பக்கங்கள்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு சதுராடும் ஆரியம்!


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆம் அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எந்த மாநிலத் திலும் பேசப்படாத மொழி ஒன்று உண்டு என்றால், அது சமஸ்கிருதம் மட்டுமே என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
சமஸ்கிருதம் எங்கே?
இந்தி மொழி - டில்லி, உ.பி., பீகார், அரியானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார் கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.
அஸ்ஸாமி - அஸ்ஸாம் மாநிலத்திலும், அதனை ஒட்டிய வடகிழக்கு மாநிலத்திலும் பேசப்படும் மொழி
வங்க மொழி - மேற்குவங்கம், மற்றும் அஸ்ஸாமில் பேசப்படும் மொழி.
டோகிரி மற்றும் உருது ஜம்மூ-காஷ்மீரில் பேசப்படும் மொழி
குஜராத்தி - குஜராத் மற்றும் வட மகாரஷ்டிராவில் சில இடங்களில் பேசப் படும் மொழி
கன்னடம் - கருநாடகம், மராட்டிய மாநிலத்தின் சிலபகுதிகளில் பேசப்படும் மொழி
கொங்கனி - கோவா மாநிலத்தில் பேசப்படும் மொழி
காஸி - மேகாலயா மாநிலத்தில் பேசப் படும் மொழி
மலையாளம் - கேரளாவில் பேசப்படும் மொழி
மராட்டி - மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி
மணிப்பூரி - மணிப்பூர் மாநிலத்தில் பேசப்படும் மொழி
மிசோ - மிசோராம் மாநிலத்தில் பேசப் படும் மொழி
ஒரியா - ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் மொழி
பஞ்சாபி - பஞ்சாப் மற்றும் அரியா னாவில் பேசப்படும் மொழி
தமிழ்  - தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வில் பேசப்படும் மொழி
தெலுங்கு மொழி - ஆந்திரா, தெலுங் கானா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பேசப்படும் மொழி
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வரையறுக்கப்பட்ட இந்திய மக்கள் பேசும் மொழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் சமஸ்கிருதம் இல்லை.
இந்திய அளவில் அது பேசப்படுவ தாகக் கூறப்படும் மக்களின் எண்ணிக்கை வெறும் 14,346 ஆயிரம் மட்டுமே. அதுவும் அன்றாட வாழ்க்கையில் பேசுகிறார்கள் என்றுகூட சொல்ல முடியாது. கோவில் களில் அர்ச்சனைகளில், குடமுழுக்குகளில், கல்யாணம், கருமாதி போன்றவைகளில் மந்திரங்களாகச் சொல்லப்படும் அளவுக் குத்தான் சமஸ்கிருதம் ஏதோ இருந்து வருகிறது.
இந்த நிலையில், சமஸ்கிருதத்துக்காக மத்திய அரசு கொட்டி அழும் மக்கள் வரிப் பணமோ கொஞ்சநஞ்சமல்ல!
2014
2014 ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக பல்கலைக்கழகங்களுக்கு ரூ.170 கோடி  ஒதுக்கீடு
சமஸ்கிருத வாரம் கொண்டாட 470 கோடி ரூபாயை 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளது
அய்.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற் காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்ப தாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்தார்.
2015
23.7.2015 சமஸ்கிருத மொழிவளர்ச்சிக் காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மனிதவளத் துறை அமைச்சகம் ரூ.320 கோடி ஒதுக் கியது.
2015 ஆம் ஆண்டு ஜூலையில் பாங்காக்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டிற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பீகார் தேர்தலை ஒட்டி பீகார் மாநிலத் தில் சமஸ்கிருத்தில் சாமியார்களை விட்டு பிரச்சாரம் செய்த பாஜக, தேர்தல் விளம்ப ரங்களை சமஸ்கிருதத்திலேயே கொடுத்தது.
2016
2016 ஆம் ஆண்டு ரூ.70 கோடி ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற சமஸ்கிருத மொழி வளர்ச்சித் துறைக்கு - புதிய ஆய்வு மாணவர்களுக்குத் தேவை யான உதவிகளைச் செய்ய ஒதுக்கியுள்ளது
சமஸ்கிருத வளர்ச்சிக்கென்று வேதிக் போர்ட் என்ற ஒரு தனிப்பிரிவை உரு வாக்கும் திட்டம்.
கேரளாவில் மாணவர்கள் சேர்க்கை யில்லாமல் அய்ந்து சமஸ்கிருதப் பள்ளிகள் மூடப்பட்டன.
சமஸ்கிருத பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு
வட மாநிலங்களில் உருது ஆசிரியர் களுக்கு கட்டாய சமஸ்கிருத பயிற்சி
கேந்திரிய வித்யாலயாக்களில் மூன் றாவது மொழியாக இருந்த ஜெர்மனியைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை குடியேற்றியுள்ளார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் சமஸ்கிருத, இந்தி மொழிப் பெயர்கள்தான்.
2014ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை
மோடி அரசின் திட்டங்கள்
1. அடல் பென்சன் யோஜனா
2. பசத் ஊர்ஜா யோஜனா
3. தீன் தயாள் திவ்யாங் புனர்நிவாஜ் யோஜனா
4. கிராம் ஜோதி யோஜனா
5. கிராமின் பந்தனர் யோஜனா
6. ஜனனி சுரக்ஷா யோஜனா
7. யுவாஊர்ஜா யோஜனா
8. கிஷோர் வைக்யஞ்க் ப்ரொஷ்தன் யோஜனா
9. ப்ரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா
10. பிமா யோஜனா
11. ஜீவஜோதி யோஜனா
12. ஜனதன் யோஜனா
13. கிராம் சடக் யோஜனா
14. ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா
15. ராஷ்டிரிய சுவஸ்திக் விகாஷ் யோஜனா
16. ஷக்சம் யோஜனா
17. சம்பூர்ண கிராம் ரோஜ்கார் யோஜனா
18. ஸ்வபிமான் பாரதி
19. ஸ்வர்ண ஜெயந்தி கிராம்ஸ்வர் ஊர்ஜா யோஜனா
20. ஸ்வலாபமபன்
21.. உதிஷா யோஜனா
22..சுகன்யா சமருத்தியோஜனா
23. ப்ரதான் மந்திரி அவாஜ் யோஜனா
24. அந்தயோதா அன்ன யோஜனா
25. ப்ரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா
26. பிரதான் மந்திரி உஜவல் யோஜனா
27. ஸ்வட்ச் பாரத்
28. நயி நிவாஜ் யோஜனா.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் மேனாள் ஆணையர் கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் 13 பேர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, சமஸ்கிருத வளர்ச் சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை பத்து ஆண்டு களுக்கான திட்டங் களாம். நாட்டில் எத்தனையோ மொழிகள் இருக் கின்றன. சில அழிவின் விளிம்பில் தொற்றிக் கொண்டுள் ளன.
அந்த மொழி களை உயிர்ப் பிப்பது குறித்தோ, வளர்ப்பது குறித்தோ மத்தியில் உள்ள மோடி அரசுக்கு அக்கறையில்லை. ஏற்கெனவே செத்துச் சுண்ணாம்பாகி விட்ட சமஸ்கிருதத்தை வாழ வைக்கத் திட்டம் தீட்டுகிறார்களாம். (தேவ பாஷையின் கெதியைப் பார்த்தீர்களா).
10 ஆண்டுகளுக்கான சமஸ்கிருத மொழிவளர்ச்சிக்கு என கோபால்சாமி அய்யங்கார் குழு கொடுத்துள்ள அறிக்கையின் ஒரு துளி
சமஸ்கிருத்தை பள்ளிகளில் கற்பிக்கும் போது ஆசிரியர் சமஸ்கிருத்திலேயே பேசவேண்டும். மாணவர்களுக்கு சமஸ் கிருதத்தில் பேசி அதற்கான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் வகுப்பறை, ஆய்வு அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்
மாணவர்கள் பள்ளிகள் மட்டுமல்லாது வெளியிடங்களிலும் சமஸ்கிருதம் பேச வேண்டும். சமஸ்கிருதம் பேசுவதை கேலி செய்தால் அதற்காக கோபப்படாமல் சமஸ்கிருத்தை தொடர்ந்து பேசவேண்டும்
பொதுவிடங்களில் முக்கிய பொருள் குறித்து விவாதிக்கும் போது சமஸ்கிருதத் திலேயே பேசவேண்டும்
சிறு சிறு குறிப்புகளை சமஸ்கிருதத்தில் எழுதப் பழகவேண்டும். பொதுவிடங்களில் (வங்கி, பேருந்து, பூங்கா) சமஸ்கிருதத் திலேயே உரையாடி அதற்கான விளக்கத்தை பிற மொழியில் கூறவேண்டும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் சமஸ்கிருதத்தில் தந்து அதற்கான விளக்கத்தை பொது மொழியில் தரவேண்டும் என்கிறது அய்யங்கார் குழு.
பள்ளிக் கல்வி, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல், சமூகவியல் ஆய்வு உள்பட அனைத்துக் கல்வித் துறை களிலும் சமஸ்கிருதத்தில் பாடத் திட்டங்கள் வகுப்பது, அய்.அய்.எஸ்.இ.ஆர். (Indian Institute of Scientific Education Research) மத்தியப் பல்கலைக் கழகம், என்.அய்.டி., அய்.அய்.டி., அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்பட  சமஸ்கிருதப் பிரிவுகள் துவக்கப்பட உள்ளன. போர்க்கால வேகத்தில் பார்ப்பனீய மொழி பரப்பப்படு வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சமஸ்கிருதம், வேதக் கல்வி நிறுவனங் களை நிருவகிப்பதற்கென்றே தனி வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வேதக் கல்வி வாரியம் (Vedic Education Board) ஒன்று துவங்கப்படுகிறது. இதுகூட கோபால்சாமி அய்யங்கார் குழுவின் பரிந்துரைகளுள் ஒன்றே!
அரியானா மாநிலத்தில் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சமஸ்கிருதப் பயிற்சி அளிக்கப்பட்டு, உருது மொழி பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட ஏற்பாடாகி வருகிறது.
‘‘ஆக்ராவில் 2800 துவக்கப் பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் உருதுமொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. 150 ஆசிரியர்கள் உருது மொழியைக் கற்பித்து வருகின்றனர். அந்த உருது ஆசிரியர்களுக்கு ஆக்ரா நிருவாகம் சமஸ்கிருதப் பயிற்சியை அளித்து வருகிறது.
மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணங்களாகப் பிளவுபடுத்தியதும், தமிழில் ஊடுருவி தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளை  சிதைத்து உருவாக்கியதும் பார்ப்பனர்களின் சமஸ்கிருதமே - ‘‘இந்தியாவின் ஆட்சி மொழிக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே’’ என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் ‘ஞானகங்கை’யில்  (Bunch of Thoughts) குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ். எஸின் கையாளாகிய பி.ஜே.பி. மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளதால், சமஸ்கிருதத்தை எல்லா வகையிலும் திணிக்கப் பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு சதுராடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தந்தை பெரியார் கைத்தடியைக் கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்.


சான்ஸ்கிருதி
இந்துக்கள் என்போர் தம்மளவில் ஒரு தேசமாகவும், (Nation), ஜாதி(Caste) ஆகவும் மட்டுமன்றி, ஒரு பொதுவான சன்ஸ்கிருதி (Sanskitriti) பண்பாட்டிற்கு உரியவர்கள் என்றார் சாவர்க்கர். இந்துக்களின் தாய்மொழி சமஸ்கிருதம்தான் என்றார் அதே சாவர்க்கர்.
இந்த அடிப்படையில்தான் இன்றைய இந்துத்துவா பி.ஜே.பி. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மையில் இந்தியாவில் பல இனங்கள், பல பண்பாடுள்ள மக்களாகத்தான் வாழ்கிறார்கள்.
இந்து மதத்துக்குள்ளேயே பல முரண்பாடுகள், பல கலாச்சாரம் உள்ளவர்கள், பல மொழிகளைப் பேசக் கூடியவர்களாக இருப்பதை  உணர்ந்தால், சாவர்க்கரின் கூற்று பைத்தியக்காரத்தனமானது - உண்மைக்கு மாறானதே!
-விடுதலை,13.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக