பக்கங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2015

உங்களுக்குத் தெரியுமா?

1.   நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்று இருந்ததைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இதன் பொருள் என்ன? பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாக வேண்டும் என்பது தானே!
இக்கொடுமை பனகல் அரசர் கொண்டு வந்த தமிழ்நாடு பல்கலைகழகச் சட்டம் மூலம் நீக்கப்பட்டது.

2.       எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் இராசகோபாலாச்சாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமாந்தூராரையும், டாக்டர் சுப்பராயனையும் தரையில் பாய் போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

3.    1940ஆம் ஆண்டுகளில் - சென்னை வில்லிவாக்கத்தில் - தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை - அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
-உண்மை,நவம்பர்,டிசம்பர்-2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக