பக்கங்கள்

திங்கள், 29 ஜூன், 2020

அண்ணாவும் - அய்யரும்!


‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழ ரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற் றாலும், சங்கநூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அத னைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீது தான்!
- அறிஞர் அண்ணா
(‘திராவிட நாடு', 2.11.1947,
பக்கம் 18)
ஏதோ வெறுப்பில் அண்ணா எழுதியதில்லை. உண்மையின் உந்துதலின் நடைமுறைக் காணலில் உரைத்ததுதான். இதோ ஓர் எடுத்துக்காட்டு:
கோட்டையூர் இராமநாதன் -உமையாள் 60 ஆம் ஆண்டு திருமணத்தில் அழகப்பச் செட்டியார் ஒரு லட்சத்து ஒரு ரூபாயை திருவிதாங்கூர் சர்வ கலா சாலையில் தமிழ்க் கல் விக்கு ஒரு நிறுவனம் ஏற்படுத் திடவேண்டும் என்று சர்.சி.பி. ராமசாமி அய்யரிடம் கொடுத் தார். அதனைப் பெற்றுக் கொண்ட சர்.சி.பி.யோ, ‘‘தமிழ் வளர்ச்சிக்கும், வடமொழி வளர்ச்சிக்கும் கொடுப்பதாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று, அதே கூட்டத்தில் பேசி இருக் கிறார்.
இதுபற்றி ‘விடுதலை' ஒரு தலையங்கம் தீட்டியது.
அதில் ஒரு பகுதி இதோ:
‘‘பணம் கொடுத்தவர் தமி ழுக்கு என்று கொடுத்தால், வாங்கிக் கொண்டவர் வட மொழிக்கு என்று சொல்லத் தைரியம் வருமா என்று யோசித்துப் பாருங்கள். இந்த நாடகம் நடக்கும்போது அங்கு இருந்த தமிழ் மக்கள் யார் யார் என அறிய வாசகர்கள் ஆசைப்படக் கூடும். செட்டி நாட்டு ராஜா அவர்கள், செட்டி நாட்டு குமார ராஜா அவர்கள், சர் ஷண்முகம் அவர்கள் உள்பட அனேக ஆயிரம் தமிழ் மக்களும் ஆவார்கள்.
இதில் 1,00,001 ரூபாய் கொடுத்த செட்டியார் அடைந்த ஏமாற்றத்தை நாம் குறிப்பிட வரவில்லை. 1,00,001 ரூபாயைப் பெற்றுக் கொண்டு, இத்தனைப் பேர் முன்னிலை யில், ‘‘நான் இதை சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கொடுத்த அடை யாளமாகக் கருதுகிறேன்'' என்று சொன்ன சர்.சி.பி.யின் வீரத்தனத்தை மெச்சுகிறோம்.'' (இது 14.9.1943 ஆம் தேதி, ‘மெயில்' ஏட்டில் இருக்கிறது).
இந்த மாதிரி ஒரு வீரன் தமிழரில், ‘‘வீரத் திராவிடரில் இருக்கிறார்களா?'' என்று கேட் கிறோம். இந்த மாதிரி இல்லா விட்டாலும், ‘‘ஓ! சர்.சி.பி. அவர் களே, தாங்கள் செட்டியார் சொன்னதை சரியாகக் கவ னிக்கவில்லை போல் இருக் கிறது. அவர் ரூ.1,00,001 ரூபாய் தமிழுக்குக் கொடுத்தார்'' என்று ஞாபகப்படுத்தவாவது ஒரு தமிழன், சுத்தத் தமிழன் யாராவது இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்'' (‘விடுதலை' 14.9.1943, தலை யங்கத்திலிருந்து).
அண்ணா சொன்னதை இந்த இடத்தில் ஒருமுறை சிந் தித்துப் பாருங்கள் - பொருள் புரியும்!
- மயிலாடன்
- விடுதலை நாளேடு 29 6 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக