பக்கங்கள்

செவ்வாய், 10 மார்ச், 2020

இனமானப் பேராசிரியர் வரலாற்று நிகழ்வுகள்

இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்பெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, அவரது கொள்கைகளை தனது இறுதி மூச்சு உள்ளவரை பேசியும், எழுதியும் வந்தார்.

அவர் கடந்து வந்த பாதையும், வரலாற்றைப்பற்றி சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

19.12.1922 - கல்யாணசுந்தரம் - சொர்ணம் இணை யரின் மூத்த மகனாக 'இராமையா' (அன்பழகன்) பிறந்தார்.

1932 வரை- தொடக்கக் கல்வி

1933 - "குடந்தை மாமாங்கம் எதிர்ப்பு" - சிங்கை கோவிந்தராசன் தலைமையில் "மடமையை வளர்க்காதீர். மாமாங்கம் போகாதீர்" என்று பரப்புரை.

1939 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 'இன்டர்மிடியேட்' வகுப்பில், 'இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்' ஆகிய பாடங்களைப் பயிலுதல்.

1942 வரை- தென் இந்திய நல உரிமைச் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற மாநாட்டில் சொற் பொழிவு,  அண்ணாவின் பாராட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்) தேர்ச்சி. மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இராமையா என்ற பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.

1943 - திருவாரூர், விசயபுரத்தில் இஸ்லாமியர் சங் கத்தில், சிந்து மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த சிக்கந்தர் ஹயத்கான் நினைவு நாள் கூட்டத் தில் அண்ணாவுடன் கலந்து கொண்டு சொற்பொழிவு.

1943 - சிதம்பரத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி, போர் ஆதரவு மாநாட்டில் பெரியாருடன் சொற்பொழிவு.

1944 - கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் (பிப்.19, 20) மாநாட்டில் ஆற்றிய உரை, பேரறிஞர் அண்ணாவின் பாராட்டுடன், திராவிட நாடு இதழில் தமிழா கேள் என்ற தலைப்பில் வெளியானது.

1944 - பி.ஏ.,ஆனர்ஸ் பட்டம் பெற்றார்.  திருவாரூரில் 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' கலைஞர், பேராசிரியரை அழைத்துப் பேசச் செய்தார்.

தந்தை பெரியார்  கொள்கை வழியில் 98 வயதுவரை வாழ்ந்த

இனமான பகுத்தறிவுப் பேராசிரியர் க.அன்பழகன்

1944 - சேலம், நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றம் பெற்றது - 'சண்டே அப்சர்வர்'

1944 - பி.பாலசுப்பிரமணியம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையைத் தமிழில் மொழி பெயர்க்க பேரா சிரியரை அண்ணா பணித்து அதனை செவ்வனே செய்து முடித்தார்.

21.1.1945 - பெரியார் தலைமையில் பேராசிரியர் - வெற்றிச்செல்வி திருமணம்.

1945 - திராவிட இளைஞர் தூத்துக்குடி மாநாட்டில் தலைமை உரை, திருச்சி, திராவிடர் கழக மாநில மாநாடு பங்கேற்பு.

1946 - மதுரையில் கருப்புச் சட்டை மாநாட்டில் பேராசிரியர் பேச்சு. இம் மாநாட்டுப் பந்தல் எதிரிகளால் தீயிடப்பட்டது.

1947 - நெல்லையில் தி.க. மாநாட்டில் 'திராவிட நாடு' படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

1947 - கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாட் டில் திரு.வி.க.வுடன் பங்கேற்பு. 29.10.1947 - முதல் மகள் செந்தாமரை பிறப்பு.

1948 - ஈரோடு திராவிடர் கழக மாநில சிறப்பு மாநாட்டில் பங்கேற்பு.

1948 - கோவை முத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு.

1948 - புதுவாழ்வு இதழ் ஆசிரியர் 17.9.1949 - தி.மு.க. தொடங்கப் பெற்று, முக்கியப் பங்கேற்று சிறப்புரை. 26.9.1949 - இரண்டாவது மகள் மணமல்லி பிறப்பு

1951 - தி.மு.க. முதல் மாநில மாநாடு, சென்னை தீவுத்திடல் பிப்ரவரி - பேராசிரியர் முழக்கம்!

1956 - திருச்சி - தி.மு.க. மாநாடு,  தமிழ் இலக்கியத்தில் அரசியல் கருத்துரை - பேராசிரியர் பேச்சு

1957 - நேருவிற்குக் கருப்புக்கொடி காட்டி கைதாகி ‘5 நாள்கள் சிறைவாசம்' சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெறல்.

1959 - தி.மு.க. தொழிற்சங்கச் செயலாளராகப் பொறுப்பெற்று 1961 வரை பணியாற்றினார்.

1962 - எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். சென்னை - செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 - இந்தி எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டு 6 திங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார்.

1967 - சனவரி 1, தி.மு.க. நான்காவது மாநில மாநாடு விருகம்பாக்கம், சென்னை

1967 - திருச்செங்கோடு நாடாளுமன்றத்திற்கு திரு. காளியண்ண கவுண்டரை எதிர்த்து வெற்றி பெற்றார்.

1968 - இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டுக்கு தி.மு.க. சார்பாக, கலந்து கொள்ள மத்திய அரசு பேராசிரியரைத் தேர்ந்தெடுத்தது. செல்லும் வழியில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளையும், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த அண்ணாவையும் கண்டு திரும்பினார்.

1969 - அண்ணா மறைவுற்றார் (3, பிப்ரவரி).

1969 - திருமதி வெற்றிச் செல்வி மறைவு (12.11.1969)

1971 - சென்னை புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்வு. டாக்டர் செந்தாமரை- டாக்டர் சொக்கலிங்கம் (14.7.1971 ) மணவிழா.

1972 - மகள் டாக்டர் மணமல்லி -டாக்டர் சிவராமன் (8.9.1972) திருமணம்.

1975 - டிசம்பர் 29, தி.மு.க. அய்ந்தாவது மாநில மாநாடு, சேலம்.

1977 - புரசை சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுதல் - மகன் அன்புச் செல்வன் - கல்யாணி திருமணம் (24.10.1977)

1978 - இந்திராகாந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதாதல்.

1978 முதல் - தி.மு.க.வின் பொதுச் செயலாளர் (18.6.1978)

1980 - புரசை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980 டிசம்பர்- தி.மு.க. மாவட்ட மாநாடு, ஈரோடு.

1981 சனவரி - தி.மு.க. மாவட்ட மாநாடு, திருவண்ணாமலை

1983 - ஈழத் தமிழருக்காகக் கலைஞரும், பேரா சிரியரும் சட்டமன்றப் பதவியைத் துறந்தனர்.

1983 - மீண்டும் தி.மு.க. பொதுச் செயலாளர் (25.6.1983) ஆகுல்.

1984 - பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி.

1984 - தி.மு.க. வட்ட மாநாடு, கரூர்.

1986 - அரசியல் சட்டப் பிரிவு எரித்தமைக்காக (இந்தி திணிப்பை எதிர்த்து) 10 சட்டமன்ற உறுப் பினர்களின் பதவி பறிக்கப்பட்டது.

1988 - மூன்றாவது முறையாகத் தி.மு.க. பொதுச் செயலாளர் (2.2.1988)

1989 - அண்ணாநகர் தொகுதியில்வெற்றி பெற்று கலைஞர் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1990 - தி.மு.க. ஆறாவது மாநில மாநாடு. திருச்சி மாநாட்டுத் திறப்பாளர்.

1991 - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்

1991 டிசம்பர்- திராவிட இயக்கப் பவள விழா மாநாடு, மதுரை - மாநாட்டுத் திறப்பாளர்

1992 - நான்காவது முறையாக கழகப் பொதுச் செயலாளர் (2.6.1992)

1996 - தி.மு.க. எட்டாவது மாநில மாநாடு, திருச்சி.

1996 - சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிட்டு வென்று கலைஞர் அமைச்சர வையில் மீண்டும் கல்வி அமைச்சரானார்

1997 - அய்ந்தாம் முறையாகக் கழகப் பொதுச் செய லாளர் (27.7.1997)

1997 - தி.மு.க. சிறப்பு மாநாடு, சேலம் மாநாட்டுத் திறப்பாளர்.

2000 - ஆறாம் முறையாகப் பொதுச் செயலாளர் (8.4.2000)

2001 - துறைமுகம் தொகுதியில் வெற்றி -மீண்டும் கல்வி அமைச்சர் ஆனார்.

2003 - ஏழாம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளர் (2.4.2003)

2006 - துறைமுகத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்டு நிதி அமைச்சரானார்.

2008 - எட்டாம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளரானார் (27.12.2008)

2011 - வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப் பினை இழந்தார்

2014 - ஒன்பதாம் முறையாக கழகப் பொதுச் செயலாளர் (9.1.2014)

2017 - முத்தமிழறிஞர் கலைஞர் உடல் நலிவுற்று இருந்தபோது கழக பொதுக் குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்களை கழகச் செயல்தலைவராக முன் மொழிந்தார்.

2018 - முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த போது ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக் குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்தார்.

2020 - உடல் நலிவுற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 7.3.2020இல் மறைவுற்றார்.

மறைவுற்ற பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்!

- விடுதலை நாளேடு 7 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக