது என்ற பாம்புகள் சூரியனை யும் சந்திரனையும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், வான்வெளி அறிவு வளர்ந்திருக்குமா?

பிரார்த்தனைசெய்தால் குணமாகும் என்பது இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், மருத்துவ அறிவியல் வளர்ந் திருக்குமா?

தமிழ் நீசபாஷை, தமிழில் கடவுளை வழிபடக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தமிழ் அர்ச் சனை என்னும் சட்டம் வந்திருக்குமா?

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று மின்சார விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது 'ஆகம விதி'?

48 நாள் விரதமிருந்த உங்களது கன்னிச் சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி, அன்று மாலையே சாராயக்கடைக்கு மலையேறும் போது எங்கே போனது 'உங்க ஆகம விதி?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ. களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு செல் போன்களை அனுமதிக்கிறது ?



இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் "ஆகம விதி" மதநம்பிக்கை பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் மதவாதி கள் இன்றும் பெண்களை தங்களின் அடி மைகளாக வைத்திருக்க முயன்றுகொண்டு இருக்கின்றனர் என்றுதானே பொருள். அதற்குச் சில பெண்களும் பெண் அரசியல் தலைவர்களும் அரசியல் லாபத்திற்காகத் துணை போகின்றனர் என்பதும் கவலைக் குரியதே, இருப்பினும் அவர்களின் போலி மதச்சாயமும் வெளித்துவிட்டது, பெண்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.

மதப்பயம் காட்டி அடக்கிவைக்க இது பழைய காலம் இல்லையப்பா, நாங்கள் தாடிக்காரர் பேத்தி, அடக்கி வைத்த காலம் போச்சு என்று பெண்கள் பாடும் காலம் வந்தாச்சு.

- க.அன்புமதி - அருள்மதி

-  விடுதலை ஞாயிறு மலர், 5.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

இந்து மதத்தின் புதிர்கள்

பேராசிரியர் மு.நாகநாதன்




பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறிகளை நடைமுறைப் படுத்துவதற்கும் பெரும் தடையாக உள்ளது என்பதற்குத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளார்.

புதிர் 22இல் (Riddle-22) -இவரின் கருத்துகள், கடந்த 4 1/2 ஆண்டு மதவாத பாஜக ஆட்சியில் நடந்த மானுட கொடுமைகளால் நூற்றுக்கு நூறு, மெய்ப்பொருளானது.

அண்ணல் அம்பேத்கர்:

"நல்ல அரசு என்றால் நல்ல சட்டங்களும், நல்ல நிர்வாகமும் தேவை. இது தான் நல்ல அரசின் சாரம் ஆகும். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கீழ் நிலையில் இருக்கும் மக்களும் பெரும்பான்மையான மக்களும் பயன் பெறாத வகையில் ஆளும் அதிகாரத் தைத் தங்களின் வகுப்பு நலனுக்காக வைத்திருக்கும் போது நல்ல அரசாகத் தற்போது இருக்கமுடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

(Good Government means good laws and good administration. This is the essence of good Government. Nothing else can be.
Now there cannot be good Government
in this sense, if those who are invested with ruling power seek the advantage of their own class instead of the advantage of the whole people or those who are downtrodden--)
(Riddles in Hinduism- Dr.Babasahep Ambedkar--
Writings And Speeches vol 4-page 282) fraternity.


பிரெஞ்சுப் புரட்சியின் போது வலியுறுத்தப்பட்ட சகோதரத்துவம் தான் ஜனநாயகத்தின் வேர்.

சமத்துவம் என்ற சொல் அதன் முழுமையான உட்பட்ட பொருளை எடுத்துக்காட்டவில்லை. அதனால்தான் சரியாக மைத்திரி -( சமத்துவத்தின் முழு பொருளில்)- என்று புத்தர் குறிப்பிட்டுள் ளார்.இன்றும் இலங்கையில் மைத்திரி பாலா என்ற பெயரை சூட்டுகின்றனர்.

(What French Revolutionisits called fraternity.The word fraternity is not an adequate expression. The proper term is what the Buddha called, Maitree. Page 283)

இலங்கையிலும் இந்தியாவைப் போன்றே மைத்திரி ஏட்டளவில் தான் உள்ளது. நாட்டளவில் இல்லை.

அம்பேத்கர் மேலும் விளக்குகிறார்.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் வளரவில்லை. இதற்கான பதில் எளியது.

இந்து மதம் சகோதரத்துவத்தைக் கற்பிக்கவில்லை.

அதற்குப் பதிலாக சமூகத்தை ஜாதி வர்ணங்கள் அடிப்படையில் பிளவைக் கற்பிக்கிறது.

வகுப்பு உணர்வைத் தனியாக நிலைப் பெறச் செய்கிறது.

இத்தகைய அமைப்பில் ஜனநாயகத்திற்கு இடம் இல்லை.

இந்து சமூக அமைப்பு விபத்தின் காரணமாக ஜனநாயகத்தை இழக்கவில்லை.

ஜனநாயகம் இருக்கக் கூடாது என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

(Why did democracy not grow in India?
The answer is simple .
The Hindu religion does not teach fraternity.
Instead it teaches division of society into classes or varnas and the maintenance of separate class consciousness.
In such a system where is the room for democracy.
The Hindu social system is undemocratic
not by accident. It is designed to be undemocratic.
(page- 285)


இன்று மோடி அரசில் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில், மய்ய வங்கியில், மத்திய புலனாய்வு துறையில் செய்யப்படும் குறுக்கீடுகள், இட ஒதுக்கீடு கொள்கையில் உயர் வகுப்பினருக்கு அவசரமாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளைத் திணிப்பதில் காண்பிக்கும் அவசரம் எல்லாம் யாருக்காக?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது நாட்டுத் துரோக வழக்கைப் பதிவு செய்தது எதற்காக?

சமத்துவம் ஜனநாயகம் என்பது எல்லாம் உயர் வகுப்பு, உயர் வர்க்க நலன்களுக்காக என்பதைத் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உணர்ந்து களம் அமைத்தனர். போராடினர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமானது.

அதன் அடிப்படைக் கட்டமைப்பை (Basic Structure) பாதுகாக்கவேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர்.

இவர்கள் யார்?

இந்து சனாதனம் தான் இந்திய சமூகத்தின் கட்டமைப்பு என்பவர்கள்.

இந்து சனாதனம் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாகவும் செயல்படுகிறது.

ஜனநாயகம் ஒரு சிலரின் கையில் தான் உள்ளது என்பதை 24 இந்து மதப் புதிர்களில் அறிவோடு சான்றுகளோடு அறிஞர் அம்பேத்கர் மெய்ப்பித்துள்ளார்.

இதனால் தான் பெரியார் 1957 ஆம் ஆண்டிலேயே சனாதனத்தைக் காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தனது 80ஆம் அகவையில் தீயிட்டார். சிறை தண்டனையும் பெற்றார்.

அறிஞர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் செய்த புரட்சியைப் படித்து ஆய்ந்து, தெளிந்து இளைஞர்கள் களமாட வேண்டும்.

- விடுதலை நாளேடு, 24.1.19

சனி, 5 ஜனவரி, 2019

கட்சிகள் என்றால் என்ன?

கேள்வி: கட்சிகள் என்றால் என்ன?


விடை: நல்ல லட்சியங்களைச் சொல்லி; ஜனங்களை ஏமாற்றி; தங்கள் வசம் செய்து; சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிர கட்சி, தேசியக் கட்சி முதலிய பல கட்சிகள்.

கேள்வி: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?

விடை: சேராது!

கேள்வி: ஏன்?

விடை: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக் கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

- விடுதலை நாளேடு, 5.1.19

யார் சமதர்மவாதி

பொன்மொழிகள்


ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங் களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

- தந்தை பெரியார் பொன்மொழி

- விடுதலை நாளேடு, 5.1.19