பக்கங்கள்

திங்கள், 15 ஜூலை, 2019

சில செய்திகளும் சிந்தனைகளும் இந்து மதத்தின் யோக்கியதை இதுதான்!



மின்சாரம்


கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந் திருப்பவர் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. அந்தக் கடவு ளுக்குக் கோயில் ஏன் - மனைவி ஏன் - வைப்பாட்டி ஏன் - குழந்தைக் குட்டிகள் ஏன் - உருவமேயற்ற கடவுளுக்குப் பெண்டாட்டி யும், வைப்பாட்டியும் எப்படி வரும் - எங்கிருந்து குதித்தது என்று நியாயமான அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டால் அடேயப்பா! என்னமாய் கோபம் கொப் பளிக்கிறது, உடலெல்லாம் வியர்க்கிறது, கண்கள் எல்லாம் கோபமேறி குதிக்கிறது.

இன்னொரு கூத்தைக் கேளுங்கள்! கேளுங்கள்!! எல்லார்க்கும் கடவுள் என்று சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுளை சிலையாக்கிக் கோயில் கட்டி அதற்குள் கர்ப்பக்கிரகம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்குள் பூட்டி வைக்கும் போக்கிரித் தனத்தை என்னவென்று சொல்லுவது?

மேலும் ஒரு குட்டிச் செய்தியைக் கேளுங்கய்யா, கேளுங்கய்யா... அந்தக் கடவுளுக்கும் மதச் சாயம்! இன்னொரு மதக்காரன் எங்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சண்டியர்த்தனம் செய்வ தில் கில்லாடி இந்த இந்து மதக்காரர்கள்தான். அப்படியென்றால் கடவுள் உலகக் கடவுள் இல்லையா? எல்லா மக்களுக்கும் கடவுள் இல்லையா? இதெல்லாம் லோக்கல் கடவுள் தானா என்று கேட்காமல் இருக்க முடியுமா? அதையும் கேட்டால் “இந்தக் கருப்புச் சட்டைக்காரனுக்கு இதுதான் வேலை” என்று பற்களை நரநரவென்று கடிக்கிறார் கள்.

கேடுகெட்டதனத்தையும், கோளாறு களையும் செய்வதெல்லாம் அவர்கள் - கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.

இப்பொழுது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களை வடக்கே இரண்டு கோயில்களில் பிடரியைப் பிடித்துத் தள்ளாத குறைதான்.

குடியரசுத் தலைவர் என்றால் சாதாரணமா? முப்படைகளுக்கும் தலைவர் அவர்தான். அதெல்லாம் அங்கே - இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று சவுண்டிகள் திமிர் முறிக்கிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல?

சரி - அதிலாவது ஓர் ஒழுங்கு முறை இருக்கிறதா?

இவற்றையெல்லாம் விட இன்னும் ஒரு வேடிக்கையைக் கேளுங்கள்! கேளுங்கள்!! வேடிக்கை என்று சொல்லக் கூடாது - கொடுமை, மகா மகா கொடுமை!

சொந்த மதத்துக்காரர்களைக் கூட கோயிலுக்குள் விடாத மதம் பிடித்த மனி தர்கள் இந்து மதத்தில்தான் இருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடிமகன் - முப்படைகளுக்கும் தலைவராக இருக் கக்கூடிய குடியரசுத் தலைவரைக்கூடக் கோயிலுக்குள் விடமாட்டார்கள்.

வெள்ளைக்காரக் கவர்னர் மவுண்ட் பேட்டன் 'பூரி' ஜெகந்நாத் கோயிலுக்குள் “தாட்-பூட்” என்று கோட்டு-டை அணிந்து சென்றால் அவருக்குச் சிகப்புக் கம்பள விரிப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய உலக மேதை அண்ணல் அம் பேத்கரும் தான் மவுண்ட்பேட்டனோடு சென்றார்.

என்ன ஆச்சர்யம் தெரியுமா? மவுண்ட் பேட்டனுக்கு அனுமதி, அண்ணல் அம் பேத்கருக்குத் தடை!

ஏன், அம்பேத்கர் இந்து இல்லையா? அது தெரியாதா உங்களுக்கு... இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் யார் தெரியுமா? அவர்ணஸ்தர்கள் - நான்கு வருணங்களுக் குள் வராதவர்களாம். அதனால்தான் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் ஏதோ அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற நேரங்களில் மட்டும் இந்துக்களே ஒன்று சேருங்கள்! என்று தாழ்த்தப்பட்ட வர்களையும் சேர்த்து அழைப்பார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களாகி விடுவார்கள்.

பூரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் அனுமதிக்கப்படாததை பெரும் பிரச்சினையாக்கி திராவிடர் கழகம் கண் டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியதுண்டு. இந்த நிலையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி.

குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரம் 28.6.2018  அன்று பூரிமாவட்ட ஆட்சியாள ருக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் “பூரிஜெகந்நாத் கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி மற்றும் மகளை கோயிலுக்குள் விடாமல் முக்கிய வாயிலில் இருந்த அர்ச்சகர்கள் அவரைத் தள்ளி விட்டார்கள் என்றும், தடுமாறி விழுந்த குடியரசுத்தலைவரை அவரது மனைவி மற்றும் மகள் தூக்கிவிட்டார்கள் என்றும், கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து அவரைத் தள்ளிவிட்டு அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தரவேண்டும்“ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது,

29.6.2018 அன்று அனைத்து ஊடகங்களிலும் இந்தச்செய்தி வந்திருந் தது, இதற்கு நேரடியாக யாரும் பதில் கூறவில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் யாரோ ஒருவர்  வங்கமொழிப் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி யிருந்தார். “அதில் குடியரசுத்தலைவரை தள்ளிவிட்டது, அவரை கோயிலுக்குள் விடாமல் அவமதித்தது தொடர்பாக எதுவும் குறிப்பிடாமல் இந்துக் கோயில் களில் இந்துக்கள் அல்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நுழைய அனு மதிப்பது புனிதத்தைக் கெடுத்துவிடும் என்று கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்டவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் புனிதம் பாதுகாக்கப்பட்டது என்றும் எழுதி இதுதான் இந்துமதத்தின் சிறப்பு! ஆகையால் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துதமதம் அதன் செழுமை மாறாமல் உள்ளது” என்று எழுதியிருந்தார்.



இதையே ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப் பினர் ராஜேஷ் சின்கா (பாஜக மாநிலங் களவை உறுப்பினர்)  மேற்கோள்காட்டி  “யாராக இருந்தாலும் அவர்களுக்காக கோயிலில் அனுமதி கொடுக்க அது ஒன்றும் பொழுதுபோக்குத் தலமல்ல - புனிதத்தலம்! இந்துக்களுக்கு மட்டுமே உரித்தான சில இடங்களில் நுழையும் அனுமதி பிறருக்கு எந்த விதத்திலும் கொடுக்கப்படாது, அது எவ்வளவு பெரிய அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் சரி” என்று கூறியிருந்தார்.



குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்து என்று அனைவரும் நினைத்திருந் தார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ அவர் இந்து அல்ல என்று மறைமுகமாக ராகேஷ் சின்கா மூலம் கூறிவிட்டது,

பூரி ஜெகந்நாத் ரதயாத்திரை 4.7.2019-லிருந்து துவங்கியுள்ளது, இந்த யாத்திரை யின் துவக்கவிழாவில் குஜராத்தைச் சேர்ந்த முதல்வர் விஜய் ரூபானி, அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி கலந்து கொண் டார்கள்.



கலந்துகொள்வது குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் விஜய் ரூபானி, மற்றும் அமித்ஷா இருவருமே இந்துக்கள் இல்லை. இவர்கள் பார்சி மற்றும் ஜெயின் மதத்த வர்கள்

இந்திராகாந்தி பார்சி மதத்தவரை திருமணம் செய்தார், அவர் காஷ்மீரப் பார்ப்பனர். சோனியா காந்தி பிறப்பால் கிறிஸ்தவரானாலும், ராஜீவ் காந்தியை திருமணம் செய்த காரணத்தால் அவர் இந்துவே.  இருப்பினும் அவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை. ராம்நாத் கோவிந் இந்துதான், ஆனால் அவர் பட்டியல் இனத்தவராகையால் அனுமதி மறுக்கப்பட்டார்

ஆனால் பிற மதத்தவர்களான அமித்ஷா, விஜய் ரூபானி இருவருமே கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

பாஜக தலைவர் அமித்ஷா கடவுளை விட மிகவும் சக்திவாய்ந்தவராகிவிட்டார் போலும்,

ரதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு ஊடகவியலாளர் களிடம் பேசிய அமித்ஷா ”இங்கிருந்து ஜெகந்நாத் ரதம் புறப்பட்டது, அதே போல் இங்கிருந்து நாங்களும் புறப்படுகிறோம், அது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா முழு வதும் வெற்றியைப் பெற்ற பிறகு எங்கள் பயணம் முடியும்” என்று கூறியுள்ளார்.   தென்னிந்தியா அமித்ஷா பரிவாரங்களை வரவேற்கத் தயாராகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டாலும் பூரி கோயிலுக்குள் அனுமதியில்லை. ஆனால் பார்சி மதத்தைச் சேர்ந்த அமித்ஷாவுக்கு சாங்கோபாங்கோமாக பெருத்த வரவேற்பு. ஏனிப்படி? இவருக்கு மட்டும் ஆகமம் ஒடுங்கி குனிந்து வரவேற்பு கொடுத்தது எப்படி? ஆமாம் உள்துறை அமைச்சரா யிற்றே - அவரிடம் சேட்டை செய்தால் விளைவு வேறு விதமாக ஆகிவிடாதா?

இந்திரா காந்திக்கும், சோனியா காந்திக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.

நேபாள நாட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் எதிர்ப்பு


சோனியா கோயிலுக்குள் நுழையத் தடை




நேபாள தலைநகரான காட்மாண்டு வில் அண்மையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சார்க் கூட்டம் நடந்தது. அப்போது நேபாளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதி கோவிலுக்குச் சென்று தரி சனம் நடத்த ராஜீவ்காந்தியும், சோனியா வும் விரும்பினார்கள். பிரதமரின் அதி காரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய முயற்சி செய்யும் போது, பசுபதிகோவிலின் பார்ப்பன அர்ச்சகர்கள், சோனியாகாந் தியை கோயிலுக்குள் அனுமதிக்க முடி யாது; காரணம், அவர் இந்து அல்ல என்று கூறிவிட்டார்கள். சோனியா பிறப்பால் இந்து அல்ல என்றாலும், அவர் ஒரு ‘இந்து’வாகத் தான் வாழ்ந்து கொண்டிருக் கிறார் என்று அதிகாரிகள் கூறினார்கள். அதை பார்ப்பன அர்ச்சகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு, நேபாள மன்னரின் முக்கிய அதிகாரிகளின் சிபாரி சையும், இந்திய அதிகாரிகள் பயன்படுத் திப் பார்த்தனர். அப்போதும் ஒன்றும் முடியவில்லை.

“இந்திராகாந்தியே - அவர் ஒரு பார்சி என்பதால், இந்தியாவில் உள்ள ஒரு கோயிலுக்குள் அனுமதி மறுத்தார்கள். (இந்திராவின் கணவர் பிரோஸ் காந்தி ஒரு பார்சிக்காரர்) நேபாள மன்னர் பிரேந் திரா ஒரு முறை தென்னாட்டுக் கோயிலுக் குள் சென்று வழிபட விரும்பியபோது, சட்டை இல்லாமல் தான் உள்ளே வர வேண்டும் என்று அர்ச்சகர்கள் கூறி விட்டார்கள். ஆனால் நேபாள சம்பிர தாயப்படி, மன்னர்கள் சட்டை இல்லாமல்  தரிசனம் செய்யக்கூடாது. எனவே மன் னர் அந்தக் கோயிலுக்குள் செல் லாமலே திரும்பிவிட்டார்’’ என்று நேபாள பார்ப் பன அர்ச்சகர்கள் இந்திய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்கள். ‘ராஜீவ் காந்தி வேண்டுமானால் வரட்டும்; சோனியாவை அனுமதிக்க முடியாது’ என்று அர்ச்சகப் பார்ப்பனர்கள் உறுதியாக தெரிவித்ததைத் தொடர்ந்து, ராஜீவ்காந்திக்கு கோபம் வந்து விட்டது. 'எனது மனைவியை அனு மதிக்கவில்லையானால், நானும் அந்தக் கோயிலுக்கு வர முடியாது’ என்று கூறி விட்டார். இதைக் கேட்ட நேபாள நாட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் ‘ராஜீவைக் கூட நாங்கள் எப்படி கோயிலுக்குள் அழைக்க முடியும்? அவரும் இந்து அல்லவே; பார்சிதானே?’ என்று கூறி விட்டார்கள்.

- 'இண்டியன் அப்சர்வர்', நவ 8, 1987

உலகப் பவுத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஒருமுறை கேரளா வந்தார். அப்பொழுது எல்லா மதக்கோயில்களுக்கும் செல்ல அவர் விரும்பினார்.

செயின்ட் ஜோசப் கத்தீட்ரல் சர்ச் ஆர்வ முடன் வரவேற்றது. சாதாரணமாக அல்ல, சிகப்புக் கம்பள வரவேற்பு. பாளையம் மசூ தியில் தொழுவதற்கு இமாம் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதுடன் காலை விருந்துக்கும் அழைப்புக் கொடுத்தனர்.

எல்லாம் சரிதான், திருவனந்தபுரம் தேவஸ்தானம் என்ன செய்தது?

தேவஸ்தானம் என்றால் சாதாரணமா? இந்துக்கடவுளை மேய்க்கும் மேலாண் மைக்காரர்கள் அல்லவா அவர்கள்.

தலாய்லாமா தம் சம்பிரதாய உடை களை எல்லாம் களைந்து, செருப்புகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எங்கள் இந்துக் கோயிலில் அனுமதி கிடையாது - கிடையாது என்று கறாராகவே மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துச் சொல்லி விட்டனர் தேவஸ்தான அதிகாரிகளாம் 'பெருமான்'கள்.

என்ன காரணமாம்? அவர்கள் இந்து மதத்தை ஏற்காதவர்களாம்.

மதம் மனிதர்களைப் பிளக்கிறது - அதுவும் இந்து மதம் இதன் உச்சம்! கடவு ளும் தன் பங்குக்கு பிரிவினையைத்தான் ஏற்படுத்துகிறது.

இதன் பொருள் என்ன? மனித குலம் ஒன்றாக பகை யொழிந்து சகோதரத்துவம் பேண வேண்டுமானால் இந்தப் பாழாய்ப் போன கடவுளும், மதமும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் - ஆம், ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

கடவுளை மற!

மனிதனை நினை!

- தந்தை பெரியார்

- விடுதலை ஞாயிறு மலர், 13.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக