பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

புரட்சி ஏன் தோன்றவில்லை?


இந்தியாவில் மட்டும் ஏன் சமூகப் புரட்சிகள் உண்டாகவில்லை? இதைப் பற்றி நான் வெகு நாள் யோசனை செய்தேன்.
இந்த கேள்விக்கு ஒரே ஒரு விடை தான் எனக்கு கிடைத்தது. அதாவது சதுர்வர்ணீயக் கொடுமையினால் (நால்வகை சாதி அமைப்பு) பாமர மக்கள் பலக்குறை வினராக்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்குப் புரட்சி செய்ய ஆற்றல் இல்லை, அவர்கள்  ஆயுதந்தாங்க முடியாது; ஆயுதமின்றி புரட்சியில் வெற்றி பெற முடியாது.
அவர்கள் எல்லாம் உழவர்கள்; ஏரைக்கட்டி அழவேண்டுமென்று  கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். கொழுவை - வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை; உரிமையில்லை. சதுர்வணீயக் கொடுமையினால் அவர் களுக்கு கல்வி கற்கவும் முடியவில்லை. மோட்சத்துக்கு வழிதேடவோ அறியவோ, அவர்களால் முடியவில்லை.
எந்நாளும் அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்று அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலை பெற வழி தெரியாமல் அடிமை வாழ்வு போதுமென்று திருப்தி அடைந்துவிட்டார்கள். சதுர்வர்ணீயத்தைப் போல் மானக்கேடானது வேறு இல்லவே இல்லை. அது மக்களை முயற்சியற்றவராக்கி விட்டது.
டாக்டர் அம்பேத்கர்
(சாதியை ஒழிக்க வழி - பக்கம் 67)
-விடுதலை,13.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக