பக்கங்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

கோயிலுக்கு செல்ல முயன்ற தாழ்த்தப்பட்ட முதியவரை உயிரோடு எரித்துக் கொன்ற கொடுமை

கான்பூர், அக்.2_ உத் தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரிலிருந்து சுமார் 140கி.மீ. தொலைவில் ஹமீர்பூர் மற்றும் ஜலான் மாவட்டத்தில் பிலாகான் உள்ளது. அங்குள்ள மைதானி பாபா கோயிலில் வழி படுவதற்காக சென்ற தாழ்த் தப்பட்ட 90 வயதான முதியவர் ஜாதி வெறியர் களால் தடுத்துநிறுத்தப் பட்டார். மேலும், அவர் கோடரியால் தாக்கப்பட் டும், தீ வைத்து எரிக்கப் பட்டும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான சிம்மா (90) தன் மனைவி மற்றும் மகன் துர்ஜான் ஆகியோருடன் செல்ல முயன்றார். அப்போது சஞ்சய் திவாரி என்பவன் அவ ரைத் தடுத்து நிறுத்தி னான்.ஆனால், அவர் அதைப் பொருட்படுத்த வில்லை. சஞ்சய் திவாரி கோடரியால் அவரைத் தாக்கினான். அப்போது அவரை விட்டுவிடுமாறு அவர் மனைவி கதறினார். ஆனாலும், திவாரி விடா மல் தொடர்ந்து தாக்கி, சிம் மாமீது மண்ணெண் ணெயை ஊற்றி தீவைத்து எரித்துவிட்டான். அவர் அதே இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார்.

பிலாகான் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராள மானவர்கள் முன்னிலை யில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. அவரைத்தாக்கி எரித்த திவாரியை அங்கே கூடி யிருந்தவர்கள் சுற்றி வளைத்துப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவன்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவனைக் கைது செய் தனர்.

அப்பகுதியில் இருந் தவர்கள் அவன் அப்போது அதிகமாகக் குடித்திருந் தான் என்றனர்.

அப்பகுதியைச் சேர்ந் தவரான அமெரிக்க, இந்திய வர்த்தக குழுவின் தலைவர் முகேஷ் அகி கூறுகையில்: திவாரி மற்றும் அவனுக்கு உதவியதான இருவர் பெயரும் வழக்கில் பதி வாகி உள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்றார்.
-விடுதலை,3.10.15
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக