பக்கங்கள்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

திருச்சபை திருந்துகிறது

வாடிகன், ஆக.6_ மணவிலக்கு பெற்று கத்தோலிக்கத் திருச் சபைக்கு வெளியே மறு மணம் செய்துகொண் டவர்கள் மீது பெரிய அளவில் கருணைகாட்ட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கிறிஸ்தவப் பாதிரிமார்களிடம் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபை யில் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார்
அப்படி மறுமணம் செய்துகொண்ட இணை யரை திருச்சபையில் இருந்து நீக்கி வைக்கக் கூடாது என்றும் அவர் களின் பிள்ளைகள் தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர் கள் என்று கருதும் நிலை ஏற்படக்கூடாது என்றும் போப் பிரான்சிஸ் வலியு றுத்தியுள்ளார்.
கத்தோலிக்கத் திருச் சபையின் பார்வையில் மணவிலக்கு பெற்றவர் களின் முதல் திருமணம் தொடர்ந்து நீடிப்பதா கவே பார்க்கப்படுகிறது என்பதால் மணவிலக்கு பெற்றவர்கள் தேவாலயங் களின் நற்கருணையை பெற முடியாத சூழல் உள்ளது.
முற்போக்கு கருத்துக் களை கொண்டுள்ள ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் மாற்றங்கள் தேவை என கூறி வருவ தாகவும், தானும் இந்த விஷயத்தில் நெகிழ்வுத் தன்மையை ஆதரிப்பதாக வும் போப் பிரான்சிஸ் சில குறிப்புகளை வெளி யிட்டு வந்தார் என செய் தியாளர்கள் கூறுகின்றனர்.
-விடுதலை,6.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக