பக்கங்கள்

ஞாயிறு, 12 ஜூன், 2016

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்


பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத் கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாக்கத்தினை  விளைவித்தது !
திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டென்று நிலை நாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத் தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.
மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் அந்த அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.
புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக் காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில நாடாளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர் பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !
- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.
இந்திய அரசியல் சட்ட அமைச்சராய் அம்பேத்கார் கடமையாற்றிக் கொண்டிருந்த காலம் அது. தம்மைச் சந்தித்த வின்சென்ட்ஷீன் என்ற அமெரிக்க எழுத்தாளரிடம் பார்ப் பனீயத்தால் கற்பிக்கப்பட்ட சாதி முறையின் தீமைகள். இந்திய வரலாறு நெடுகிலும் பார்ப்பனர் பண்ணிய கொடுமைகள் ஆகியவற்றை மணிக்கணக்கில் விரித்துரைத்த அம்பேத்கார் நிறுத்தவில்லை.
அத்தோடு ஷீன் அவர்களே தாங்கள் எங்களின் இந்தப் பார்ப்பன அரசாங்கத்தை விரும்புகிறீர்கள் என்றால், வேண்டுமாயின் இவ்வரசை மூட்டைகட்டித் தூக்கிச் சென்றுவிடுங்களேன். எங்களுக்கு இவ்வரசு தேவையில்லை எனக் கிண்டல் செய்தார்.
தாம் பங்காற்றிக் கொண்டிருந்தது இந்திய அரசியல்தான். எனினும் அதையொரு பார்ப்பன அரசு என்று பச்சையாக அதுவும் அயல்நாட்டு எழுத்தாளரிடம் அடையாளம் காட்டி னாரெனில் அம்பத்காரின் ஆரிய வெறுப்புத்தான் எத்தகையது!
-Nehru: The years of Power by Vincent Sheean
ஒரு பார்ப்பனர் விடுதலையடைந்த இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் ஆன நிகழ்ச்சியைக் கொண்டாடுவ தெற்கென 15.8.1947 அன்று காசிப் பார்ப்பனர்களால் இயற்றப் பட்ட யக்ஞத்தில் நேரு அமர்ந்து, பார்ப்பனர்களால் வழங்கப் பட்ட ராஜதண்டம் தரித்து, கங்கை நீரைப் பருகவில்லையா? அது போன்று இந்தியக் குடியரசுத் தலைவர் வாரணாசி சென்று பார்ப்பனர்களைத் தொழுது, அவர்தம் கால்கழுவி அத்தண் ணீரைக் குடிக்கவில்லையா?
- Thoughts on Linguistis States by Ambedkar
-விடுதலை,13.5.16

திங்கள், 30 மே, 2016

மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான்



(1931 - புதுவை முரசிலிருந்து)
ஏசுவானவர் பாவிகளை ரட்சிக்கும் பொருட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்று கிறித்துவப் பாதிரிமார்கள் உபன்யாசம் செய்கிறார்கள். “ஏழைகளைக் காப்பாற்றும் பொருட்டு தனது ரத்தத்தைச் சிந்தினார்” என்று பிரசங்கம் செய்கிறார்கள். நமது ஜனங்களும் அதை நம்புகிறார்கள். எப்படியோ 60 லட்சம் கிறிஸ்துவர்களும் இந்தியாவில் சேர்ந்து விட்டார்கள். அதைப்பற்றி நமக்கு எள்ளளவும் கவலை கிடையாது.
ஏனெனில் இந்த 60 லட்சம் பேர்களும் இந்துமதத்தில் இருந்து சாதித்ததைவிட அதிக மாகவோ, குறைவாகவோ கிறிஸ்துமதத்திலும் சாதித்து விடப் போவதில்லையென்பதே நமது அபிப்பிராயம்.
வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்ததைவிட சற்று மதவெறி அதிகம் பிடிக்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் எதற்கெடுத்தாலும் சைத்தான் என்று சொல்லி விடலாம் இதைத் தவிர வேறு பகுத்தறிவோ அனுபவ முதிர்ச்சியோ கிறிஸ்துமதத்தில்  அதிகமாய்க் கிடைத்துவிடும் என்று நாம் சிறிதுகூட சந்தேகிக்கவில்லை.
ஆகவே கிறிஸ்து மதத்திற்கு இருக்கும் பணக் கொழுப்பும் அரசாங்க ஆதரவும் இருக்கும் வரையில் அது அவ்வளவு பயமில்லாமல் இருக்கலாம்!. இருந்து விட்டு போகட்டும் ஒன்றும் மூழ்கிப் போகாது ஆனால் நாம் கேட்பதெல்லாம் ஒரு விஷயந்தான். கிறிஸ்துவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறார்களா?
உனது ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று வேதநூல் .. உனது மேலங்கியை எடுத்துக்  கொண்டவனுக்கு உனது கோட்டையும் கொடுக்கத் தயங் காதே என்று கூறுகிறது ஆனால் என்ன நடக்கிறது? எவ னாவது பாதிரிமார்கள் புரட்டை எடுத்துச் சொன்னால் அவன்மீது மான நஷ்ட வழக்கு தொடரலாமா அவனது ஆயுதத்தைப் பிடுங்கலாமா அவனைக் கஷ்டப்படுத்தலாமா என்று யோசனை போகிறதே தவிர யோக்கியமாய், நாணயமாய், மனுஷத் தன்மையோடு சுயஅறிவோடு பதில் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
மிஸ். மேயோ இந்து மதத்தைப் பற்றி இடித்துக் கூறியபோது இந்துமதப் பித்தர்கள் எப்படி தலைகால் தெரியாமல் காய்ச்சின எண்ணையில் போட்ட எள்ளுப் பொட்டணம் மாதிரி துள்ளினார்களோ அதைப்போலவே தான் நமது கிறிஸ்துவ சகோதரர்களும் குதிக்கிறார்கள். சக்கரைகளுக்கும், ஜோசப்பு களுக்கும், செல்வங்களுக்கும், அற்புத ஆரோக்கியசாமி களுக்கும் ஆவேசம் வந்து விட்டது. ஒரு மதத்திலும் சேராத நம்மைப் போன்றவர்களுக்கே, எங்கே 2ஆவது ஏசு  கிறிஸ்து திடீரென்று வந்து எல்லோரையும் அழித்து விடு வாரோ என்று பயமாயிருக்கிறது! பாவம்!
ஆஹா என்ன வேடிக்கை பல நூறு வருஷங்களா பரம் பரையாய் கிறிஸ்துவர்களாக இருந்த தேசங்களும் மக்களும் கிறிஸ்து மதத்தை புறக்கணித்து விட்டு சும்மாயிருக்கும்போது நேற்று செட்டியாராயிருந்தவர்களும் 2 நாளைக்கு முந்தி உடையார்களாய் இருந்தவர்களும் இன்றும் கூட அந்த அநாகரீகப் பட்டங்களை தங்கள் புனித மார்க்கத்தைச் சேர்ந்த பெயர்களோடு கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருக்கி றவர்களும் ஏதோ உலகத்திற்கே அபாயம் வந்துவிட்டது போல் சீறிவிழுவதும் தலைவிரி கோலமாய் ஆடுவதும் ஒரு வெட்ககரமான காரியமாகவே இருக்கிறது.
கிறிஸ்துவத் தலைவர்களே! பாதிரிமார்களே! ஏன் இத்தனை ஆத்திரம்? உங்கள் மதத்தில் சிறிது கூட அப்பு அழுக்கு இல்லையென்றால் எந்த காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் உபயோகப்படக்கூடியது என்றால் எல்லா உண்மைகளும் உடையது என்றால் புனிதமான மார்க்க மென்றால், கடவுள் அருள் பெற்றவர்களாலேயே ஸ்தாபிக்கப் பட்டது என்றால் இந்த சுயமரியாதை இயக்கமோ இந்த பகுத்தறிவு இயக்கமோ, இந்த ரஷியாவோ இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் அதை ஒரு அங்குலமாவது நகர்த்த முடியுமா?
அப்படியிருக்க உங்களுக்கென்ன ஆவேசம்? அன்று மோஸசைப் போல் ஒரு ஆள் கடவுளுக்குத் தூதுபோகக் கிடைக்கமாட்டானா? அன்றி கிறிஸ்துவக் கடவுள் கொஞ்சம் கண் திறந்து பார்த்தால் (இப்போது கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை) போதாதா? இந்த  அறிவு இயக்கத்தார் எல்லாம் அழிந்துவிட மாட்டார் களா? அப்படியிருக்க நமது நாடார்,
முதலியார், வாண்டையார், உடையார் கிறிஸ்துவர்களுக்கு மாத்திரம் ஏன் இத்தனை ஆத்திரம் வரவேண்டுமென்பது நமக்கு விளங்கவில்லை கிறிஸ்து மதமே உண்மையான கொள்கைகளையுடைய மதமென்றால் தானாகவே நிலை பெற்று விடுமல்லவா?
ஓ! ஒரு வேளை இப்படியிருக்கலாம்! கடவுளின் பத்துக் கட்டளைகளுள், நான் ஒரு பொறுமையான கடவுள், மற்றொரு கடவுளை மனிதர் வணங்குவதைப் பொறுக்க மாட்டேன். ஒருவன் இவ்வாறு செய்தால் அவனுடைய மூன்றாவது நான்காவது தலைமுறைவரையில் துன்பப் படுத்துவேன் என்று கிறிஸ்துக் கடவுள் சொல்லியிருக்கிறாரல்லவா? அத னால் தான் கிறிஸ்துப் பாதிரிகளும் தலைவர்களும் பதறுகிறார்கள்.
மதம் ஒழிந்த மனிதனே, மனித சமுதாயத்திற்குப் பயன்படுவான்.
-விடுதலை,4.3.16

புதன், 25 மே, 2016

கடவுள் அழாது என் செய்யும்?

தென்னிந்தியாவிலுள்ள சில கோவில்களிலும், வட இந்தியாவிலுள்ள சிலகோவில்களிலுமுள்ள சுவாமிகளின் (விக்ரகங்களின்) கண்ணிலிருந்து கண்ணீர் வடிவதாக சில மாதங்கட்கு முன்னர் பத்திரிகையில் பார்த்தேன். சில பகுத் தறிவுவாதிகள் இவைகளெல்லாம் சுத்தப்புரட்டு என்றனர். என்னமோ எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு இருக்கக்கூடாது என்ற அய்யமுண்டானது கடைசியில் ஓர் முடிவுக்கு வந்தேன்.
இத்தெய்வங்கள் விஷயம் கண்டிப்பாய் உண்மை யாகத்தானிருக்கும். ஏன் கிரேதாயுகம், திரேதாயுகம் துவாபர யுகங்கள் தெய்வம் மனிதரையாண்டு வந்தது. இந்தக் கலியுகத்தில் மனிதன் தெய்வத்தை அடக்கியாளத் துணிந்து விட்டான். பழைய யுகங்களில் இத்தெய்வங்கள் யதேச்சையாய் காடுகளிலும், நாடுகளிலும் உலாவிக்கொண்டு சுதந்திரமாய்க் குடித்து வெறித்து ஆடு, மாடு மனிதர்களைக் கொன்றுதின்று பல மனைவிகளை மணந்து கொண்டதும் போதாதென்று அகலிகை, பிருந்தை, சரஸ்வதி, தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் முதலிய பெண்களையும் பல பக்தர்களின் மனைவியையும் பலவித தந்திரோ பாயங்களாலும் பலாத் காரத்தாலும் புணர்ந்து இன்பம் துய்த்துக்கொண்டிருந்த தோடமையாது.
ஆயிரக்கணக்கான தேவதாசிகளையும் தானும் தன்னை நம்பி வந்த பக்தர்களும் அனுபவித்துக் கொண்டிருந்திருக்க இக்கலிகால மக்கள் கடவுளுக்கென்று ஒருவரும் பொட்டுக் கட்டகூடாது தாசியென்றொரு கூட்டம் இருந்து விபசாரம் செய்தாலே தண்டிக்க வேண்டும் என்றும் சட்டம் செய்து வருவதோடு ஒருவன் ஒரு மனைவிக்கு மேல் கல்யாணம் செய்யக்கூடாது என்று சட்டஞ் செய்யமுயற்சிப்பதும் பிறர் மனைவி சோதரியை பலாத்காரமாகவோ,
வஞ்சனையாகவோ அபகரித்துச்செல்பவர்களுக்கு, 10 வருஷம் தண்டிக்கப்படும் செய்திகளும், கடவுள் செய்த லீலா வினோதத் திரு விளையாடல்களெல்லாம். விபசாரம், அயோக்கியத்தனம் என்று கூறுவதோடு அக்கடவுளைக் கண்டால் கழுத்தை அறுப்பேன் என்றும் அத்திருவிளையாடல் புராணங்களை யெல்லாம் சுட்டெரிக்க வேண்டும் என்று பகுத்தறிவுவாதிகள் பேசுவதையும் எழுதுவதையும் அறிந்தும் கடவுள்கள் அழாது என்னதான் செய்யும்?
சிறீ ரெங்கநாதர்
விவாகரத்து செய்வாரா?
முஸ்லிம் வைதீக அறிஞர்கள் தங்கள் வேதப்படி ஒரு முஸ்லிம் ஒர் கிறிஸ்தவப்பெண்ணை மணந்துகொள்ளலாம் என்கின்றனர். சீர்திருத்தவாதிகளான முஸ்லீம்களோ விக்ரக வணக்கஞ் செய்யாத எந்த மதப்பெண்ணையும் நாங்கள் மணந்து கொள்ளலாம் - ஆனால் ஒரு முஸ்லிம் பெண் பிற மதஸ்தனைக் கல்யாணம் பண்ணுவது கூடாது என்றுதான் குர்ஆன் கூறுகிறது என்று கூறுகிறார்கள்.
எனவேதான் ஜாதி, மத வித்தியாசமின்றி தமிழர்கள் (இந்து முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் மணந்து கொள்ளலாம் என்று ஒர்தீர்மானம் மலேயாவிலுள்ள கோலககன்சாரில் கூடிய அகில மலேயா நான்காவது சீர்திருத்த மாநாட்டில் கொண்டு வந்த பொழுது முஸ்லீம்கள் பலமாக எதிர்த்ததின் பலனாக பிரேரேபித்தவரால் அத்தீர்மானம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் தமிழர்களின் ஒரு பகுதியாரின் தெய்வமாகிய சிறீ ரெங்கநாதர் ஒர் துலுக்கப்பெண்ணை மணந்து நீண்ட நாளாக வாழ்த்துவரும் பொழுது அவரது அடிச் சுவட்டைப் பின்பற்றி ஒழுகும் மக்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுப்பதும், எதிர்ப்பதும் நியாயமாகுமா?
உண்மையில் அது தங்கள் மதத்திற்கு விரோதமாயிருக்கிறது என்று முஸ்லிம்கள் கருதினால் சிறீ ரெங்கநாதர் செய்கையைத் தண்டித்துப் பெருங்கிளர்ச்சி செய்து சிறீ ரெங்நாதர் விவாகரத்து செய்து கொள்ளும்படி இந்தப் பிரிட்டிஷ் கோர்ட்டிலோ அல்லது தேவலோகக் கோர்ட்டிலோ ஒரு தாவா தொடர்ந்து விவாஹரத்து வெற்றி பெற்று விட்டால் துலுக்க நாச்சியார் விக்ரகத்தை சிறீ ரெங்கம் கோவிலிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் துலுக்கப்பெண்ணும் இந்து ஆணும் கலப்பு மணம் செய்து கொள்ளலாம் என்ற விஷயத்தை எவரும் பேசவே பயப்படுவார்கள் எனவே சிறீரெங்கநாதரை விவாஹரத்து செய்யும்படி  கோர முஸ்லிம்கள் முன் வருவார்களா?   


-விடுதலை,1.4.16

ஞாயிறு, 22 மே, 2016

மோட்சம் வேண்டுமா?

 
இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால்  அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?
இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர் களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.
அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள்.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப் பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.
ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?
பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய் திருக்கிறீர்களே.
அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தி யங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?
- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

பிராமணர்களின் உதடுகளில் உலாவுவது என்ன?
நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில்  அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?)
இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான். நாளை அவன் செல்வனும், கற்றறி வாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொரு வரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.
நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியா வெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர்  உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்? நாமும் மனிதர் களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற் காகவும் நாம் என்ன செய்கின்றோம்,
நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா? அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங் களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவு கின்றது?
நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப் பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது;
மற்றெங்குமன்று....
அன்பும் நல்லெண்ணமுமடைய
உங்கள் விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன்  குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.
-விடுதலை,29.1.16

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மூடத்தனத்திற்கு முடிவு கட்டுவார்களா படித்த மூடர்கள்?

யாகத்திற்குக் கிடைத்த கை மேல் பலன் இதுதானா?
உலக அமைதிக்காக பல கோடி ரூபாய்  செலவில் நடத்தப்பட்ட யாகமாம்
திடீர் தீப்பற்றி பார்ப்பனர்கள் தலைதெறிக்க ஒட்டம்!
மூடத்தனத்திற்கு முடிவு கட்டுவார்களா படித்த மூடர்கள்?

மேடக், டிச.28-_ உலக அமைதிக்காக யாகம் நடத்துவதாகக் கூறி பல கோடி ரூபாய் செலவு செய்து தெலங்கானா முதல் அமைச்சர் சந்திர சேகர ராவால் நடத்தப் பட்ட மகா சண்டியாகத் தின் தீப்பற்றி யாக மேடை எரிந்து பந்தலிலும் பரவிட, யாகம் நடத்திய பார்ப் பனர்களும், பக்தர்களும் பதறி அடித்து ஓடிய காட்சி பரிதாபமே! படித்த தவர்கள் எவ்வளவுக் கிறுக் கர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் அடையாளமே! இதற்குப் பிறகாவது திருந்துவார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.
தெலுங்கான முதல்வர் சந்திரசேகரா ராவ் தனித் தெலுங்கான மாநிலம் உருவான பிறகு தனது ஆட்சிக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இருக்கவும், (?) மக்களின் நலவாழ்விற்காக வும், மேடக் மாவட்டம் எர்ரவள்ளி என்ற கிராமத் தில் மகாயுதசண்டி யாகம் என்ற சடங்கை பிர மாண்ட அளவில் நடத்தி னார். இந்த யாகத்திற்காக அமைக்கப்பட்ட பந்தல் மாத்திரம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட் டது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பார்ப் பனர்கள் யாகசாலையில் வேதம் ஓதுவதற்காக வந் திருந்தனர். இவர்களுக்கு மட்டுமே ரூ.2 கோடி கொடுக்கப்பட்டிருந்தது, யாகசாலை அமைந்த இடத்தை செம்மைப்படுத்த மற்றும் பல்வேறு அலங் கார அமைப்புகள் என்று மொத்தம் 7 கோடி செல வில் அய்ந்து நாள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த யாகத்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் முதல் 8 மாநில ஆளுநர்கள், 13 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலை வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருந்தது. 23 ஆம் தேதி துவங்கிய இந்த யாகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் ரோசைய்யா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலுங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண் டாரு தத்தாத்ரேயா, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்பராமி ரெட்டி, மகா ராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தலைவர் சிவபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைக்கோலால் வேயப்பட்ட யாகமேடை
கடைசி நாளான நேற்று யாகத்தில் இருந்து தெறித்த தீப்பொறி ஒன்று வைக்கோலால் வேயப் பட்ட யாகமேடையில் தெரித்து யாகமேடை தீப்பிடித்தது, இந்தத்தீ விரைவில் யாகப் பந்தலி லும் பற்றிக்கொண்டது. இதனை அடுத்து யாகம் செய்துகொண்டு இருந்து பார்ப்பனர்கள், அவர் களுக்குப் பாதுகாப்பாக இருந்த தெலுங்கானா காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அலறி யடித்துக்கொண்டு ஓடினர்.
இது குறித்து நீயூஸ் 7 என்ற பத்திரிகையாளர் கூறும் போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யாகத்திற்கு வந்ததை அடுத்து யாககுண்டத்தில் இருந்த பார்ப்பனர்கள் தீவிரமாக யாகம் செய் பவர்கள் போல் நடந்து கொண்டனர். மேலும் 3 நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்த யாககுண்டத்தில் நேற்று அதிக அளவு நெய்யும், ஆடைகளும் போட்டு கொளுத்தப்பட்டது. மேலும் யாகத்தில் கட்டை களும் போடப்பட்டன, இதனால் ஆங்காங்கே நெருப்புப் பொறிகள் தெறித்தன. ஆரம்பத்தில் யாரும் நெருப்புப் பொறிகள் தெறிப்பதை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நண்பகலில் யாகமேடையில் நெருப் புப்பொறி பட்டு தீப்பிடிக்க ஆரம்பித்தது. தீ பிடித்து விட்டது என்று தெரிந்த வுடன் பார்ப்பனர்கள் உடனடியாக துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில்  தலைதெறிக்க ஓடினர்.  பாதுகாவலர்கள் தீயை அணைக்க முற்பட் டனர் ஆனால் தீ யாகப் பந்தலின் மேலே பிடித் திருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்யமுடிய வில்லை, இதனால் அவர் களும் வெளியே ஓடிவந்து விட்டனர், என்று கூறினார்.
உலக அமைதிக்காக என்று மழுப்பிய சந்திரசேகரராவ்
இதனை அடுத்து மேடக் மாவட்ட ஆட்சி யாளர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சந்திர சேகர ராவ் இது உலக அமைதி வேண்டி நடத்தப்பட்ட யாகம் தான், எனது சொந்த நலனுக்காக நடத் தப்பட்ட யாகமல்ல, மேலும் இந்த யாகம் 8 கோடி செலவில் நடை பெற்றதாக கூறுகின்றனர். இந்த யாகத்திற்கு என்று அரசு தரப்பில் பணம் கொடுக்கப்படவில்லை, உலக நன்மைவேண்டிய பல தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெற்ற நன்கொடைதான் என்று கூறினார்.
விவசாயிகளின் தற்கொலை
இந்த யாகத்தில் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்பட வில்லை என்றாலும் 7 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது, மேடக் மாவட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கடுமை யான வறட்சியைச் சந்தித் துள்ளது, யாகம் நடை பெற்ற எர்ரவள்ளி என்ற கிராமத்தில் சில மாதங் களுக்கு முன்பு 2 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.  வறட்சி மற்றும் விவசாயி களின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு மாநில முதல் வரே யாகம் நடத்தியதை ஆரம்பத்தில் இருந்தே ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது, இந்த நிலையில் யாக மேடையில் தீப்பிடித் ததன் விளைவால் கோடிக் கணக்கான பணம் சாம் பலாகியுள்ளது.
குறிப்பு: இந்த யாகத் தில் 2000 புரோகிதப் பார்ப்பனர்கள் கலந்து கொண்டனர். ரூ.7 கோடி செலவிட்டதாக தெலங் கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ் கூறியுள் ளார். காசைக் கரியாக் காதே என்பார்களே - அது இதுதானோ!


யாகத்துக்காக  கோடிக்கணக்கான பணத்தை வீணடிப்பதா?
காங்கிரஸ் கண்டனம்
நகரி, டிச. 28   சந்திரசேகரராவ் நடத்தும் யாகத் துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:
சந்திரசேகரராவ் நடத்தும் சண்டி யாகத்தால் நாட்டில் எதுவும் நடந்து விடாது. கடந்த ஒரு வாரமாக அவர் பூஜையில் இருப்பதால் அரசு நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. யாகத்துக்காக ரூ.40 கோடி செலவிடப் படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த பணம் எப்படி வந்தது? யாகத்துக்கு ரூ.7 கோடிதான் செலவிடுவ தாகவும் இது அரசு பணம் அல்ல. எனது சொந்த பணம் என்றும் நன்கொடை மூலம் பணம் பெற்றதாகவும் சந்திரசேகரராவ் கூறுகிறார்.
இந்தப் பணம் அவருக்கு யார் மூலம் வந்தது என்று மக்களுக்கு விளக்க வேண்டும். யாகத்துக்காக கோடிக் கணக்கில் பணம் வீணடிக்கப்படுகிறது. இது தேவை யற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,28.12.15

கடவுள் காப்பாற்ற மாட்டார்.... நடிகர் நாசர் அதிரடி....

இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது. நடிகர் நாசர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கில் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரித்து ஆமோதித்தினர்....... அவருக்கு பின் பேச வந்த இளையராஜா மறுக்கிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டிய பொழுது அரங்கத்தில் ஓரிருவர் தவிர அனைவரும் அமைதியாக இருந்தனர்... .இசைஞானி தான் சுருதி தப்பி பேசுகிறோம் என்பதை கடைசி வரை உணரவில்லை....
நாசர் அணிந்திருந்த கறுப்புசட்டை அனைவரை யும் கவர்ந்தது...

இளையராஜாவின் தப்புத்தாளங்கள்
இளையராஜா தனது உரையில் 'உலகை இயக்குவது  கடவுள்....எல்லாம் அவன் செயல்' என்றார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ‘அப்படியென்றால் வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியது கடவுள் செயலிற்கு விரோதமானது அல்லவா' என்று கேட்ட பொழுது அருகிலிருந்தோர் ‘கொல்' என்று சிரித்தனர்..... ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இளையராஜா மாணவர்களைப் பார்த்து மதியம் பாடல் ஒலிப்பதிவு உள்ளது.. நன்கு பாடத்தெரிந்தவர்கள் என்னுடன் வரலாம் என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு பொருந்தாமல் பேசியதனைக் கேட்க பரிதாபமாக இருந்தது...
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் (17.12.2015)
.-விடுதலை,18.12.15

சனி, 26 டிசம்பர், 2015

”கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே!”

அமெரிக்க உளவியல் சங்க ஆய்வு முடிவு!


வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது.
ஆய்வும் முடிவும் கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள்
கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும்  தாங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள் மிகுந்த கவலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், உணர்ச்சிவயப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களாகவும், இயல்புக்கு மாறாக கற்பனை உலகில் உலவுபவர்களாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். 5 ஆண்டு கால ஆய்வின் முடிவாக சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கடவுள் நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். மத நம்பிக்கையில் உள்ள இரண்டுவிதமான நடவடிக்கைகள் முற்றிலும் உண்மை நிலைக்கு தொடர்பற்று முரணாகவே இருந்து வருகின்றன.
பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரியூஸ்
உளவியல் பேராசிரியர் டாக்டர் லில்லியன் ஆண்ட் ரியூஸ் கூறுகையில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகளால் உயிரிழக்கிறார்கள். அந்தக் கருத்தை மறுத்து, கடவுள் அவர்களைக் காப்பார் என்று கடைசிவரை நம்புகிறார்கள். ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதில் முடிவை எடுக்க தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள்.
குருதிக்கொடை ஏற்காத மனக்கோளாறு
ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் எந்த சூழலிலும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் அடுத்தவர் ரத்தத்தைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதேமேல் என்பார்கள். அவ்வப்போது பலரும் ஆவிகளைக் கண்டதாகக் கூறிக் கொள்வார்கள். உண்மைக்கு மாறானவைகளாக உள்ள இவ்வாறான நிலையை மனக் கோளாறுகளின் அடையாளமாகவே பார்க்க முடியும்.
கடவுளின் கோபம் எனும் மூடநம்பிக்கை
கடவுளின் கோபத்தால் குழப்பம், அழிவு, இறப்பு, நூற்றாண்டுகளாக போர்கள் ஏற்படுவதாக மத நம்பிக்கையாளர்கள் கருதுகிறார்கள். உயிரைக் காக்க கட்டாய சிகிச்சை
மத நம்பிக்கைகளால், மத காரணங்களால், மத சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல்,  அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தேவையான முடிவை எட்ட முடியாதவர்களுக்கு,  மத நம்பிக்கையின் பேரால் சிகிச்சை பெற மறுப்பவர்களின்  உயிரைக் காப்பதற்காக எந்த நிலையிலும், மருத்துவர்கள் கட்டாய சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம் என்று மருத்துவர்களுக்கு முழு உரிமையை அளித்திட சட்டம் இயற்றவுள்ளனர்.
விரைவில் இந்த ஆய்வு குறித்த முழு விவரங்கள் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின்மூலம் வெளியிடப்படும் என்றும் அச்சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் www.thenewsnerd.com எனும் இணையத்தில் மருத்துவச் செய்தித் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும், தகவல்களும் எவ்வளவு சரியானவை,- துல்லியமானவை என்பதை  விரைவில் உலகம் அறியப் போகிறது. இதற்கான சரியான பரிசோதனைக் கூடம் (Laboratory) ஒன்று உண்டு என்றால், அது இந்த இந்தியத் திருநாடுதான்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வரும் ஆந்திர மாநிலம், கோதாவரி மகா புஷ்கர நீராடலில் 81 லட்சம் பேர் கூடினர் - கடந்த ஒரு வாரமாக நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 30-க்கும் மேல் என்ற கொடுமையான கோர நிகழ்வுக்குப் பின்னரும் கூட்டம் அங்கே சென்றுள்ளது என்பது கடவுள் நம்பிக்கை முற்றிலும் ஒரு மன நோய் - என்பதைக் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகுத்தறிவாளர்கள் பரப்ப வேண்டும் என்று ஆசிரியர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்கள்.
உண்மை,1-15.10.15