பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தர்மம் - ராகுலசாங் கிருத்தியாயன்

Image result for ராகுல் சாங்கிருத்யாயன்
தர்மம்! அது ஓர் ஏமாற்று என்றே நான் நினைக்கிறேன். பிறருடைய  உழைப்பின் பலனை அபகரிப்பவர்கள் அமைதியோடு அந்தப் பொருள்களை அனுபவிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே இந்த தர்மம் சிருஷ் டிக்கப்பட்டிருக்கிறது.
தரித்திரர்களைப் பற்றியோ, பலவீனர்களைப் பற்றியோ இந்த தர்மம் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறதா? விரிந்த இந்த உலகத்திலே தர்மத்தை அங்கீகரிக்காத மனித சாதியே கிடையாதென சொல்லலாம். ஆனால் அவர்கள் அடிமைகளும் மனிதர்கள்தான் என்று எப்பொழுதாவது நினைத்ததுண்டா?..
இந்தப் பெண்களுடைய வாழ்க்கை அடிமைகளைப் பார்க்கிலும் உயர்ந்ததாகவா இருக்கிறது? ஆனால் தர்மம் இதை அங்கீகரிக்கிறது.  சரி என்ற சொல்லுக்கு மதம் சொல்லும் பொருளை நான் கொள்ளவில்லை; களங்கமற்ற மனித மனம் கொள்ளும் பொருளையே நான் ஏற்கிறேன்.


- வால்காவிலிருந்து கங்கை வரை நூலிலிருந்து ராகுலசாங் கிருத்தியாயன். தகவல்: மின்அணு
-விடுதலை,13.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக