பக்கங்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சந்தேகம் சார்!


சார் ஒரு சந்தேகம்!
என்னடா சந்தேகம்?
சரஸ்வதி எங்கு இருக்கிறாள்?
வெண்டாமரையில்!
அது எங்கே இருக்கிறது சார்?
பிரம்மாவின் நாவில்!
பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?
மகாவிஷ்ணுவின் தொப்புட் கொடியில்! (வயிற்றில் உதித்தார்)
மகாவிஷ்ணு எங்கு இருக்கிறார்?
ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல்!
அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?
திருப்பாற்கடலில் உள்ளது.!
திருப்பாற்கடல் எங்கு உள்ளது சார்?
....?....?...? ஏய், நீ ஒரு கருப்புச் சட்டை..... நாத்திகன்... பகுத்தறிவுக்காரன்.. இரு இரு... உன்னை பரீட்சையில் கவனித்துக் கொள்கிறேன்.
-சி.பூபாலன், சி.இராசசேகரன்
சென்னை-40
-விடுதலை,6.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக