பக்கங்கள்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

அறிஞர் ஆபிடுயூபே கூறிய ‘‘Double Tongue’’ ஆரியம்!


பல்டியடிக்கும் பாசிஸ்டுகள் (கட்டுரையின் ஒரு பகுதி)
மின்சாரம்
அறிஞர் ஆபிடுயூபே கூறிய ‘‘Double Tongue’’ என்ற அர்ச்சனைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’’ என்று அவருக்கே உரித்தான அழகு தமிழில் படம் பிடித்துக் காட்டினார் - ‘ஆரிய மாயை’ என்னும் அசைக்க முடியாத ஆதாரச் சரக்குகளைக் கொண்ட அந்த அரிய நூலில்.
அந்த நூல் தடையும் செய்யப்பட்டது - அந்த நூலுக்காக அறிஞர் அண்ணா அவர்களுக்கு 700 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் வரலாற்றுக் குறிப்பாகும்.
1943 ஆம் ஆண்டிலேயே வெளிவந்த அந்த நூல் ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1950 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. (153-ஏ பிரிவு சட்டப்படி) அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் ‘பொன்மொழி’ நூலுக்கும் தடை - தந்தை பெரியார் அவர்களுக்கும் அதே தண்டனை என்ப தெல்லாம் நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய - திராவிடர் இயக்கத் தீரத்தைக் குறித்த ‘தித்திக்கும்’ அத்தியாயங்கள்!
அறிஞர் ஆபிடுயூபே அப்படி என்னென்னதான் கூறினார்? தெரிந்து கொள்ள ஆர்வம்தானே இருக்கச் செய்யும்.
இதோ:
1807 ஆம்  ஆண்டில் ஆபிடுயூபே ஆரியம்பற்றி இவ்வாறு அடுக்கி யதைத்தான் அண்ணா அவர்கள் 1943 ஆம் ஆண்டில் எடுத்துக்காட்டினார்.
ஏதோ இனம் தெரியாத வெறுப்புணர்வால் அல்ல - இனவெறுப்பின் எதிரொலியும் அல்ல - பகையுணர்ச்சியும் கிடையாது. பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதாரை எப்படியெல்லாம் இழித்துப் பழித்து எழுதி வைத்துள்ளனர்- நடத்துகின்றனர் என்பதால் ஏற்பட்ட தன் மான உணர்ச்சியின் உந்துதல்தான் திரா விடர் இயக்கம் பார்ப்பனர்களைப் படம் பிடித்ததும் - பிடித்துக் காட்டுவதுமாகும்.
-விடுதலை ஞா.ம.,28.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக