பக்கங்கள்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

மெக்கா மசூதி மீது கிரேன் சரிந்து விபத்து: சாவு எண்ணிக்கை 107 ஆக உயர்வு


மெக்கா, செப். 12_ சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது மிகப்பெரிய கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்த தில் 2 இந்தியர்கள் உட்பட 107 பேர் துடிதுடித்து பலியா கினர். 230-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண் டவர்கள் என்றும், அவர் களை பாதுகாக்கும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வ ரூப் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதி காரி ஒருவர் கூறுகையில், மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இத னால், நேற்றிரவு (இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு) மசூதியை சுற்றி லும் ஏராளமான மிகப் பெரிய கிரேன்கள் நிறுத் தப்பட்டிருந்தன. இந்நிலை யில், வெள்ளிக்கிழமை பிற் பகல் தொழுகைக்காக ஏரா ளமானோர் வந்திருந்தனர்.
அந்த நேரம், பலத்த இடி யுடன் மழையும் வலுத்து பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் ஒரே இடத் தில் திரண்டிருந்தனர். அப் போது மூன்றாவது தளத் தில் நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங் கிருந்தவர்கள் மீது விழுந் தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 107 பேர் துடிதுடித்து பலியாகினர். காயமடைந்த 238 பேர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத் தில் மின்னல் தாக்கும் நிழற்படங்கள் சமூக ஊட கங்களில் பரவி வருகிறது. எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் மசூதியே ரத்த வெள்ளமாகக் காட்சியளித் தது. இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசா ரணை நடத்தி வருகின்றது. அதே வேளையில், விபத் தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படை யில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், மீட்புப்பணி அதிக வேகத்தில் நடை பெற்று வருகின்றது. 
-விடுதலை,12.9.15

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஏன் தாழ்ந்தோம்? - தாகூர்


மாஸ்கோவிலுள்ள புரொபசர் பீரிட்ரோ என்பவர் கவி. தாகூருக்கு கீழ்க்கண்ட தந்தியை அனுப்பினார். (ஆண்டு 1929)
ருசியாவில் கைத்தொழில், விவசாயம், விஞ்ஞான ஆராய்ச்சி ஸ்தாபனங்கள், சர்வகலாசாலைகள், பாட சாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைவதற்கு நீங்கள் என்ன காரணம் கூறு
கிறீர்கள்?
அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடை யாது?
இதற்கு தாகூர் அவர்கள் அனுப்பிய தந்தி:
உங்களுடைய வெற்றிக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததேயாகும். நாங்கள் கீழ்நிலையில் இருப்பதற்கு எங்களுக்கு சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள பைத்தியக் காரத்தன்மைகளும் வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில்  முன்னேற்றம் அடையாததும்தான் காரணமாகும்.
குடிஅரசு 29.11.1931

தர்மம் - ராகுலசாங் கிருத்தியாயன்

Image result for ராகுல் சாங்கிருத்யாயன்
தர்மம்! அது ஓர் ஏமாற்று என்றே நான் நினைக்கிறேன். பிறருடைய  உழைப்பின் பலனை அபகரிப்பவர்கள் அமைதியோடு அந்தப் பொருள்களை அனுபவிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே இந்த தர்மம் சிருஷ் டிக்கப்பட்டிருக்கிறது.
தரித்திரர்களைப் பற்றியோ, பலவீனர்களைப் பற்றியோ இந்த தர்மம் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறதா? விரிந்த இந்த உலகத்திலே தர்மத்தை அங்கீகரிக்காத மனித சாதியே கிடையாதென சொல்லலாம். ஆனால் அவர்கள் அடிமைகளும் மனிதர்கள்தான் என்று எப்பொழுதாவது நினைத்ததுண்டா?..
இந்தப் பெண்களுடைய வாழ்க்கை அடிமைகளைப் பார்க்கிலும் உயர்ந்ததாகவா இருக்கிறது? ஆனால் தர்மம் இதை அங்கீகரிக்கிறது.  சரி என்ற சொல்லுக்கு மதம் சொல்லும் பொருளை நான் கொள்ளவில்லை; களங்கமற்ற மனித மனம் கொள்ளும் பொருளையே நான் ஏற்கிறேன்.


- வால்காவிலிருந்து கங்கை வரை நூலிலிருந்து ராகுலசாங் கிருத்தியாயன். தகவல்: மின்அணு
-விடுதலை,13.3.15

புரட்சி ஏன் தோன்றவில்லை?


இந்தியாவில் மட்டும் ஏன் சமூகப் புரட்சிகள் உண்டாகவில்லை? இதைப் பற்றி நான் வெகு நாள் யோசனை செய்தேன்.
இந்த கேள்விக்கு ஒரே ஒரு விடை தான் எனக்கு கிடைத்தது. அதாவது சதுர்வர்ணீயக் கொடுமையினால் (நால்வகை சாதி அமைப்பு) பாமர மக்கள் பலக்குறை வினராக்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்குப் புரட்சி செய்ய ஆற்றல் இல்லை, அவர்கள்  ஆயுதந்தாங்க முடியாது; ஆயுதமின்றி புரட்சியில் வெற்றி பெற முடியாது.
அவர்கள் எல்லாம் உழவர்கள்; ஏரைக்கட்டி அழவேண்டுமென்று  கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். கொழுவை - வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை; உரிமையில்லை. சதுர்வணீயக் கொடுமையினால் அவர் களுக்கு கல்வி கற்கவும் முடியவில்லை. மோட்சத்துக்கு வழிதேடவோ அறியவோ, அவர்களால் முடியவில்லை.
எந்நாளும் அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்று அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலை பெற வழி தெரியாமல் அடிமை வாழ்வு போதுமென்று திருப்தி அடைந்துவிட்டார்கள். சதுர்வர்ணீயத்தைப் போல் மானக்கேடானது வேறு இல்லவே இல்லை. அது மக்களை முயற்சியற்றவராக்கி விட்டது.
டாக்டர் அம்பேத்கர்
(சாதியை ஒழிக்க வழி - பக்கம் 67)
-விடுதலை,13.3.15

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

திருச்சபை திருந்துகிறது

வாடிகன், ஆக.6_ மணவிலக்கு பெற்று கத்தோலிக்கத் திருச் சபைக்கு வெளியே மறு மணம் செய்துகொண் டவர்கள் மீது பெரிய அளவில் கருணைகாட்ட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கிறிஸ்தவப் பாதிரிமார்களிடம் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபை யில் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார்
அப்படி மறுமணம் செய்துகொண்ட இணை யரை திருச்சபையில் இருந்து நீக்கி வைக்கக் கூடாது என்றும் அவர் களின் பிள்ளைகள் தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர் கள் என்று கருதும் நிலை ஏற்படக்கூடாது என்றும் போப் பிரான்சிஸ் வலியு றுத்தியுள்ளார்.
கத்தோலிக்கத் திருச் சபையின் பார்வையில் மணவிலக்கு பெற்றவர் களின் முதல் திருமணம் தொடர்ந்து நீடிப்பதா கவே பார்க்கப்படுகிறது என்பதால் மணவிலக்கு பெற்றவர்கள் தேவாலயங் களின் நற்கருணையை பெற முடியாத சூழல் உள்ளது.
முற்போக்கு கருத்துக் களை கொண்டுள்ள ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் மாற்றங்கள் தேவை என கூறி வருவ தாகவும், தானும் இந்த விஷயத்தில் நெகிழ்வுத் தன்மையை ஆதரிப்பதாக வும் போப் பிரான்சிஸ் சில குறிப்புகளை வெளி யிட்டு வந்தார் என செய் தியாளர்கள் கூறுகின்றனர்.
-விடுதலை,6.8.15

புதன், 29 ஜூலை, 2015

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
தந்தை பெரியாரின் கூற்று மெய்யா? பொய்யா?

இதுவரை நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துகள்..
2015  ஜூலை 14: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். (பலி எண்ணிக்கை உயரலாம்) 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
2014 ஆகஸ்ட் 25: மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.
2013 அக்டோபர் 13: மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.
2013 பிப்ரவரி 10; உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர்.
2012 நவம்பர் 19: பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர்.
2012 செப்டம்பர் 24: ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர்.
2012 பிப்ரவரி 19: குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர்.
2011 நவம்பர் 8:  ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.
2011 ஜனவரி 14: கேரளாவின் சபரி மலையில் நெரிசல் ஏற்பட்டு 106 பக்தர்கள் பலியாகினர்.
2011 ஜனவரி 8: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை  நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர்.
2010 மார்ச் 4; உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம், இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
2008 செப்டம்பர் 30: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர்.
2008 ஜூலை: ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.
2007 ஆகஸ்ட் 15: குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர்.
2006 ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2005 ஜனவரி 26:  மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
2003 ஆகஸ்ட் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர்.
1992 பிப்ரவரி 18: தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
கடவுளை நம்பியோர் கைவிடப் பட்டார்களே!
-விடுதலை,15.7.15

வியாழன், 23 ஜூலை, 2015

!கோதாவரி புஷ்கரம் விழா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி


மத மூட நம்பிக்கைகளினால் ஏற்படும் விபரீதங்கள் - இழப்புகள்

சென்னை, ஜூலை 14_ கடவுள் பக்தி, மத நம் பிக்கை, பூஜை புனஷ் காரத்தை நம்பி மக்கள் தம் இன்னுயிரையும், பொருள்களையும் இழந்து வருகின்றனர்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:
கோதாவரி புஷ்கரம் விழா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று (14.7.2014) கோதாவரி புஷ்கரம் விழா தொடங் கியது.
ராஜ முந்திரியில் ஆந் திர அரசு சார்பில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த கோதாவரி புஷ்கரம் விழாவை காஞ்சி சங்கா ராச்சாரியார் இன்று காலை புனித நீராடி தொடங்கி வைத்தாராம். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் புனித நீராடினாராம். அவரைத் தொடர்ந்து லட் சக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடினார்களாம். பக்தர் கள் குளிப்பதற்காக தனி யாக இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தது.
ராஜ முந்திரியிலுள்ள கோட்டக்கும்மம் என்ற இடத்தில் கட்டுக்கடங்கா மல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் அவர்கள் ஆற்றில் இறங் கியதால் நெரிசல் ஏற்பட் டது.
நெரிசலில் சிக்கி பலர் மயங்கி கீழே விழுந்தனர். கூட்டத்தில் மிதிபட்டு 27 பேர் பலியானார்கள். மேலும் 10-_க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். அவர்கள் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது. சாவு எண் ணிக்கை மேலும் அதிகரிக் கக்கூடும் என அஞ்சப்படு கிறது.
விபத்து நடந்த கோட் டக்கும்மம் பகுதி ராஜ முந்திரி ரயில் நிலையம் அருகே உள்ளது. வெளி யூரில் இருந்து வந்த பய ணிகள் நேரடியாக அங்கு சென்றதால் லட்சக்கணக் கான பக்தர்கள் அங்கு திரண்டு விட்டனர்.
சூரிய உதயத்துக்கு முன் நீராட வேண்டும் என்ற எண்ணத்தில் அனை வரும் ஒட்டு மொத்தமாக நதியில் இறங்கியதால் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்துபற்றி தகவல் அறிந்ததும் ராஜமுந்திரி யில் முகாமிட்டு இருந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தார்.

புஷ்கரம் விழாவில் பங்கேற்க பலர் வாகனங் களில் வந்தனர். ஆனால் அதனை நிறுத்துவதற்கு போதிய வசதி செய்யப் படவில்லை.
இதனால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் தேங்கி நின் றன.
விபத்தில் 2 மகன்கள் பலி:
திதி கொடுத்து விட்டு திரும்பியபோது மற்றொரு விபத்தில் மகனையும் இழந்த சோகம்!
மதுரை செக்காலை மேட்டுத்தெருவைச் சேர்ந் தவர் ஜெயக்கொடி (வயது 50). இவருக்கு 3 மகன்கள். இதில் 2 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டனர்.
இதையடுத்து அவர் களுக்கு திதி கொடுப்ப தற்காக நேற்று மதுரையில் இருந்து ராமேசுவரத் துக்கு ஜெயக்கொடி உள் பட 6 பேர் வேனில் சென் றனர். பின்னர் அங்கி ருந்து வேனில் 6 பேரும் மதுரை திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வேன், பார்த்திபனூர் அருகே மரிச்சுக்கட்டி சாலையில் சென்றபோது மாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது.
இதில் நிலைதடுமாறிய வேன் எதிரே வந்த கார் மீது மோதி நொறுங்கியது. கார் சாலையில் கவிழ்ந் தது. இதில் ஜெயக்கொடி யின் மற்றொரு மகன் அரவிந்த்குமார்(18) படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.
வேனில் இருந்த மற்ற 5 பேர்களும் காயம் அடைந்தனர். கார் கவிழ்ந் ததில் அதில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந் தனர். உடனே படுகாயம் அடைந்த 8 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்து குறித்து தகவல் அறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் விரைந்து சென்று அரவிந்த் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற் காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனை நரபலியிட முயற்சி
மந்திரவாதி கைது!
புதையல் எடுப்பதற்காக, மனநலம் பாதித்த சிறுவனை கடத்தி, நரபலியிட முயற்சித்த மாமியார், மருமகள், மந்திரவாதி உள்ளிட்ட அய்ந்து பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியை அடுத்த கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராசம்மாள், (60). இவரது மகன் ரவிக்குமார், (40), மருமகள் பானுமதி, 31. ரவிக்குமார் வீட்டில், அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்த மந்திரவாதி, சத்யமூர்த்தி, (27), என்பவரின் அறிமுகம் கிடைத்தது. வீட்டில், அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால், மனநிம்மதி இல்லை; வந்து சரி செய்யுங்கள் என, ரவிக்குமார் குடும்பத்தினர், மந்திரவாதியை அழைத்துள்ளனர்.
அங்கு வந்த மந்திரவாதி, 'இந்த வீட்டில் புதையல் இருக்கிறது; அவற்றை எடுத்தால், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்' என தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக, புதையலை எடுக்க, தினமும் நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. இதற்காக, வீட்டின் பின்புறம், ஆறு அடி ஆழத்தில் குழி வெட்டி, அதில் மந்திரவாதி இறங்கி பூஜை செய்து வந்துள்ளார். மந்திரவாதியுடன், தஞ்சை தாமஸ், (38), கரூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகியோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், 'குழந்தை, கன்னிப்பெண், கர்ப்பிணிப் பெண்களை நரபலி கொடுத்தால், புதையல் கிடைத்துவிடும்' என, மந்திரவாதி தெரிவித்துள்ளார். அதன்படி, அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் முதல், குழந்தை, கன்னிப்பெண்கள் ஆகியோரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை, 9 மணிக்கு, ரவிக்குமார், ராசம்மாள், பானுமதி, மந்திரவாதி உள்ளிட்ட எட்டு பேர், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை நரபலி கொடுக்க கடத்த முயன்றுள்ளனர். அதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் களை மடக்கி பிடித்து, அடி கொடுத்தனர்.
பொது மக்களிடம் இருந்து, ரவிக்குமார் உட்பட மூன்று பேர் தப்பினர்; மற்ற அய்ந்து பேரும் சிக்கினர். மந்திரவாதி, ராசம்மாள் உள்ளிட்ட அய்ந்து பேரை, காவல்துறையினரிடம் ஒப்படைக்க மறுத்து, பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். டி.எஸ்.பி., வந்தால் மட்டுமே ஒப்படைப்போம் என, தெரி வித்தனர். அய்ந்து மணி நேர போராட்டத்துக்கு பின், காவல்துறையினரிடம், ராசம்மாள், அவரது மருமகள் பானுமதி, மந்திரவாதி சத்யமூர்த்தி, கார் ஓட்டுநர் ராஜேந்திரன், தஞ்சை தாமஸ் ஆகிய அய்ந்து பேரையும் ஒப்படைத்தனர். பின், அய்வரையும், காவல்துறையினர் கைது செய்தனர்.
பணி முடிந்தும் திறக்கப்படாத நீர்த்தேக்க தொட்டிக்கு சிறப்புப் பூஜை, ஹோமமாம்
சென்னை ஆலந்தூர் பகுதியில் கட்டுமான பணி முடிந்தும் திறக்கப்படாத நீர்த்தேக்கத் தொட்டிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. சென்னை மாநகராட்சி 165 ஆவது வார்டு, ஆலந்தூர் நிலமங்கை நகரில் மெட்ரோ வாட்டர் பகுதி அலுவலகம் மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு  கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டட பணி நிறைவு பெற்றதை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நேற்று காலை நிலமங்கை நகரில் நடந்தது. நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் நரேஷ்குமார், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், நிலமங்கை நகர் பொது நலச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால், அலுவலகம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முதல்வர் திறந்து வைப்பதற்காக தேதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.