பக்கங்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

இரு செய்திகள்! பார்ப்பனர் தன்மை


அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழாவில் கலந்துகொண்ட திருவாங்கூர் மகாராஜா ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அத்தொகை யினை வடமொழிப் பயிற்சிக் கும், வடமொழி சாஸ்திர ஆராய்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது கருத் தாகக் கொண்ட திட்டம் ஒன் றைக் குறிப்பு அனுப்பினார். அந்தக் காரியத்திற்காக நன்கொடையின் வரும்படி செலவழிக்கப்படுவதாய் இருந்தால், அந்த நன்கொடை யைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும், வட மொழி பரப்பப்பட வேண்டும் என்கின்ற கருத்துடையவர் களுக்கு ஆயுதமாக அண்ணாமலை யுனிவர்சிட்டி இருக்கக் கூடாது என்றும் பெரியார் வலியுறுத்தினார். திருவாங்கூர் மகாராஜா அவர்களுக்கும், வள்ளல் அண்ணாமலையார் அவர் களுக்கும், அறிஞர் இரத்தி னசாமி அவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த் தையின் பலனாய், மகாராஜா தான் அளித்த நன்கொடை யைப் பல்கலைக் கழகத்தார் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார். மாணவர் விடுதி யினை விரிவுபடுத்த அத் தொகையினைப் பயன்படுத் துவது என்று நிர்வாகம் முடிவெடுத்ததைப் பெரியார் பாராட்டினார். ‘‘போற்றுங்கள்'' என்று தலைப்பிட்டு 12.7.1943 ‘விடுதலை'யில் தலையங் கமே எழுதினார்.
வடமொழிக்கு செலவிடக் கூடாது என்பது அதன்மீது இனம் தெரியாத வெறுப்பால் அல்ல - விவேகானந்தர்  கூறி னாரே நினைவிருக்கிறதா?
‘‘மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங் களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்த தும் - இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட் டங்களும் தொலைந்து போகும்'' (‘‘தமிழர் மதம்'', மறைமலையடிகள், நூல் பக்கம் 24) என்று விவேகா னந்தரே கூறியதை நினை வூட்டிக் கொண்டால், தந்தை பெரியாரின் கணிப்பு எத்தகை யது என்பது விளங்காமற் போகாது.
இன்னொரு தகவல்:
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1953 இல் மலேசியா சென்றி ருந்தபோது, அந்த நாட்டு அரசு, இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை மலேயா பல்கலைக் கழகத்தில் பாட மாக வைக்க இவரிடம் கருத் துக் கேட்டனர். அவர் சமஸ் கிருத மொழியைப் பாடமாக வைக்கலாம்; தமிழைத் துணைப் பாடமாக வைக்க லாம் என்று பரிந்துரை செய்தார். மலேயா பல்கலைக் கழகமும், அந்நாட்டு அரசும் அவர் கருத்தை ஏற்க மறுத்துவிட்டு, தமிழைப் பாட மொழியாகச் செய்தனர். நீல கண்ட சாஸ்திரியின் சமஸ் கிருத வெறி மலாயாவில் மூக் கறுபட்டது. (‘நம்நாடு', 4.5.1953).
இரு தகவல்கள் - இதற் குள்ளிருக்கும் இனவுணர்வை யும், மொழி உணர்வையும் புரிந்துகொள்வீர்!
- மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக