பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

மதமாற்றத் தடைச் சட்டம்: 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கிக் கொண்டு செல்லும் பா.ஜ.க. அரசு

 

புஷ்யமித்திர சுங்கன்மவுரியப் பேரரசை முடிவிற்கு கொண்டுவந்து சமத்துவமான பவுத்தத்தை அழித்து சனாதன நச்சைத் தூவியவர்இவரது காலத்தில் மனுச் சட்டங்கள் இயற்றப்பட்டது  என்று  கூறப்படுகிறதுஅதில் முக்கியமானது திருமணம் சமூகத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் அந்த சமூகத்திற்குள் தான் திருமணம் செய்யவேண்டும் என்று கூறி அவ்வாறு செய்யதவர்கள் மீது கடுமையான தண்டனைகளை தரச்செய்தான்.

சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் அதே புஷ்யமித்திர சுங்கன் தலைமுறையினர் ஆட்சிக்கு வந்ததால் அவன் செய்த அதே செயலைச் சட்டமாக்கி உள்ளனர்.  அதற்கு பெயர்தான் மதமாற்று தடுப்புச்சட்டம்.

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மதம் கடந்த காதல் ஜோடிகள் டில்லியில் உள்ள ஏதாவது ஓர் ஆதரவு அமைப்பின் உதவியை நாடுகின்றன.

இந்து - முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த ஜோடியினர் தங்கள் வீட்டில் திருமணத்துக்கு அனுமதி மறுக்கும்போது வழக்கமாக 'தானக்அமைப்பைத் தேடி வருகின்றனர். 20 - 30 வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசு மாறு அல்லது சட்ட உதவி பெற உதவுமாறு கோருகின்றனர்.

தானக் அமைப்பிற்கு வரும் ஜோடிகளில் 52 சதவீதம் பேர் முஸ்லிம் ஆணை திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக இருக்கின்றனர்; 42 சதவீதம் பேர் இந்து ஆணை திருமணம் செய்ய விரும்பும் முஸ்லிம் பெண்ணாக இருக்கின்றனர்.

``இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம் குடும்பத்தினர் தத்தமது மதங்களைக் கடந்து திருமணம் செய்து கொள்வதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்'' என்று 'தானக்நிறுவனர் ஆசிப் இக்பால் கூறுகிறார்.

``அந்தத் திருமணத்தை நிறுத்த அவர்கள் எந்த அள வுக்கும் செல்கிறார்கள்தங்கள் மகள் மீதே குறைகூறும் அள வுக்கு கூட பெற்றோர்கள் செல்கின்றனர்இதுபோன்ற உறவு கள் ஏற்படாமல் குறைக்க `லவ் ஜிகாத்என்ற பதத்தை இன் னொரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்'' என்று அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்வதன் மூலம் இந்து பெண்களை மதம் மாறச் செய்வதாக முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டு வதற்கு அடிப்படைவாத இந்துக்கள் பயன்படுத்தும் வார்த்தை `லவ் ஜிகாத்என்பதாக உள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இந்து பெண் ஒருவரை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முயற்சித்தார் என்று கூறி முஸ்லிம் ஆண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர் - லவ் ஜிகாத்தை தடுப்பதாக கூறும் புதிய மதமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் அவர்.

இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி ஆளும் நான்கு பிற மாநிலங்களும் இதேபோன்ற சட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. ``வஞ்சனைமோசடி மற்றும் தவறான நம்பிக்கை ஏற்படுத்துதலை'' தடுக்க இதுபோன்ற சட்டங்கள் தேவைப்படுகின்றன என்று கட்சியின் செய்தித் தொடர் பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

``இந்து ஆண் ஒருவர் முஸ்லிம் பெண்ணை மணந்தால்அது காதல் என்று இந்து அமைப்பினர் கூறுகின்றனர்ஆனால் அதற்கு எதிரான முறையில் இந்துப் பெண்ணை முஸ்லிம் ஆண் மணந்தால் அது கட்டாயத்தின் பேரில் நடப்ப தாகச் சொல்கிறார்கள்'' என்று டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாளர் சாரு குப்தா தெரிவித்தார். ``லவ் ஜிகாத் என்ற தவறான நம்பிக்கை'' குறித்து அவர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

குடும்ப உறவுமதம்ஜாதி ஆகியவை ஆதிக்கம் செலுத் தும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் காதல் என்பது கஷ்டமானதாகஆபத்து நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

இருந்தாலும்கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் பல நூறாண்டுகளாக சமூக எதிர்ப்புக்கு ஆளகியுள்ள காதலில் இளம் பெண்களும்ஆண்களும் ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றனர்கைப்பேசிகள்மலிவான செலவில் இன்டர்நெட் டேட்டா கிடைப்பதுசமூக நெட்வொர்க் தளங்கள் ஆகியவை காரணமாகமுன் எப்போதையும்விட அவர்கள் அதிக அளவில் காதலில் விழுகிறார்கள்.

``யாரைக் காதலிக்கலாம்எப்படி காதலிக்கலாம்எந்த அளவுக்குக் காதலிக்கலாம்'' என்பவை ``காதல் சட்டங்களாக'' இருக்கின்றன என்று புக்கர் பரிசு பெற்ற The God of Small Things என்ற தன் நாவலில் எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார்காதலர்கள் பிரிவு பற்றிக் கூறும்போது இப்படி குறிப்பிடுகிறார்.

ஒரு துணைவர்பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டஇரு பாலருக்கு இடையிலான மற்றும் ஒரே சாதியிலான திருமணங்கள்தான் முறையானவையாகக் கருதப்படுகின்றனஇந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவையாக இருக்கின்றனமதங்களைக் கடந்து திருமணம் செய்வது அபூர்வமானதாக இருக்கிறது. 2 சதவீதத்துக்கும் சற்று கூடுதலாகத்தான் மதங்க ளைக் கடந்த திருமணங்கள் இருப்பதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக இந்து குழுக்கள் அவ்வப் போது ``லவ் ஜிகாத்`` என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாக பலரும் கருதுகிறார்கள்இந்தியாவில் இதுபோன்ற மதங்க ளைக் கடந்த திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பது வரலாற்றில் நீண்ட காலமாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது.

1920கள் மற்றும் 1930களில் மத மோதல்கள் அதிகரித்து வந்த பின்னணியில்வட இந்தியாவில் இந்து தேசியவாத குழுக்கள் இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் ``கடத்திச் செல்வதாக'' எதிர்ப்பு தெரிவித்துஅவர்களின் இந்து மனைவி களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்து பெண்களை முஸ்லிம்கள் கடத்துவதாகச் சொல்லப்படும் நிகழ்வுகளைத் தடுப்பதற்காக சுதந்திரத்திற்கு முன்பு கிழக்கு பிரசிடென்சி அய்க்கிய மாகாணம் என்று அழைக்கப்பட்ட இன்றைய உத்தரப் பிரதேசத்தில்  ஓர் இந்து குழு உருவாக்கப்பட்டது. 1924இல் இந்து சிறுமியை ``கடத்தி சம்மதிக்கச் செய்து'' கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக கான்பூர் நகரின் முஸ்லிம் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்ததுஅதிகாரியின் வீட்டில் இருந்து இந்து பெண்ணை ``மீட்க வேண்டும்'' என்று அந்தக் குழு கோரிக்கை விடுத்தது.

காலனி இந்திய நாடாளுமன்றத்திலும் இந்த விஷயம் பற்றி விவாதம் நடந்ததுஇப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்அப்போதைய காங்கிரஸ் கட்சி ``கடத்திச் சென்று கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்பெரும் எண்ணிக்கையில் மதமாற்றம் செய்வது அர்த்தமற்றது அல்லது செல்லக் கூடியதாக இருக்காதுமக்கள் தங்கள் விருப் பத்தின்படியான வாழ்க்கைக்குத் திரும்ப ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்'' என்று தீர்மானம் நிறை வேற்றியது.

ஆகஸ்ட் 1947இல் இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட்ட போதுமுஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்ற சமயத்தில் சுமார் 10 லட்சம் பேர் இறந்தனர், 15 மில்லியன் பேர் குடி பெயர்ந்தனர்அங்கிருந்து சீக்கியர்களும்இந்துக்களும் திரும்பி வந்தனர்வன்முறையில் பெரும்பாலும் பெண்கள் தான் பாதிக்கப்பட்டனர்.

சமீப காலங்களில் தேர்தலுக்கு முந்தைய சமயங்களில் வாக்காளர்களை ஒன்றுதிரட்ட இந்து தேசியவாத குழுக்கள் ``லவ் ஜிகாத்'' என்ற பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. 2014இல் உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது இதுபோல செய்தனர்.

சுவரொட்டிகள்வதந்திகள் மூலமாக ``திட்டமிட்டு பிரச்சாரம்'' செய்வது இந்து குழுக்களின் பாணியாக உள்ளது என்று பேராசிரியர் குப்தா தெரிவித்தார். ``இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய் வது மற்றும் திருமணம் செய்வதுவீட்டைவிட்டு வெளியேறு வதுகாதலில் ஈடுபடுவதுகவர்ச்சியாகப் பேசி மயக்குவதுமதமாற்றம் செய்வது'' போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்று இந்தக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

வலதுசாரி ஆர்.எஸ்.எஸ்அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ``லவ் ஜிகாத்'' பற்றி முதல்பக்க கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ``நிரந்தரமான காதல் இருக்கட்டும்லவ் ஜிகாத் ஒருபோதும் வேண்டாம்'' என்ற முழக்கத்தை எழுப்பு மாறு மக்களை அதில் ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம் ஆண்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்ற ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றனஇந்து பெண்களை ஈர்ப்பதற்காக ``உலக அளவிலான இஸ்லாமிய சதி'' நடக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்து பெண்களை ஈர்க்க அவர்களுக்கு ஆடம்பர உடை கள்கார்கள்பரிசுகள் வாங்கவும்இந்துக்களைப் போல நடிக்கவும் முஸ்லிம் ஆண்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ``இந்துக் களில் எளிதில் பிறரை நம்பும் பெண்களை குறிவைத்து உலக அளவில் இதுபோன்ற லவ் ஜிகாத் நடைபெறுகிறது'' என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ``பெண்களின் பெயரால் அரசியல் மற்றும் மத ரீதியில் மக்களை ஒன்று திரட்டுவதற்கான முயற்சியாக இது உள்ளது'' என்று பேராசிரியர் குப்தா கூறுகிறார்.

கடந்த கால மற்றும் தற்போதைய ``லவ் ஜிகாத்'' பிரச்சாரங் களுக்கு இடையில் ஒருமித்த விஷயங்கள் நிறைய இருக் கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்ஆனால் காலம் மாறும்போதுஆளும் பாஜக முன்னெடுப்பதால்இந்தப் பிரச்சாரம் அதிக தீவிரமானதாக இருக்கிறது.

``சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இதுபோன்ற செய்தி கள்பத்திரிகைகளின் உள்பக்கத்தில் ஓரத்தில் பிரசுரிக்கப்படும்அந்த பதற்றங்களை பெரிதுபடுத்தக் கூடிய பிரதான அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் கிடையாதுஇப்போது இது முதல்பக்கத்தில் இடம் பெறும் செய்தியாக உள்ளதுஇந்தச் சட்டங்களை அமல் செய்வதில் அரசு தீவிர ஈடுபாடு காட்டு கிறதுஇந்து பெண்களை திருமணத்திற்காக முஸ்லிம் ஆண் கள் மதம் மாற்றுகிறார்கள் என்று செய்திகளைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களும்செய்தி அனுப்பும் செயலிகளும் பயன் படுத்தப் படுகின்றன'' என்றும் பேராசிரியர் குப்தா தெரிவித்தார்.

இந்தியாவின் சிறப்பு திருமண சட்டத்தின்படிமதங்களைக் கடந்து திருமணம் செய்யஜோடியினரின் விவரங்களுடன் அதிகாரிகளிடம் ஒரு மாதத்திற்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும்அந்த நடைமுறையில் இருந்து ``தப்புவதற்காக'' அவர்கள் மதம் மாறும் முடிவுக்கு வருகிறார்கள் என்று பலர் கூறுகின்றனர்எனவே தங்கள் திருமணத்தை நிறுத்த பெற்றோர்கள் தலையிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள்.

மதங்களைக் கடந்த திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்ற வகையில் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதால்பெற்றோரும்அதிகாரிகளும் இளைஞர்க ளுக்கு மிரட்டல் விடுப்பவர்களாக இருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதே சமயத்தில்காதலில் ஈடுபடும்போது மதம்ஜாதி யைக் கடந்துவீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளநிறைய ஆண்களும்பெண்களும் துணிச்சலாக முடிவு எடுக்கின்றனர்இதுபோல ஜோடிகள் திருமணம் செய்வதை அரசே எதிர்ப்பதால் இணையர்கள் தற்கொலை முடிவை எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவந்து நாட்டை பின்னோக்கி அழைத்துசென்றுள்ளது மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆளும் பாஜக அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக