கழிவுநீர் வாய்க்காலில் ஆண்டாள் சிலையாம்!
கும்பகோணம், அக்.25 கும்ப கோணத்தில் கழிவுநீர் வாய்க்காலிலிருந்து சாக் குப்பையில் கட்டி தூக்கி வீசப்பட்ட சிலையை துப்புர வுத் தொழிலாளர்கள் கண் டெடுத்துள்ளனர்.
கும்பகோணத்தில் வாய்க் காலை சுத்தம் செய்தபோது, சாக்குமூட்டையில் இருந்து, 2 அடி உயரமுள்ள, அய்ம் பொன் ஆண்டாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஓலைப்பட்டினம் கழிவுநீர் வாய்க்காலை, நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, கால்வாயில், சாக் குப்பை ஒன்று, கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அதை, துப்புரவு பணியாளர்கள் பிரித்து பார்த்தபோது, சிலை ஒன்று இருந்தது. இதுகுறித்து, கும்பகோணம் மேற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. காவல்துறையினர் சென்று, சிலையை மீட்டு, ஆய்வு செய்த போது, 2 அடி உயரமுள்ள, அய்ம் பொன்னாலான ஆண்டாள் சிலை என்பது, தெரிய வந்தது.
பட்டறையில் இருந்து மெருகேற்றம் செய்வதற்கு முன் சிலையைத் திருடியவர் கள், அச்சிலையை மறைத்து வைக்க, கழிவுநீர் வாய்க்காலில் போட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப் படுகிறது.
அப்பகுதிகளில் உள்ள சிலைகள் செய்யும் பட்ட றைகளில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.
வாய்க்காலில் கண்டெ டுக்கப்பட்ட ஆண்டாளின் சிலை கும்பகோணம் வட் டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- விடுதலை நாளேடு 25 10 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக