பக்கங்கள்

புதன், 10 ஜூலை, 2019

நம்மைப் பிடிக்காத “பரம்பரை”



வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ்நாட்டில் உள்ள இந்திரா காங்கிரசாரும், அ.தி.மு.க.வினரும், சில பத்திரிகைகளும் - நம்மைப் பரம்பரையாகவே பிடிக்காத பத்திரிகையாளர்கள், ஏனென்றால் வேறு சில அரசியல் கட்சிகள் தமது கட்சிக்கு திராவிட இயக்கப் பெயரை வைத்திருந்தாலும்கூட பெரியாருடைய கொள்கைகளை வேராகவும், பேரறிஞர் அண்ணாவி னுடைய கொள்கைகள் அந்த வேரின் சக்தியாகவும் இருக்கின்ற ஒரே திராவிட இயக்கம் தி.மு.கழகம்தான் (கைதட்டல்) என்பதை இங்கிருக்கின்ற நம் மைவிட மிக அதிகமாக உணர்ந்திருப்பவர்கள் இந்த நாட்டிலே உள்ள சில பத்திரிகைகாரர்கள்; அவர்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு கூட்டம். எந்தக் கூட்டம் என்று நான் சொல்ல விரும்ப வில்லை. நான் ஒரு அடி பாய்ந்தால் பதினாறு அடி பாயக்கூடிய கவிஞர் குடியரசுகளெல்லாம் இங்கே இருக்கிற காரணத்தால் நான் அவர்களைப் பற்றி சொல்ல விரும்பவில்லை.

- தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர்.

- விடுதலை: 7.1.1991, பக்கம் 1
-  விடுதலை ஞாயிறு மலர், 11.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக