பக்கங்கள்

புதன், 10 ஜூலை, 2019

புத்தரும் - இராமனும் ஒன்றா? பார்ப்பனர்களின் பாடபேதம்!



மின்சாரம்


கே: ராமர் காலத்தில் இலங்கையில் நடந்த பல சம் பவங்கள், ராமாயணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனால், இன்றுவரை அதுபோன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடந்ததாக இலங்கை காட்டிக் கொள்ளவே இல்லையே ஏன்?

ப: இதற்கு நம்முடைய முந்தைய அரசுகள்தான் முக்கியக் காரணம். புத்த மதம் பரவிய பிறகு, இலங்கையில் ராமாயண பாரம்பரியம் மங்கியது உண்மை, ஆனால், மறையவில்லை. நம் நாட்டுக்கும் இலங்கைக்கும் புத்தரும், ராமரும் இருவழிப் பாலம் போல். ஆனால், இலங்கை அரசு புத்தரைக் கொண்டாடி யது. மதச்சார்பற்ற நம் அரசு ராமரைக் கொண்டாடவில்லை. எனவே, இலங்கை யில் ராம பாரம்பரியம் மங்கியது. ஆனால், இப்போது ராமாயண தொடர்புள்ள இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது துவங்கியிருக்கிறது. (https:// www.inditales.com/ramayana-places-to-see-sri-lanka/) 2016-ஆம் ஆண்டு மோடி அரசும், இலங்கை அரசும் இந்தியா வில் புத்தர் தொடர்புள்ள இடங்களையும், இலங்கையில் ராமர் தொடர்புள்ள இடங்களையும் இணைத்து சுற்றுலாத் திட்டம் தயாரித்து, அது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (இந்தியா டுடே 14.7.2016) இதை 70 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால், நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது.

(‘துக்ளக்’, 8.5.2019 பக். 25)

பார்ப்பனர்களைப்போல பாடத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்டல்கள் உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சாணியைக் கடவுளாக்கிக் காட்டும் சாமர்த்திய சாலிகள் ஆயிற்றே!

தவமிருந்தான் சூத்திரன் சம்புகன் என்று கூறி அவன் கழுத்தை வாளால் வெட்டிக் கொன்ற தலை வெட்டித் தம்பிரான் அல்லவா இராமன்! வருண தருமத்தைக் கட்டிக் காக்க அவதாரம் எடுத்தவனாயிற்றே!

அந்த வருண தருமத்தை ஒழித்துக் கட்டப் புறப்பட்ட புத்தர் எங்கே - வருணதருமத்தைக் காப்பாற்ற கற்பிக் கப்பட்ட இராமன் எங்கே?

‘துக்ளக்’ தூக்கி கூத்தாடும் அந்த இராமாயணம் பவுத்தர்களைப் பற்றி என்ன சொல்லுகிறது?

யதா ஹி சவ்ர;

ஸ்யத தயாஹி புத்த;

ததாகதம் நாஸ்திக மகர வித்தி

(வால்மீகி இராமாயணம் அயோத் தியா காண்டம், சுலோகம் 1502)

“ஒரு திருடன் எப்படிப்பட்டவனோ அப்படிப்பட்டவன் புத்தன். வேதத்திற்கு எதிரானது புத்தனுடைய கருத்துகள். புத்தியுள்ள மக்களே நாத்திகவாதிக ளாகிய புத்தர்களுக்கு முகம் கொடாதீர் கள்” என்று சொல்லுகிற இராமாயணமும் அதன் கதாநாயகனாகிய இராமனும், புத்தரும் நம் நாட்டுக்கும் இலங்கைக்கும் இரு வழி பாலமாம் - கூறுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

விவேகானந்தரைப் பற்றி குருமூர்த்தி கும்பல் எப்படி எப்படியெல்லாம் ஆரா திக்கின்றன. கல்விக் கூடங்களுக்குக் கெல்லாம் விவேகானந்தர் ஊர்தி என்று அழைத்துச் செல்கின்றனர். அந்த விவேகானந்தர் இராமாயணத்தைப் பற்றி என்ன கூறுகிறார்?

“தென் இந்தியாவில் இருந்த மக்களே தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும்  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

- (“சுவாமி விவேகானந்தர் அவர் களது சொற்பொழிவுகளும், கட்டுரை களும்” எனும் நூலில் ‘இராமாயணம்’ எனும் தலைப்பில் பக். 587)

இதுபோன்ற இடங்களில் எல்லாம் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரவம் தெரியாமல் ஒளிந்து கொள்

வார்கள். வேதங்களையும் பார்ப்பனர்களை யும் கவுதமப் புத்தர்எப்படி எல்லாம் விமர்சிக்கிறார் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

புத்தர் ஒரு சமயம் கோசல நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ‘மானசாக தம்’ என்ற அக்கிரகாரத் திற்குள் வந்து அதன் அருகிலுள்ள அயிரா வதி (தற்போது ரப்தி) ஆற்றங்கரையி லிருந்த மாந்தோப்பில் தங்கியிருந்தார். அந்த அக்கிரகாரத்தைச் சேர்ந்த இரண்டு பார்ப்பன இளைஞர்கள், உண்மையைச் சொல்லுகிறவரிடம் சென்று,

“பகவானே, எங்களுக்குள் பிரம்மத் தைக் காணுகின்ற வழிகளைப் பற்றிக் கருத்துவேறுபாடுள்ளது. நான் பொக்கர சாதிப் பிராமணன் சொல்லுகின்ற வழிதான் நேரானது, என்கிறேன். எனது தோழன் தாருகாப் பிராமணன் சொல்லுவதுதான் நேரடியாகப் பிரம்மத்தை அடையும் வழி என்கிறான். இக்கிராமத்திற்குள் வருவதற் குப் பலவழிகள் உள்ளன. அதுபோல பிரம்மத்தைப் பார்க்க எந்தவழியில் சென்றாலென்ன?'' என்றான் ஒரு இளைஞன்.

புத்தர் இளைஞர்களிடம் திருப்பி வினாக்களைத் தொடுத்தார்.

“எல்லா வழிகளுமே சரியான வழிதா னென்று நினைக்கிறீர்களா? நீங்கள்” என்றார்.

“ஆமாம் கோதமரே, அவ்வாறு தான் நினைக்கின்றோம்.”

புத்தர் “வேதத்தில் உள்ள எந்தப் பாட்டிலாவது பிரம்மனை நேருக்கு நேராகப் பாத்ததாகப் பாடியுள்ளார் களா?"

“இல்லை கோதமரே” - இளைஞர் களின் பதில்.

“அது எப்படி நித்தியமான பிரம்மாவை அநித்திய மான மனிதன் நேருக்கு நேராகப் பார்க்க முடியும்?” என்று இரண்டு இளைஞரும் திருப்பிக் கேட்டனர் புத்தரை.

“ஒருவன் நான்கு சாலைகள் ஒன்றிணையும் - நாற்சந்தியில் மாடிப் படிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறான். அந்த வழியாகச் சென்றவர்கள், எந்தக் கோட்டைக்கப்பா படிகள் கட்டிக் கொண்டிருக்கிறாய்? கோட்டை யில்லை, ஆனால் படிகளை மட்டிலும் கட்டிக் கொண்டிருக்கிறாயே? உன் கோட்டை கிழக்கேயா? மேற்கேயா? தெற்கேயா? வடக்கேயா? எப்பக்கம் உள்ளது? சிறியதா? நடுத்தரமானதா? பெரியதா?'' என்று கேட்டனர்.

“அது எனக்குத் தெரியாது” என் றான் படிகளைக் கட்டிக் கொண்டிருந் தவன்.

“கோட்டை எங்கே இருக்கிறது என்பதைத் தெரியாமல், ஏனப்பா படிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்” என்றனர் அவ்வழியே சென்றவர்கள்.



“நான் படிகட்டத்தான் செய்வேன். கோட்டையைப் பார்க்க முடியாதென்பது எனக்குத் தெரியும்” என்று சொன்னான்.

“படிகட்டுகிறவன் சொல்லுகின்ற பதிலைப் போலத் தான் உள்ளது பிரம்மம் பற்றி வேதம்பாடியவர்கள் சொல்லுகிற பதிலும்''.

“சரி இந்த ஆகாயக் கோட்டைக்கு படிகட்டுகிறவனின் செயலும் பதிலும் அறியாமை நிறைந்ததாகத் தோன்றவில் லையா உங்களுக்கு?” என்று கேட்டார் புத்தர்.

இரண்டு பார்ப்பன இளைஞர்களும் “ஆமாம் உண்மையிலேயே மூடத்தன மான செயல்தான்; பேச்சுத்தான்” என்றனர்.

அப்போது புத்தர் “அப்படியானால் பார்ப்பனர் தங்களுக்குத் தெரியாத, அவர்களுடைய வேத ரிசிகளும் பார்க்காத, அறியாத ‘பிரம்மா'வை அடை யும் வழியை மட்டிலும் காட்டுவோம் என்பதும் வீணான வேலை வெட்டித் தனமானது என்று தோன்றவில்லையா?” என்று கேட்டார்.

“மெய்யாகவே வீணான வேலை தான்” என்றான் ஓர் இளைஞன்.

“தெரியாத, பார்க்காத, காணமுடியாத ஒன்றுக்கு வேதம் வழிகாட்டும் என்பது மடத்தனமானது. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு செல்லுகின்ற குருடர் களின் தன்மையைப் போன்றது வேதம் என்று சொல்லுவதும். முன்னால் செல்லு கின்றவனுக்கும் ஒன்றும் தெரியாது. நடுவில் செல்லுகின்றவனும் காணமுடி யாது. இறுதியாகப் போகின்றவனும் பார்க்கமுடியாது. அதுபோலவே வேதப் பாடல்களும் குருட்டுத் தனமானது. பைத்தியக்காரத்தன மானது. பொருள் அற்ற வெற்றுச் சொற்கள்”.

புத்தர் தொடர்ந்து கூறினார்

“ஓர் ஆற்றின் கரைக்கு ஒருவன் வரு கிறான். அக்கரைக்கு அவன் போக வேண்டும்.

“ஓ இந்திரா - ஓ அக்னியே - ஓ சோமனே இங்கே வா, என்னை அந்தக் கரையில் கொண்டு போய் விடு'' என்று அவன் வேண்டினால் அந்தக் கரைக்குச் செல்ல முடியுமா?''.

“நிச்சயமாக முடியாது கோதமரே'' என்றனர் அவ்விருவரும்.

“இந்தப் பிராமணர்கள் அதைத்தானே செய்கிறார்கள். இந்திரா! சோமா! வருணா! அக்கினி! எங்களுக்கு எதிரிகளுடைய ஆடு மாடுகளைக் கொடு, அவர்களு டைய செல்வத்தைக் கொடு, அவர்களை எங்களுக்கு அடிமைகள் ஆக்கு?” என்று தானே குடித்துவிட்டுப் பாடுகிறார்கள்.

“பிராமணர்களிடத்தில் வெறும் காம வெறிதான் உள்ளது. அவர்களிடத்தில் பொறாமையும், சோம்பேறித்தனமும், கொலை வெறியும், அகந்தையும் தான் நிறைந்திருக்கிறது'' என்று புத்தர் சொல்லிக் கொண்டே இருக்கையில் ஒருவன் “அவ்வாறெல்லாம் இல்லை” என்றான். அதே சமயம் மற்றொரு இளை ஞன் “நீங்கள் சொல்வதெல்லாம் உண் மைதான். மறுப்பதற்கில்லை” என்றான்.

“இந்தப் பிராமணர்கள் காமவெறி, பொறாமை, கர்வம், வஞ்சகம் நிறைந்த வர்கள். இப்படிப்பட்டவர்கள் உங்க ளுக்கு நல்லவழி காட்ட முடியும் என்று நம்புகிறீர்களா? பிராமணர்கள் நல்லவர் கள் ஆவது அவர்கள் பிறவிக் குணத் திற்கே மாறுபட்டது. அவர்களுடைய வேதம் என்பது நீரற்ற பாலைவனம். வழியற்ற காடு. பாழடைந்த வீடு. பொட்டல்காடு ” என்றார் புத்தர்.

போதுமா? இந்தப் புத்தரைத்தான் பார்ப்பன தருமத்தைக் காக்க வந்த இராமனோடு ஒப்பிடுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.

பார்ப்பனீய வருணாசிரமத்தை வீழ்த்த வந்த புத்தரையே மகா விஷ்ணு வின் பத்தாவது அவதாரமாக்கி புராணம் எழுதியது இந்தக் கூட்டம். அதுகூட அவர்களுக்கு எதிரானதே. ஆகம அதர்மம் தலைவிரித்தாடி தர்மம் குன்றி அதர்மம் தலைதூக்கியதால்அதனை ஒழித்துக் கட்டத்தான் விஷ்ணு பத்தாவது அவதாரமாகப் புத்தர் வந்தார் என்கிறார்களே. இதில் எது உண்மை?

புரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை!

கிருஷ்ணன் கற்பிதம்


புத்தர் பிரான் அற மொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமானது ‘பிறன் மனைவியை விரும்பாதே’ என்பது. அந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணன் அவதாரத்தை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பியது. காமவிளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே, கிருஷ்ணன் கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அயோக்கியக்கதை இட்டுக் கட்டப்பட்டது.

(என்சைக்ளோபீடியோ பிரிட்டானிக்கா தொகுதி - 4)

-  விடுதலை ஞாயிறு மலர், 11.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக