பக்கங்கள்

புதன், 10 ஜூலை, 2019

பார்ப்பனர்போக்கு பற்றி.....



டாக்டர் மு.வ.


சாதியின் அறிகுறி உணவு விடுதியின் தலைப்பில் கொட்டை எழுத்துகளில் இருப்பது, வேறு எந்த நாகரிக நாட்டிலும் காணமுடியாத மாசு ஆகும்.,

இந்த மாசைப் போக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்தார் பெரியார் ஈ.வெ.ரா. நாகரிகமான மக்கள் வாழும் இந்த நாட்டில், சாதியின் வாலை ஒழித்தது போலவே, உணவு விடுதிகளின் பெயரில் உள்ள "பிரா மணாள்" என்ற சொல்லையும் எடுத்துவிடுவார்கள் என எதிர்பார்த்தேன். எதிர்பார்த்தவாறு நடக்கவில்லை! சொல்லாமலேயே செய்ய வேண்டிய சீர்திருத்தக் கடமையை சொல்லியும் செய்யவில்லை தமிழர்.

ஆயினும் ஒரு காலம் வரும். சாதி வேறுபாட்டை ஒழித்தால் அல்லாமல் நாட்டில் அமைதி ஏற்படுத்த முடியாது என்ற காலம் வந்தால், அப்போது எல்லோரும் சேர்ந்து வருந்த நேரும். அன்று பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டு எல்லார் உள்ளத்திலும் வாழும்.

(தந்தை பெரியர் 79ஆவது பிறந்த நாளையொட்டி

மலேசியாவில் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)

-  விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக