பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

இந்தக் கடவுளா உங்கள் கடவுள்?

 

05.06.1948 -குடிஅரசிலிருந்து..

கடவுளுக்கே இந்தக் கதியானால் அவர்கள் தம் கதி என்னவாகும் என்று அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களாஅப்புறம் ஒரு நாள் வெளியே போவார்களாஉங்கள் புருஷர்கள்வேறு மங்கையர்களைத் தேடிஅந்தச் சாமியை அடித்து வைத்தவன் நம்மவன்அந்தச் சாமிக்கு உயிர் பிச்சை கொடுக்க கும்பாபிஷேகம் நடத்த உதவியது நம்முடைய பொருள்.

அந்த சாமிக்கு அரிசிபருப்பு அழுது வருவது நாம்அப்படியிருக்க நாம் அதைத் தொடக் கூடாதென்று அந்த பார்ப்பான் கூறுகிறானென்றால் அப்படிப்பட்ட இடத்திற்கு நாம் போகலாமாஅதற்குத் தேங்காய் பழம் படைக்கிறீர்களேதுணிமணி வாங்கித் தருகிறீர்களேஅதை அந்த குழவிக் கல்லா அனுபவிக்கிறதுகுழவிக் கல்லால் சாப்பிட முடியுமாசாப்பிட்டால் ஜீரணமாகி வெளிக்குப் போகிறதாஎல்லாவற்றையும் பார்ப்பான்தானே அனுபவிக்கிறான்பாடுபட்ட பணத்தை அப்படி விரயமாக்கலாமா நீங்கள்கடவுள் என்றால் அது யோக்கியமாகஒழுக்கமாக பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டாமா?

பாடுபடும் நீங்கள் பட்டினி கிடக்கபடிக்க வசதியின்றித் தற்குறிகளாயிருக்கஏழைகளாககீழ் ஜாதி மக்களாக இருக்கபாடுபடாத பார்ப்பனத்திகள் சோம்பேறிகளாகஅய்.சி.காரர்களின் மனைவிகளாகபட்டாடை உடுத்தி மேனி மினுக்குடன் உயர் ஜாதி மக்களாக வாழ அனுமதிக்கும் கடவுளா உங்களுக்குக் கடவுள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக