பக்கங்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2018

விவேகானந்தர்?

விவேகானந்தர் அமெரிக் காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை பிரபலமாக் கப்பட்ட ஒன்றுதான். அதன் 125ஆம் ஆண்டையொட்டி இராம கிருஷ்ண மடம் சிறு கதைப் போட்டியை அறிவித் துள்ளது. போட்டியில்  வந் துள்ளது.

விவேகானந்தர் பார்ப் பனர்கள் பற்றியும், ஜாதி வருண தர்மம் பற்றியும்கூட ஏராளமாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.

அதையும் கொஞ்சம் கேட்கலாமே!

"ஏ பிராமணர்களே, பரம் பரை காரணமாக பிராமணர் களுக்குக் கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால், பிராம ணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக் காதீர்கள்; எல்லாவற்றையம் கீழ் ஜாதியினருக்காகச் செல விடுங்கள். உதவியற்றவர் களுக்குக் கொடுங்கள். ஏனெ னில் அவர்களுக்குத்தான் எல்லா செல்வமும் தேவைப் படுகிறது. பிராமணன் பிறவி யிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவியிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும், ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும், பகுத்தறிவுமாகும்." (பக்கம் 139,140 ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு - 'கொழும்பு முதல் அல்மோராவரை').

மேலும் 1901 மார்ச் 31ஆம் நாள் டாக்காவில் பகோஜ் பள்ளியின் திறந்தவெளி மைதானத்தில் விவேகானந்தர் பேசியதின் கடைசிப் பகுதி என்னவென்றுப் பார்ப்போம். "பிராமணர்களுக்கு ஒரு வார்த்தை: உங்கள் குலப் பெருமையும், பாரம்பரியப் பெருமிதமும் வீணே. அதை விட்டொழியுங்கள். உங்கள் சாஸ்திரத்தின்படி  பார்த்தால் இப்போது உங்களிடம் பிரா மணத்துவம் இல்லை. ஏனெ னில் நீண்ட காலமாக நீங்கள் மிலேச்ச அரசின்கீழ் வாழ்ந்து விட்டீர்கள், உங்கள் முன் னோரின் வார்த்தைகளில் உங் களுக்கு  நம்பிக்கையிருக்குமா னால், இந்தக் கணமே தூஷாக்கினியில் (உமியைக் குவித்து வைத்து மூட்டுகின்ற தீ) பிரவேசித்து உங்கள் பாவத்திற்குப் பிராயசித்தம் செய்து கொள்ளுங்கள். குமா ரில பட்டர் அதையே செய்தார். பவுத்தர்களை ஒழிக்க அவர் விரும்பினார். எனவே முதலில் பவுத்தர் ஆனார்.

பின்னர் பலரை வாதத்தில் வென்றார்; பலரது மரணத் திற்குக் காரணமானார். தமது பாவங்களைக் கழுவுவதற்காக துஷாக்கினியில் வீழ்ந்து உடலை மாய்த்துக் கொண்டார். அதற்கான நெஞ்சத் துணிவு உங்களுக்கு இல்லாவிடில் உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள், எல்லோ ருக்கும் உதவிக்கரம் நீட் டுங்கள், அறிவின் கதவைத் திறவுங்கள். தாழ்த்தப்பட்ட பாமர மக்களின் நியாயமான உரிமைகளையும், சலுகை களையும் மீண்டும் ஒரு முறை வழங்குங்கள்." (அதே நூல் பக்கம் 583).

எந்த விவேகானந்தர் மடம் விவேகானந்தருக்காகப் போட்டி நடத்துகிறதோ, அதே விவேகானந்தர் மடம் வெளி யிட்ட நூல்களிலிருந்துதான் இவை! சிந்திப்பீர்!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 22.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக