பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூன், 2020

திராவிட_இயக்க_முன்னோடி

தாழ்வுற்றுப் பாழ்பட்டுக் கிடக்கும் சமூகத்தைக் கைதூக்கிவிட அவ்வப்போது புரட்சியாளர்கள் உதிக்கத் தவறுவதில்லை. வீழ்ந்து கிடந்த தமிழகத்தைத் தன்னிரகரில்லாத மறுமலர்ச்சிப் பணிகளால் எழுச்சியுறச் செய்ய முயன்றவர்களில் அயோத்திதாசப் பண்டிதர் முதன்மையானவர்.

#அயோத்திதாச_பண்டிதர்
இயற்பெயர்: காத்தவராயன்
தந்தை: கந்தசாமி பண்டிதர்
மனைவி: தனலட்சுமி (ரெட்டைமலை சீனிவாசன் தங்கை)
பிறப்பு: 20/05/1845
ஊர்: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி
மொழி புலமை: தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம்
தொழில்: சித்த மருத்துவர், ஆசிரியர், பதிப்பாளர்
மறைவு: 05/05/1914
தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர் அயோத்திதாசர். பகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், போன்ற கொள்கைகள் கொண்டவர் எனவே இவரை பெரியார் தனது முன்னோடி என்றார்.

இந்தியாவில் பேரரசை நிறுவிய அசோகருக்கு பிறகு, தமிழகத்தில் பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்
அயோத்திதாச பண்டிதர் 
இலக்கிய, சமூக, சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமூகம் படைக்கும் பணியில் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர்; தென்னிந்தியாவில் தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர்.  

“திராவிடர்_கழகம்” என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்தவர்.

அயோத்திதாச_பண்டிதர் 
1870இல் தனது 25ஆவது வயதில் “அத்வைதானந்த சபை'' ஒன்றைத் தொடங்கி தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்துச் சாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார். மலையினப் (தோடர்)பெண்ணைக் கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
அயோத்திதாச_பண்டிதர்
இவர் சில காலம் இரங்கூனில் (பர்மிய நாடு) வாழ்ந்தார். இங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் அவரது மனைவியும் நோயினால் இறந்து போயினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரிக்கு திரும்பியவர், தனது உறவினர் இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
1881ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, தாழ்த்தப்பட்டவர்களை "ஆதித் தமிழன்' என்று பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்.

1986ஆம் ஆண்டு ஆதித்தமிழர்கள் (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார்.

1882ஆம் ஆண்டு “திராவிடர் கழகம்'' என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்த ஜான்ரத்தினம், 1885ல் “திராவிட_பாண்டியன்'' என்ற இதழைத் தொடங்கினார்

அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்  
அரசியல், பொருளாதார ரீதியில் நசுக்கப்படும் தலித் மக்களின் விடுதலையில் அதிகமான அக்கறை செலுத்தினார்.

1890ஆம் ஆண்டு நீலகிரியில் “திராவிட_மகாஜன_சபை'' என்ற அமைப்பை துவங்கி ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்தார். அமைப்பின் சார்பில் 1891ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை நடத்தி தீர்மானங்கள் இயற்றினார்.

1892ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மகாஜன சபை மாநாட்டில், நீலகிரியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு "ஒடுக்கப்பட்டோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும்" என்று குரல் கொடுத்தார். இதில் கலந்து கொண்ட ஆதிக்க சாதியினர் அவரை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பினர்.

கல்வியால் மட்டுமே தலித் மக்கள் முன்னேற முடியும் என்று கருதி, பிரம்ம ஞான சபை ஆல்காட் அவர்களுடனான நட்பை பயன்படுத்தி 1892இல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 பள்ளிகளை கொண்டு வந்தார். 

1894ல் சென்னை மற்றும் வட ஆர்க்காடு மாவட்டங்களில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.

"திராவிட மாகாஜன சபை" சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றி தலித்துகளுக்கு இலவசக் கல்வி, கோயில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 முற்போக்குக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பினார். அந்த மனு மறுக்கப்பட்டு அலட்சியப் படுத்தப்பட்டது.
இந்து மதம் மீதும், பார்ப்பனியத்தின் மீதும் வெறுப்புற்றுப்போன அவர், இறைக் கொள்கை, சடங்கு வாதம், பார்ப்பனிய ஆதிக்கம், மத, பண்பாட்டுத் தளங்கள் ஆகியவைகளைக் கேள்விக்குள்ளாக்கி சுய சிந்தனை அடிப்படையில் புதிய தேடல்களுக்குத் தயாரானார். பகுத்தறிவை நோக்கிப் பயணப்பட்டார்.

1902 ஆம் ஆண்டு "தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தை" ஏற்படுத்தினார். 

19/06/1907 அன்று “ஒரு பைசாத் தமிழன்'' என்ற பெயரில் ஒரு வார இதழைச் சென்னை இராயப்பேட்டையில் தொடங்கி வெளியிட்டார். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

ஒரு_பைசாத்_தமிழன்
ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்கு பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார் எனத் தன் இதழுக்கு பெயர்க் காரணம் கொடுத்தார்

1908ஆம் ஆண்டு இதழின் பெயரைத் ”தமிழன்'' என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார்.  

தமிழகத்தில் தமிழர்களுக்கென்று எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் "தமிழன்" இதழ் மூலம் பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூகநீதி மற்றும் சுயமரியாதை இவற்றை மையமாகக் கொண்டு இதழை நடத்தினார். 

"இந்தி மொழி இந்து சாதி மதத்தோடு தொடர்புடையது எனவே அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது ஆங்கிலமே தகுதியுடையது" என்று 1911ல் எழுதினார்

சுதேசிமித்திரன் போன்ற இதழ்கள் இந்திய விடுதலை பற்றி எழுதியபோது இவர் முதலில் இங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை வேண்டுமென்று எழுதினார்.

ஆதிக்க சாதியினர் 'ஒற்றுமை' பேசியபடி ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றபோது, "சுத்த ஜலம் மொண்டு குடிக்க விடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்! உங்கள் சத்துருக்கள் செய்த தீங்கினை மறந்து விடாதீர்கள்" என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்து மதத்தில் தலித்துகளை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பண்பாட்டு, மதத்தடைகளைத் தூக்கியெறிவதுதான் விடுதலைக்கானது.
- முகநூல் செய்தி மூலம் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக