பக்கங்கள்

வெள்ளி, 4 அக்டோபர், 2019

சிந்தனைத் திரட்டு

அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததை பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.

பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பிப் பின்பற்றமாட்டான்.

கடவுள் நம்பிக்கைகூட மனிதனுக்கு அநேகமாய்ப் பேராசையினாலும் பயத்தினாலும் ஏற்படுவதே அல்லாமல் உண்மையைக் கொண்டல்ல.

எந்தக் காரியத்தையும் வெளிப்படையாய்ச் செய்கிறவன் திருடனானாலும் கொலைகாரனானாலும் அவன் யோக்கியனே.

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல.

கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது.

கடவுளைக் காப்பாற்ற மக்கள் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகின்றது.

அரசனும் செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்கவேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும், ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.

ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இம்மூன்றும் உயிர் ஒன்றும் உடல் மூன்றுமாயிருக்கின்றன.

கொள்ளைக்காரர்களாய் இருந்தவர்களே அரசரா கிறார்கள். கொடுமைக்காரராய் இருந்தவர்களே பிரபுக் களாகின்றார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்காரர்களாகின்றார்கள்.

வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியா. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியா.

******


இப்பொழுது மத சம்பந்த மாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டு களுக்குக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம் தான் இருந்து வருகின்றது. அது என்ன வென்றால் கடவுளை நம் பாதவன் நாஸ்திகன் என்பதுவே.

- பெரியார் ஈ.வெ.ரா.

 - விடுதலை நாளேடு, 4 .10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக