பக்கங்கள்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

25 ஆண்டுகளில் 1,200 ‘கடவுளர்' சிலைகள் திருட்டு உயர்நீதிமன்றத்தில் அறநிலைய துறை தகவல்


சென்னை, ஜன.26 தமிழகத்தில், 25 ஆண்டுகளில், 1,200 ‘கடவு ளர்'சிலைகள்திருட்டு போயுள் ளன;  சிலைகளை, கண்டுபிடிக்க முடியவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில், அறநிலை யத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிலை கடத்தல் வழக்கு களை, நீதிபதி, மகாதேவன் விசாரிக்கிறார். மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை, கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றவும், அய்.பி.எஸ்., அதிகாரி, பொன்.மாணிக்கவேல் தலை மையிலான குழு, சிலை கடத்தல் புகார்களை விசா ரிக்கவும், நீதிபதி உத்தரவிட்டி ருந்தார். சிலை கடத்தலை தடுக்க, அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி, மகாதேவன் முன், நேற்று (25.1.2018) மீண்டும் விசார ணைக்கு வந்தது. இந்துசமய அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர், மகாராஜா ஆஜரானார். அறநிலையத் துறை ஆணையர், ஜெயா தாக்கல் செய்த கூடுதல் அறிக்கை வருமாறு:
கோவில்களில், சிலைகள் திருடு போவது குறித்து, அற நிலையத் துறை கவலை கொள்கிறது.  -
சிலைகளை பாதுகாக்க வும், கோவில்களின் உள்ள மதிப்புமிக்க பொருட்கள் திருடு போவதைத் தடுக்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. காவல் துறை, சிலை தடுப்பு துறையுடன், அறநிலையத் துறை ஒருங் கிணைந்து செயல்படுகிறது. திருட்டுப் போவதை தடுப்பது தான், அறநிலையத் துறையின் நோக்கம். சிலை தடுப்பு பிரி வுக்கும், அதிகாரிகளின் புல னாய்வுக்கும், அறநிலையத் துறை தேவையான ஒத்து ழைப்பை வழங்குகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவு களை பின்பற்ற, அனைத்து நடவடிக்கைகளையும் துறை எடுக்கிறது. சிலை தடுப்பு பிரிவுக்கு, சட்டத்துக்கு உட் பட்டு, அனைத்து ஒத்துழைப் பையும் வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை, 29 ஆம் தேதிக்கு, நீதிபதி, மகாதேவன் தள்ளி வைத்தார்
-விடுதலை, 26.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக