பக்கங்கள்

வெள்ளி, 11 அக்டோபர், 2019

மூடநம்பிக்கையால் முடிந்துபோன ராஜ்ஜியம்



தஞ்சையை ஆண்ட முதலாம் மராட் டிய மன்னர் வெங்காஜி, இந்த வெங்காஜி பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவின் படைத் தளபதி ஆவார். இவரது திறமையைப் பாராட்டி பெங்களூர் நிர்வாகத்தை ஒப் படைத்திருந்தார் அடில்ஷா. இந்த நிலை யில் சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி சனவரி 1676இல் தஞ்சையை நோக்கி நகர்ந்தார்.

அப்போது மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சையை ஆண்டு வந்தார்.

வெங்காஜி  தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமய மானது, ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களது ஆயுதங்கள் அனைத்தும் பூஜைக்காக புதிதாக்கப்பட்டு சந்தனம் பொட்டு வைத்து கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.

வெங்காஜியின் படையெடுப்பை அறிந்த மன்னன் அழகிரி நாயக்கருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன அமைச்சர்களையும், பார்ப்பனக் குருமார் களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட் டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படை யெடுத்து வருபவன் சுல்தான் அடில்ஷா வின் தளபதியான வெங்காஜியாவான். அவனோ இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச் செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான் என்று சொன்னார்கள்.

மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லை யில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.

வெங்காஜியின் படைகளின் குதிரை களோ, குவித் திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயாசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.

இதனைக் கேள்வியுற்ற மன்னன் அழ கிரி நாயக்கர் வைணவனான  வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்து ழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி மதுரையில் தஞ்சமடைந்தான்.  வெங் காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்கா மலும் எளிதில் தஞ்சையினைக் கைப் பற்றின. அன்றிலிருந்து  தஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் ஆளுமைக்குச் சென்றது.  வரலாற்றில் எந்த ஒரு பதிவிலும் தஞ்சாவூரைக் கைபற்ற வெங்காஜி போரிட் டதாக இல்லை. அப்படியே இருந்தாலும் அது மதம் தொடர்பான கற்பனைக் கதையாக உள்ளது. 1680இல் நாயக்க மன்னரின் முட்டாள் தனத்தால் எளிதாக கைப்பாற்றிய தஞ்சை சமஸ்தானத்தில் 1855-ஆம் ஆண்டுவரை மராட்டியர்கள் ஆட்சி செய்தனர்.  எந்த நாயக்கர்களின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர பார்ப்பனர்களின் ஆலோசனை காரணமாக அமைந்ததோ அதே பார்ப்பனர்களால் தான் மராட்டியர் களின் ஆட்சியையும் முடிவிற்கு வந்தது.  கடைசி மன்னர் தஞ்சாவூர் சிவாஜி தனக்கு வாரிசு இல்லாதாதால் தனது சகோதரி மகனை முடிசூட்ட முயற்சி செய்தார். ஆனால் சூத்திரனான தஞ்சாவூர் சிவாஜி தனது வாரிசாக யாரையுமே நியமிக்க முடியாது என்று மனுதர்மத்தை சுட்டிக் காட்டி ஆங்கிலேய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், அங்கு வாதாடிய பார்ப் பனர்கள் கலியுகத்தில் பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள் மட்டுமே, சத்திரியர் வைசியர் என யாருமே கிடையாது என்று கூறி விட்டனர். இதனை அடுத்து டல்ஹொசி பிரபு கொண்டுவந்த அவகாசியிலிக் கொள்கை என்ற வாரிசு இழப்புக் கொள்கையின் படி தஞ்சை ஆங்கிலேயர் வசம் சென்றது. அப்போது பார்ப்பனர்கள் தான் தஞ்சையின் முன்சீப் ஆக நியமிக் கப்பட்டனர்.

நாயக்கர் தஞ்சையைப் பறிகொடுத்ததை வைத்தே ”பார்ப்புப் பெருத்தல்லோ நாயக் கர் துரைத்தனம் கெட்டது”! என்ற பழமொழி ஏற்பட்டது.  ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்தது, அதன் பிறகு பார்ப்பனர்களால் மராட்டிய சாம்ராஜியமும் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆனால், தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் மட்டுமே வளமாக வாழ்ந்துகொண்டு வந்தனர்.

- விடுதலை ஞாயிறு மலர், 5 .10 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக