பக்கங்கள்

புதன், 10 ஜூலை, 2019

இதிகாசத் திரைகளை கிழித்து, புராண மேடுகளைக் களைவோம்!



"இந்த நாடு குபேரபுரியல்ல - இங்கே குபேரனைக் கட வுள் என்று சொன்னாலும் இங்கே கலைமகள் படிப் புக்குக் கடவுள் மகாலட்சுமி செல்வத்துக்கு கடவுள் என்று போற்றினாலும் இங்கே படிப்பிலும் செல்வத் திலும் நாம் சாதாரணம்!


மகாலட்சுமியை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா குபேர புரி - இங்கே நாம் வறுமைக் காட்டிலே இருக்கிறோம். அப் படிப்பட்ட மக்களை இயன்ற அளவுக்குக் கை தூக்கிவிட வேண்டும்.


இதிகாசத்திரைகள் கிழியட்டும்


அவர்களைக் கைதூக்கி விட இந்த நாட்டில் உள்ள இதிகாசத் துறைகளைக் விழித்து புராணமேடுகளைக் களைந்து, தான் மனிதன் என்கின்ற தன்மான உணர் வோடு புறப்பட வேண்டும் என்பது முதற்கட்டம்.


இரண்டாவது கட்டம் அவன் பொருளாதாரத்திலே உயரவேண்டும். அவனுக் கென்று ஒரு வீடு நல்ல வாழ்வு என்ற நிலைமைகளை உருவாக்க வேண்டும். அவன் ஏழையாக, விவசாயியாக தாழ்த்தப்பட்டவனாக இருந்தாலும் உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லப்ப டுவர்களால் மிரட்டப்படாத அளவுக்கு பணக் காரர்களால் வேட் டையாடப் படாமல் அவன் வாழ்க்கையை வசதியாக நடத்தவேண்டுமேயானால் சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் அவனை உயர்த்தியாக வேண்டும் - இந்த உணர்வுகளை வெற்றி கரமாகச் செயல்படுத்த எங்களுக்கு ஆயுதமே - அல்லாமல் ஆட்சியே எங்களுக்கு லட்சியமல்ல!


உடுமலைப்பேட்டையில் முதல்வர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து

- விடுதலை: 2.2.1975, பக்கம் 1

-  விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக