பக்கங்கள்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

கேள்விகள் இங்கே - பதில்கள் எங்கே?மின்சாரம்



இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்த சிலர் புறப்பட்டுள்ளனர். அதில் ஆடிட் டர் குருமூர்த்தி என்பவர் முன்வந்து தோள் தட்டுகிறார். ஊடகங்கள் அவர் கள் கையில் இருப்பதால் பத்திப் பத்தியாக வெளியிடுகின்றன.
அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந்த அனைவர்களுக்கும், குருமூர்த்தி போன்றோர் தெரிவித்துவரும் தகவல் களின் அடிப்படையில் சில கேள்விகள் இதோ:
1. ஜாதியை ஒழிக்க முடியாது - இது யதார்த்தம் என்று சொல்லுவதிலிருந்து ஒன்று தெளிவாகி விட்டது. இப்பொழு தெல்லாம் ஜாதியை யார் பார்க்கிறார்கள் என்று நம்மைப் பார்த்துப் பெரிய புத்திசாலி போல கேள்வி கேட்போர் குருமூர்த்தியின் பதில் மூலம் பார்ப்பனர் களின் மனப் போக்கைப் புரிந்துகொள் ளலாம். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் சொல்லும் அந்தக் கருத்தைத்தான் இவர்களும் சொல்லு கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!
ஜாதியை ஒழிக்க முடியாது என்று சொல்லுபவர்கள், அதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் அவர்களின் ஜாதித் தொழிலைத்தான் செய்கிறார்களா? ஆடிட்டராக குருமூர்த்திகள் வேலை பார்க்கலாமா?
பிராமணன் தொழில் பிச்சை எடுத்து உண்பதுதானே. அதனைச் செய்கிறார்களா? சாஸ்திரப்படி பிரா மணன் ஏழையாகத்தான் இருக்கவேண் டும் என்று மறைந்த சீனியர் சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளாரே! (தெய்வத்தின் குரல், பாகம் 1, பக்கம் 163) அப்படித்தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்களா?
பார்ப்பனக் கலாச்சாரப்படி பஞ்ச கச்சம் வைத்துதான் வேஷ்டி கட்டு கிறார்களா - பெண்களும் மடிசார் கட்டுகிறார்களா? ஒரு காலத்தில் மொட்டைப் பாப்பாத்தி என்பார்களே, அந்த நிலை இப்பொழுது உண்டா? உச்சிக் குடுமி வைத்துள்ளார்களா பார்ப் பனர்கள்? பேண்ட், ஷர்ட் போடுவது தான் வைதீக வருணாசிரமத் தர்மமா?
2. தொழில் முனைவுக்கான முக்கிய மான கருவி ஜாதி என்கிறாரே - எந்தப் பொருளில் அப்படிக் கூறுகிறார்? உண்மையைச் சொல்லப் போனால் வறுமைக் கோட்டுக்கும் கீழே இருப் பவர்கள் கீழ் ஜாதி என்று பார்ப்பனீ யத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள்தானே பெரும்பாலோர்!
‘‘இந்தச் சமூகம் பொருளாதார தேக்கம் அடைந்ததற்கு மனித இனம் பல ஜாதிப் பெட்டிகளுக்குள் (The Water Tight Compartment of Castes)அடைக்கப்பட்டு தொழிலாளர் புழக்கம் (Mobility of Labour) தடைப்பட்டது ஒரு முக்கிய காரணம்’’ என்ற பிரபலப் பொருளாதாரப் பேராசிரியர் ஆர்தர் லூயிஸ், குருமூர்த்திகளைவிட பொருளா தாரத் துறையில் மேதைதானே. (A Theory of Economic Development)
படிப்பிலும், பதவியிலும், பொருளா தாரத்திலும் வளமையில் இருந்த, துணைப் பிரதமராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் காசியில் திறக்கப்பட்ட சம்பூர்னானந்து சிலையை காசிப் பல்கலைக் கழகப் பார்ப்பன மாணவர்கள் கங்கை நீரால் கழுவினார் களே, ஏன்? கீழ்ஜாதிக்காரன், உயர் ஜாதிக்காரன் சிலையைத் திறக்கலாமா என்ற கேள்வியை எழுப்பவில்லையா? ஜெகஜீவன்ராமெல்லாம் மந்திரியானால், எங்களுக்குச் செருப்பு தைப்பது யார் என்று கேட்டார்களா, இல்லையா அந்த உயர்ஜாதி மாணவர்கள்? இந்த நிலை தொடரவேண்டும் என்பதுதான் கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை களின் அடக்க முடியாத ஆசை வெறியா?
ஜாதியை ஒழிக்காமல் தீண்டா மையை எப்படி ஒழிக்க முடியும்? சொல்லட்டுமே பார்க்கலாம். ஜாதி காரணமாகத்தானே தீண்டாமை? ஜாதியை ஒழிக்க முடியாது - கூடாது என்று சொல்லுவதன்மூலம் தீண்டா மைக்குப் பராக்குப் பாடும் இந்தப் பேர்வழிகளை பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் கைது செய்யவேண்டாமா?
3. ஜாதி வித்தியாசங்களில் ஏற்ற தாழ்வுகளும் இருக்கலாம். அதை மீறி வாழத் தெரிந்தவர்தான் உயர்ந்த மனிதர் என்கிறாரே, ஆடிட்டர் குருமூர்த்தி?
இதன் பொருள் என்ன? பார்ப்பான் பார்ப்பான்தான் - பள்ளன் பள்ளன்தான். இந்த ஏற்ற தாழ்வுகளையும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் அப்படித் தானே? இந்து ஆன்மிகம் கற்பிப்பது இதனைத்தானே? புரிந்து கொள்வீர் ஒடுக்கப்பட்ட மக்களே!
4. திராவிட இயக்கம், உயர்ஜாதி எதிர்ப்பு இயக்கம் என்கிறாரே, உண் மைதான். அவர் சொல்லுவதிலிருந்து உயர்ஜாதி என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவில்லையா?
ஒருவன் பிறக்கும்பொழுதே உயர் ஜாதி என்றும், தாழ் ஜாதி என்றும் பிறப்பிக்கப்பட்டான் என்று சொல்லு வதும், அந்த உயர் ஜாதிக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்வதுதான் கீழ்ஜாதிக்காரனின் கடமையென்றும் அமைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், சமுதாயத்தில் உயர்ஜாதிக்காரனை  எதிர்ப்பதுதானே மனித உரிமையும், அறிவு நாணயமுமான பொதுத் தொண் டாகவும் இருக்க முடியும்?
இந்தத் தொண்டினை திராவிட இயக்கம் செய்வதாக குருமூர்த்தி தன்னை அறியாமலேயே ஒப்புக்கொண் டதற்கு நன்றி!
எல்லாவற்றிலும் ஆதிக்க நச்சு நங்கூரத்தைப் பாய்ச்சி நின்ற பிறவி முதலாளித்துவமான ஆரியத்தை அதன் ஆணிவேர் வரை சென்று தாக்கியதால் ஏற்பட்ட விளைச்சல்தானே பஞ்சமர் களுக்கும், சூத்திரர்களுக்கும், பெண் களுக்கும் இன்று கிடைத்திருக்கும் கல்வியும், உத்தியோக வாய்ப்பும், சிவில் உரிமைகளும். மறுக்க முடியுமா மனுவாதிக் கூட்டத்தால்?
கடைசிப் பூணூலும் (ஜாதி ஆதிக்க துவிஜாதியினர்) பஞ்சகச்சமும் இருக் கும்வரை திராவிட இயக்கத்தின் பீரங்கிப் பிரச்சாரமும், புயல் வேகக் கொள்கைத் ‘தாக்குதலும்’ தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
5. திராவிட இயக்கம் ஜாதி ஒழிப்பு இயக்கம் இல்லை என்கிறாரே?
‘இந்து’ பத்திரிகைக் குடும்பத்தைக் கேட்டுப் பார்க்கட்டும் - ஜாதி ஒழிப்பு வேலையில் திராவிட இயக்கம் ஈடுபட்டதா? இல்லையா? என்பதை. இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்க மாகக் கருதும் மாநிலம் தமிழ்நாடு என்றால், அதற்கு எந்த இயக்கம், எந்தத் தலைவர் காரணம்? குருமூர்த்தி பெயருக்குப் பின்னால்கூட - ஜாதி ஒட்டு ஓடி மறைந்துவிட்டதே! அதில்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக் கிறதே!
பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டத்தோடு அறிமுகமானவர்கள்கூட திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக ஜாதிப் பட்டத்தைக் கத்தரித்துக் கொண் டார்களே!
6. வேதமும், விவசாயமும், செயலால் ஒன்றிணைந்தது என்று குருமூர்த்தி கூறுகிறாரே, அது சரியா?
விவசாயம்பற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
‘‘பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதனைப் பாராட்டு வதில்லை. ஏனெனில், இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண் வெட்டி இவற்றைக் கொண்டு, பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங் களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?’’ (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 84).
மனுதர்மம் என்றால் என்ன சாதாரணமா? மனு என்ன சொன்னாரோ அது மருந்தாம். பதினெட்டு ஸ்மிருதி களுக்குள் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு சாஸ் திரங்களும் ஒரே வாக்காய்ச் சொல்லி யிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்க தன்று என்பதுதானே இந்து மதத்தின் நிலைப்பாடு!
1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள், பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் கும்ப கோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன்வந்தார்கள். ஆனால், சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர் களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று சங்கராச்சாரியார் கூறிவிட்டாரே! (‘தமிழ்நாட்டில் காந்தி’, பக்கம் - 378).
இதற்கு மேலும் வேதம் - விவசாயம் என்று உதட்டை அசைக்கத் தகுதி உண்டா இந்த அக்கிரகார ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு?
(கேள்விகள் இன்னும் உண்டு, எதிர்தரப்பிலிருந்து என்னென்ன வருகின்றன என்று பார்ப்போம்!)
குறிப்பு: ‘சோ’ உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பார்ப்பனர்கள் திருவாளர் குருமூர்த்தியை பார்ப் பன சங்கத்தின் செய்தித் தொடர் பாளராக உருவாக்கி வருவதாக ஒரு செய்தி.
-விடுதலை,6.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக