பக்கங்கள்

புதன், 10 ஜூலை, 2019

நம்மைப் பிடிக்காத “பரம்பரை”



வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ்நாட்டில் உள்ள இந்திரா காங்கிரசாரும், அ.தி.மு.க.வினரும், சில பத்திரிகைகளும் - நம்மைப் பரம்பரையாகவே பிடிக்காத பத்திரிகையாளர்கள், ஏனென்றால் வேறு சில அரசியல் கட்சிகள் தமது கட்சிக்கு திராவிட இயக்கப் பெயரை வைத்திருந்தாலும்கூட பெரியாருடைய கொள்கைகளை வேராகவும், பேரறிஞர் அண்ணாவி னுடைய கொள்கைகள் அந்த வேரின் சக்தியாகவும் இருக்கின்ற ஒரே திராவிட இயக்கம் தி.மு.கழகம்தான் (கைதட்டல்) என்பதை இங்கிருக்கின்ற நம் மைவிட மிக அதிகமாக உணர்ந்திருப்பவர்கள் இந்த நாட்டிலே உள்ள சில பத்திரிகைகாரர்கள்; அவர்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு கூட்டம். எந்தக் கூட்டம் என்று நான் சொல்ல விரும்ப வில்லை. நான் ஒரு அடி பாய்ந்தால் பதினாறு அடி பாயக்கூடிய கவிஞர் குடியரசுகளெல்லாம் இங்கே இருக்கிற காரணத்தால் நான் அவர்களைப் பற்றி சொல்ல விரும்பவில்லை.

- தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர்.

- விடுதலை: 7.1.1991, பக்கம் 1
-  விடுதலை ஞாயிறு மலர், 11.5.19

புத்தரும் - இராமனும் ஒன்றா? பார்ப்பனர்களின் பாடபேதம்!



மின்சாரம்


கே: ராமர் காலத்தில் இலங்கையில் நடந்த பல சம் பவங்கள், ராமாயணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனால், இன்றுவரை அதுபோன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடந்ததாக இலங்கை காட்டிக் கொள்ளவே இல்லையே ஏன்?

ப: இதற்கு நம்முடைய முந்தைய அரசுகள்தான் முக்கியக் காரணம். புத்த மதம் பரவிய பிறகு, இலங்கையில் ராமாயண பாரம்பரியம் மங்கியது உண்மை, ஆனால், மறையவில்லை. நம் நாட்டுக்கும் இலங்கைக்கும் புத்தரும், ராமரும் இருவழிப் பாலம் போல். ஆனால், இலங்கை அரசு புத்தரைக் கொண்டாடி யது. மதச்சார்பற்ற நம் அரசு ராமரைக் கொண்டாடவில்லை. எனவே, இலங்கை யில் ராம பாரம்பரியம் மங்கியது. ஆனால், இப்போது ராமாயண தொடர்புள்ள இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது துவங்கியிருக்கிறது. (https:// www.inditales.com/ramayana-places-to-see-sri-lanka/) 2016-ஆம் ஆண்டு மோடி அரசும், இலங்கை அரசும் இந்தியா வில் புத்தர் தொடர்புள்ள இடங்களையும், இலங்கையில் ராமர் தொடர்புள்ள இடங்களையும் இணைத்து சுற்றுலாத் திட்டம் தயாரித்து, அது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (இந்தியா டுடே 14.7.2016) இதை 70 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால், நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது.

(‘துக்ளக்’, 8.5.2019 பக். 25)

பார்ப்பனர்களைப்போல பாடத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்டல்கள் உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சாணியைக் கடவுளாக்கிக் காட்டும் சாமர்த்திய சாலிகள் ஆயிற்றே!

தவமிருந்தான் சூத்திரன் சம்புகன் என்று கூறி அவன் கழுத்தை வாளால் வெட்டிக் கொன்ற தலை வெட்டித் தம்பிரான் அல்லவா இராமன்! வருண தருமத்தைக் கட்டிக் காக்க அவதாரம் எடுத்தவனாயிற்றே!

அந்த வருண தருமத்தை ஒழித்துக் கட்டப் புறப்பட்ட புத்தர் எங்கே - வருணதருமத்தைக் காப்பாற்ற கற்பிக் கப்பட்ட இராமன் எங்கே?

‘துக்ளக்’ தூக்கி கூத்தாடும் அந்த இராமாயணம் பவுத்தர்களைப் பற்றி என்ன சொல்லுகிறது?

யதா ஹி சவ்ர;

ஸ்யத தயாஹி புத்த;

ததாகதம் நாஸ்திக மகர வித்தி

(வால்மீகி இராமாயணம் அயோத் தியா காண்டம், சுலோகம் 1502)

“ஒரு திருடன் எப்படிப்பட்டவனோ அப்படிப்பட்டவன் புத்தன். வேதத்திற்கு எதிரானது புத்தனுடைய கருத்துகள். புத்தியுள்ள மக்களே நாத்திகவாதிக ளாகிய புத்தர்களுக்கு முகம் கொடாதீர் கள்” என்று சொல்லுகிற இராமாயணமும் அதன் கதாநாயகனாகிய இராமனும், புத்தரும் நம் நாட்டுக்கும் இலங்கைக்கும் இரு வழி பாலமாம் - கூறுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

விவேகானந்தரைப் பற்றி குருமூர்த்தி கும்பல் எப்படி எப்படியெல்லாம் ஆரா திக்கின்றன. கல்விக் கூடங்களுக்குக் கெல்லாம் விவேகானந்தர் ஊர்தி என்று அழைத்துச் செல்கின்றனர். அந்த விவேகானந்தர் இராமாயணத்தைப் பற்றி என்ன கூறுகிறார்?

“தென் இந்தியாவில் இருந்த மக்களே தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும்  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

- (“சுவாமி விவேகானந்தர் அவர் களது சொற்பொழிவுகளும், கட்டுரை களும்” எனும் நூலில் ‘இராமாயணம்’ எனும் தலைப்பில் பக். 587)

இதுபோன்ற இடங்களில் எல்லாம் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரவம் தெரியாமல் ஒளிந்து கொள்

வார்கள். வேதங்களையும் பார்ப்பனர்களை யும் கவுதமப் புத்தர்எப்படி எல்லாம் விமர்சிக்கிறார் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

புத்தர் ஒரு சமயம் கோசல நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ‘மானசாக தம்’ என்ற அக்கிரகாரத் திற்குள் வந்து அதன் அருகிலுள்ள அயிரா வதி (தற்போது ரப்தி) ஆற்றங்கரையி லிருந்த மாந்தோப்பில் தங்கியிருந்தார். அந்த அக்கிரகாரத்தைச் சேர்ந்த இரண்டு பார்ப்பன இளைஞர்கள், உண்மையைச் சொல்லுகிறவரிடம் சென்று,

“பகவானே, எங்களுக்குள் பிரம்மத் தைக் காணுகின்ற வழிகளைப் பற்றிக் கருத்துவேறுபாடுள்ளது. நான் பொக்கர சாதிப் பிராமணன் சொல்லுகின்ற வழிதான் நேரானது, என்கிறேன். எனது தோழன் தாருகாப் பிராமணன் சொல்லுவதுதான் நேரடியாகப் பிரம்மத்தை அடையும் வழி என்கிறான். இக்கிராமத்திற்குள் வருவதற் குப் பலவழிகள் உள்ளன. அதுபோல பிரம்மத்தைப் பார்க்க எந்தவழியில் சென்றாலென்ன?'' என்றான் ஒரு இளைஞன்.

புத்தர் இளைஞர்களிடம் திருப்பி வினாக்களைத் தொடுத்தார்.

“எல்லா வழிகளுமே சரியான வழிதா னென்று நினைக்கிறீர்களா? நீங்கள்” என்றார்.

“ஆமாம் கோதமரே, அவ்வாறு தான் நினைக்கின்றோம்.”

புத்தர் “வேதத்தில் உள்ள எந்தப் பாட்டிலாவது பிரம்மனை நேருக்கு நேராகப் பாத்ததாகப் பாடியுள்ளார் களா?"

“இல்லை கோதமரே” - இளைஞர் களின் பதில்.

“அது எப்படி நித்தியமான பிரம்மாவை அநித்திய மான மனிதன் நேருக்கு நேராகப் பார்க்க முடியும்?” என்று இரண்டு இளைஞரும் திருப்பிக் கேட்டனர் புத்தரை.

“ஒருவன் நான்கு சாலைகள் ஒன்றிணையும் - நாற்சந்தியில் மாடிப் படிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறான். அந்த வழியாகச் சென்றவர்கள், எந்தக் கோட்டைக்கப்பா படிகள் கட்டிக் கொண்டிருக்கிறாய்? கோட்டை யில்லை, ஆனால் படிகளை மட்டிலும் கட்டிக் கொண்டிருக்கிறாயே? உன் கோட்டை கிழக்கேயா? மேற்கேயா? தெற்கேயா? வடக்கேயா? எப்பக்கம் உள்ளது? சிறியதா? நடுத்தரமானதா? பெரியதா?'' என்று கேட்டனர்.

“அது எனக்குத் தெரியாது” என் றான் படிகளைக் கட்டிக் கொண்டிருந் தவன்.

“கோட்டை எங்கே இருக்கிறது என்பதைத் தெரியாமல், ஏனப்பா படிகளைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்” என்றனர் அவ்வழியே சென்றவர்கள்.



“நான் படிகட்டத்தான் செய்வேன். கோட்டையைப் பார்க்க முடியாதென்பது எனக்குத் தெரியும்” என்று சொன்னான்.

“படிகட்டுகிறவன் சொல்லுகின்ற பதிலைப் போலத் தான் உள்ளது பிரம்மம் பற்றி வேதம்பாடியவர்கள் சொல்லுகிற பதிலும்''.

“சரி இந்த ஆகாயக் கோட்டைக்கு படிகட்டுகிறவனின் செயலும் பதிலும் அறியாமை நிறைந்ததாகத் தோன்றவில் லையா உங்களுக்கு?” என்று கேட்டார் புத்தர்.

இரண்டு பார்ப்பன இளைஞர்களும் “ஆமாம் உண்மையிலேயே மூடத்தன மான செயல்தான்; பேச்சுத்தான்” என்றனர்.

அப்போது புத்தர் “அப்படியானால் பார்ப்பனர் தங்களுக்குத் தெரியாத, அவர்களுடைய வேத ரிசிகளும் பார்க்காத, அறியாத ‘பிரம்மா'வை அடை யும் வழியை மட்டிலும் காட்டுவோம் என்பதும் வீணான வேலை வெட்டித் தனமானது என்று தோன்றவில்லையா?” என்று கேட்டார்.

“மெய்யாகவே வீணான வேலை தான்” என்றான் ஓர் இளைஞன்.

“தெரியாத, பார்க்காத, காணமுடியாத ஒன்றுக்கு வேதம் வழிகாட்டும் என்பது மடத்தனமானது. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு செல்லுகின்ற குருடர் களின் தன்மையைப் போன்றது வேதம் என்று சொல்லுவதும். முன்னால் செல்லு கின்றவனுக்கும் ஒன்றும் தெரியாது. நடுவில் செல்லுகின்றவனும் காணமுடி யாது. இறுதியாகப் போகின்றவனும் பார்க்கமுடியாது. அதுபோலவே வேதப் பாடல்களும் குருட்டுத் தனமானது. பைத்தியக்காரத்தன மானது. பொருள் அற்ற வெற்றுச் சொற்கள்”.

புத்தர் தொடர்ந்து கூறினார்

“ஓர் ஆற்றின் கரைக்கு ஒருவன் வரு கிறான். அக்கரைக்கு அவன் போக வேண்டும்.

“ஓ இந்திரா - ஓ அக்னியே - ஓ சோமனே இங்கே வா, என்னை அந்தக் கரையில் கொண்டு போய் விடு'' என்று அவன் வேண்டினால் அந்தக் கரைக்குச் செல்ல முடியுமா?''.

“நிச்சயமாக முடியாது கோதமரே'' என்றனர் அவ்விருவரும்.

“இந்தப் பிராமணர்கள் அதைத்தானே செய்கிறார்கள். இந்திரா! சோமா! வருணா! அக்கினி! எங்களுக்கு எதிரிகளுடைய ஆடு மாடுகளைக் கொடு, அவர்களு டைய செல்வத்தைக் கொடு, அவர்களை எங்களுக்கு அடிமைகள் ஆக்கு?” என்று தானே குடித்துவிட்டுப் பாடுகிறார்கள்.

“பிராமணர்களிடத்தில் வெறும் காம வெறிதான் உள்ளது. அவர்களிடத்தில் பொறாமையும், சோம்பேறித்தனமும், கொலை வெறியும், அகந்தையும் தான் நிறைந்திருக்கிறது'' என்று புத்தர் சொல்லிக் கொண்டே இருக்கையில் ஒருவன் “அவ்வாறெல்லாம் இல்லை” என்றான். அதே சமயம் மற்றொரு இளை ஞன் “நீங்கள் சொல்வதெல்லாம் உண் மைதான். மறுப்பதற்கில்லை” என்றான்.

“இந்தப் பிராமணர்கள் காமவெறி, பொறாமை, கர்வம், வஞ்சகம் நிறைந்த வர்கள். இப்படிப்பட்டவர்கள் உங்க ளுக்கு நல்லவழி காட்ட முடியும் என்று நம்புகிறீர்களா? பிராமணர்கள் நல்லவர் கள் ஆவது அவர்கள் பிறவிக் குணத் திற்கே மாறுபட்டது. அவர்களுடைய வேதம் என்பது நீரற்ற பாலைவனம். வழியற்ற காடு. பாழடைந்த வீடு. பொட்டல்காடு ” என்றார் புத்தர்.

போதுமா? இந்தப் புத்தரைத்தான் பார்ப்பன தருமத்தைக் காக்க வந்த இராமனோடு ஒப்பிடுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.

பார்ப்பனீய வருணாசிரமத்தை வீழ்த்த வந்த புத்தரையே மகா விஷ்ணு வின் பத்தாவது அவதாரமாக்கி புராணம் எழுதியது இந்தக் கூட்டம். அதுகூட அவர்களுக்கு எதிரானதே. ஆகம அதர்மம் தலைவிரித்தாடி தர்மம் குன்றி அதர்மம் தலைதூக்கியதால்அதனை ஒழித்துக் கட்டத்தான் விஷ்ணு பத்தாவது அவதாரமாகப் புத்தர் வந்தார் என்கிறார்களே. இதில் எது உண்மை?

புரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை!

கிருஷ்ணன் கற்பிதம்


புத்தர் பிரான் அற மொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமானது ‘பிறன் மனைவியை விரும்பாதே’ என்பது. அந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணன் அவதாரத்தை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பியது. காமவிளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே, கிருஷ்ணன் கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அயோக்கியக்கதை இட்டுக் கட்டப்பட்டது.

(என்சைக்ளோபீடியோ பிரிட்டானிக்கா தொகுதி - 4)

-  விடுதலை ஞாயிறு மலர், 11.5.19

பார்ப்பனர்போக்கு பற்றி.....



டாக்டர் மு.வ.


சாதியின் அறிகுறி உணவு விடுதியின் தலைப்பில் கொட்டை எழுத்துகளில் இருப்பது, வேறு எந்த நாகரிக நாட்டிலும் காணமுடியாத மாசு ஆகும்.,

இந்த மாசைப் போக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்தார் பெரியார் ஈ.வெ.ரா. நாகரிகமான மக்கள் வாழும் இந்த நாட்டில், சாதியின் வாலை ஒழித்தது போலவே, உணவு விடுதிகளின் பெயரில் உள்ள "பிரா மணாள்" என்ற சொல்லையும் எடுத்துவிடுவார்கள் என எதிர்பார்த்தேன். எதிர்பார்த்தவாறு நடக்கவில்லை! சொல்லாமலேயே செய்ய வேண்டிய சீர்திருத்தக் கடமையை சொல்லியும் செய்யவில்லை தமிழர்.

ஆயினும் ஒரு காலம் வரும். சாதி வேறுபாட்டை ஒழித்தால் அல்லாமல் நாட்டில் அமைதி ஏற்படுத்த முடியாது என்ற காலம் வந்தால், அப்போது எல்லோரும் சேர்ந்து வருந்த நேரும். அன்று பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டு எல்லார் உள்ளத்திலும் வாழும்.

(தந்தை பெரியர் 79ஆவது பிறந்த நாளையொட்டி

மலேசியாவில் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)

-  விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

இதிகாசத் திரைகளை கிழித்து, புராண மேடுகளைக் களைவோம்!



"இந்த நாடு குபேரபுரியல்ல - இங்கே குபேரனைக் கட வுள் என்று சொன்னாலும் இங்கே கலைமகள் படிப் புக்குக் கடவுள் மகாலட்சுமி செல்வத்துக்கு கடவுள் என்று போற்றினாலும் இங்கே படிப்பிலும் செல்வத் திலும் நாம் சாதாரணம்!


மகாலட்சுமியை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா குபேர புரி - இங்கே நாம் வறுமைக் காட்டிலே இருக்கிறோம். அப் படிப்பட்ட மக்களை இயன்ற அளவுக்குக் கை தூக்கிவிட வேண்டும்.


இதிகாசத்திரைகள் கிழியட்டும்


அவர்களைக் கைதூக்கி விட இந்த நாட்டில் உள்ள இதிகாசத் துறைகளைக் விழித்து புராணமேடுகளைக் களைந்து, தான் மனிதன் என்கின்ற தன்மான உணர் வோடு புறப்பட வேண்டும் என்பது முதற்கட்டம்.


இரண்டாவது கட்டம் அவன் பொருளாதாரத்திலே உயரவேண்டும். அவனுக் கென்று ஒரு வீடு நல்ல வாழ்வு என்ற நிலைமைகளை உருவாக்க வேண்டும். அவன் ஏழையாக, விவசாயியாக தாழ்த்தப்பட்டவனாக இருந்தாலும் உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லப்ப டுவர்களால் மிரட்டப்படாத அளவுக்கு பணக் காரர்களால் வேட் டையாடப் படாமல் அவன் வாழ்க்கையை வசதியாக நடத்தவேண்டுமேயானால் சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் அவனை உயர்த்தியாக வேண்டும் - இந்த உணர்வுகளை வெற்றி கரமாகச் செயல்படுத்த எங்களுக்கு ஆயுதமே - அல்லாமல் ஆட்சியே எங்களுக்கு லட்சியமல்ல!


உடுமலைப்பேட்டையில் முதல்வர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து

- விடுதலை: 2.2.1975, பக்கம் 1

-  விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

புதன், 19 ஜூன், 2019

"நம்புங்கள் - நம்புங்கள்!" -"நானே அறிவாளி... வந்தேனே...!!'

மின்சாரம்


திருவாளர் 'சோ' இராமசாமி மறைந்தபின் 'துக்ளக்' இதழைக் கபளீகரம் செய்து கொண்ட கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் "நானே அறிவாளி" என்று கோமாளியாக ஆகாயத் துக்கும் பூமிக்கும் ரொம்பத்தான் துள்ளிக் குதிக்கிறார். கிணற்று வாளியாவது பயன்படும். இந்தக் கிணற்றுத் தவளையோ "நானே அறிவாளி - அறிவாளி" என்று அக்ர காரத்துக்கே உரிய "கல்யாணக் குணத்தோடு" அரைக்கால் சட்டை பையன்போல அரட்டைக் கச்சேரி நடத்துவதான் பரிதாபம். (இப்பொழுது சங்கரமடம் வரை நாட்டாண்மை செய்ய ஆரம்பித்து விட்டார் - பார்ப்பனர்கள் சங்கரமடம் பக்கம் நிற்பார்களா? அல்லது இந்த சவுண்டிப் பக்கம் நிற்பார்களா என்பதை வேடிக்கைப் பார்க்கப் போகிறோம்.)


எத்தனை முறை பதிலடி கொடுத்தாலும் இந்த சவுண்டிகளுக்கு உறைப்பதில்லை. ஒரு வரி பதில் எழுத வக்கில்லாத இந்த வெட்கம்கெட்டதுகள், திராவிட இயக்கத்தின் மீதும் (குறிப்பாக தி.க. - தி.மு.க. வின் மீது), தந்தை பெரியார், கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி, தளபதி ஸ்டாலின் மீதும் அக்கப்போர் அவுட்டுத் திரிகளாக சேற்றை வாரிப் இறைப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.


நேற்று வெளிவந்த "துக்ளக்," கில் (19.6.2019) இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி எதை எதையோ கிறுக்கித் தள்ளி இருக்கிறார் இந்தக் கிறுக்கர்.


தமிழ்நாட்டின் சமுக அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு எழுதிட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி ஏதுமின்றி பொடித்தனமாக எழுதுவதை எண்ணினால் வயிறு குலுங்க சிரிக்கத்தான் வேண்டும்.


"1949: திமுக பிரிந்த பிறகு பெரியார்  - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவில்லை!"


இப்படி எழுதியிருக்கிறாராரே - இதனைப் படிக்கும் எலிமண்டரி அரை டிராயர் பையன்கூட கேலி செய்ய மாட்டானா?


எத்தனை எத்தனைப் போராட்டங்கள் - பட்டியல் தேவையா? இந்த அய்யருக்காக இல்லாவிட்டாலும் 'துக்ளக்'கை வாராவாரம் வாங்கும் நமது பரிதாபத்துக்குரிய 'பஞ்சமர்', களும், 'சூத்திரர்'களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? 1949க்கு பின் தந்தை பெரியார், திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டப் பட்டியல் கழகத்தின் அம்பறாத் தூணிலிருந்து அம்பாக இதோ புறப்படுகிறது.


இரயில்வே நிலையங்களிலும், ஊர்ப் பெயர் பலகைகளிலும் இந்தி முதல் இடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும், ஆங்கிலம் இரண்டாம் இடத்திலும், இருந்த நிலையை எதிர்த்து நடத்தப் பட்ட போராட்டத்தில் இந்தி எழுத்துக்கள் தார் கொண்டு அழிக்கப்பட்டன (1.8.1952) தந்தை பெரியார் திருச்சி ஜங்சனில் ஒரு முனையிலும்,  கலைஞர் (திமுக) அதே ஜங்சனில் இன்னொரு முனையிலும் அழித்தனரே!


தொடர்ந்து 1953, 1954 ஆண்டுகளிலும் அப்போராட்டங்கள் நடத்தப்பட்டதன் காரண மாகவே தமிழ் முதல் இடத்திற்கு வந்தது என்ற வரலாறு தெரியுமா இந்த வன்கணாளர்களுக்கு? அதுவரை இந்தி முதலிடம், ஆங்கிலம் இரண்டா மிடம், தமிழ் கடைசி இடத்தில் எழுதப் பட்டிருந்ததே!.


திராவிடர் கழகத்தின் போராட்டம் காரண மாகதான் தமிழ் முதல் இடத்திற்கு வந்தது என்பதை வந்தேறிகள் அறியட்டும்!


1955 ஆகஸ்டு முதல் தேதியை அவ்வளவு எளிதாக எவராலும் மறந்து விடத்தான் முடியுமா?


அரசுப் பள்ளிகளில் இந்தி - கட்டாயத் தேர்வு என்று அறிவித்த நிலையிலே தந்தை பெரியார் அறிவித்த போராட்டம் என்ன தெரியுமா? அகில இந்தியாவே நடுநடுங்கியதே - இப்படியொரு போராட்டமா? திகைத்து நின்றதே இந்தியா!


அதுதான் தேசியக் கொடியை கொளுத்தும் போராட்டம். இவ்வளவுக்கும் பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியாரால் பலபடப் பாராட்டப்பட்ட காமராஜர்தான் முதல் அமைச்சர்.


பிரதமரோ பண்டி ஜவகர்லால் நேரு. முதல் அமைச்சர் காமராஜரிடம் தொடர்பு கொண்டு  கேட்கிறார் பிரதமர்." உங்கள் நண்பர் நாயக்கர் இப்படியொரு போராட்டத்தை அறிவித்துள்ளாரே - நீங்கள் தலையிட்டு தடுக்கக்கூடாதா?" என்று கேட்கிறார்.


அதற்குப் பச்சை தமிழர் காமராஜர் சொன்ன பதில்தான் பிரமாதம்! பிரமாதம்!!


"ஆமாம் உண்மைதான்; நாயக்கர் எனக்கு நண்பர்தான் ஆனால் இந்திக்கு நாயக்கர் நண்பரா? இல்லையே, என்ன செய்வது!" என்பதுதான் அந்தப் பதில்.


வேறு வழியின்றி பிரதமர் நேரு இறங்கி வந்து இந்தி கட்டாயம் ஆக்கப்படாது என்ற உறுதி மொழியை கொடுத்த நிலையில் மாநில அரசின் சார்பிலும், மத்திய அரசின் சார்பிலும் இந்தி மொழி எப்போதும் எப்படியும் திணிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் காமராசர் கொடுத்த உறுதி மொழியை அறிவாரா அக்கிரகாரத்து ஆசாமி?


அந்த உறுதி மொழியை வெளியிடுவதற்கு முன் அதன் நகல் தந்தை பெரியாரிடம் காட்டப்பட்டு, அவர் செய்த திருத்தங்களுடனும், அதே போல போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன் என்ற தந்தை பெரியார் அறிக்கையும் முதலமைச் சரிடம் காட்டப்பட்டு வெளியிடப்பட்ட வரலாறு (விடுதலை 3.8.1955) எல்லாம் அரை வேக்காடு களுக்குத் தெரியுமா?


வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று புளியோதரைகள் உளறக்கூடாது. தொலைக்காட்சிகளில் இந்தியின் ஆதிக்கம் தலை தூக்கும் காலக்கட்டத்தில் சென்னை திருச்சி, கோவை, குடந்தை, வேலூர் ஆகிய இடங்களில் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களிலும், அஞ்சல் அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதே. (4.5.1985)


"நவோதயா" என்ற பெயரில் இந்தித் திணிப்பு சூழ்ச்சியாகத் திணிக்க முயன்ற தருணத்தில் திராவிடர் கழகம்தான் கிளர்ந்து எழுந்தது.


திருச்சியில் அதற்காகவே மாநாட்டினை திராவிடர் கழகம் நடத்தியது (10.6.1986) கல்வி நெறிக் காவலர் தாமரைத் திரு. நெ.து.சுந்தர வடிவேலு அவர்களும், பங்கேற்று குடிசைகள் மத்தியில் அரண்மனையா? என்ற கேள்வியை எழுப்பினார். அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி 21.6.1986 அன்று நாடு தழுவிய அளவில் நவோதயா கல்விக் கொள்கை அறிக்கைக்கு தீ மூட்டப்பட்டது. திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளர்


கி.வீரமணி அவர்கள் உட்பட நாடெங்கும் பல்லாயிரக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டனர்.  14 நாள் சிறைவாசத்துக்குப் பின் விடுவிடுக்கப் பட்டனர்.


1986ஆம் ஆண்டில் இந்தி வாரம் என்று கூறி கோப்புகளிலும், கடிதங்களிலும் இந்தியிலேயே கையெழுத்து இடுமாறு பணியாளர்களை  மத்திய அரசு பணித்த நேரத்தில் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை அறிவித்தாரே அன்றை கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்ட ரயில் சுற்றுப் பயணத் தையும் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் போராட்ட வீரர்களின் பட்டியல் குவிந்ததே!


21.9.1985: சென்னை பெரியார் திடலில் போராட்டத்திற்கு முந்தய நாள். இரவு இந்தி அழிப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.


இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்


கி.வீரமணி அவர்களுக்கும், புலவர் மா.நன்ன னுக்கும் பொன்னாடைகள் போர்த்திய திமுக தலைவர் டாக்டர் கலைஞர், "தார் டப்பா" ஒன் றையும் பெரும் ஆரவாரத்திடையே தந்தாரே!


22.9.1985 அன்று இந்தி எழுத்தை புகை வண்டி  நிலையப் பெயர்ப் பலகைகளில் அழிக்க நாடு முழுக்க கருஞ்சட்டை சேனை திரண்டது; இப்போராட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு விதித்த தடையை மீறி ஆயிரமாயிரமாய்த் தோழர் -தோழியர்கள் கைதாகி சிறை சென்றனர்.


சென்னை பெரியார் திடலில் டாக்டர் கலைஞர் போராட்டத்திற்கு வாழ்த்தி  வழிய னுப்பினார். பொதுச் செயலாளர் கி.வீரமணி, புலவர் மா.நன்னன் உட்பட ஏராளமான தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். (22.9.1986)


மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் காலத்திலும் திராவிடர் கழகம் இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதுண்டு.


"சமஸ்கிருத வாரம்" என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டதே. (1.8.2014)


1949க்கு பின் பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவில்லை என்று எழுதும் குருமூர்த்தியாரே, இதற்கு பிறகாவது தத்துபித்து என்று எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இந்தி எதிர்ப்பு என்பது திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் பொன்பூத்த அத்தியாயம் ஆகும்.


இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழி எதிரப்புப் போராட்டம் அல்ல - கலாச்சார எதிர்ப்புப் போராட்டமாகும்!


1931ஆம் ஆண்டில் நன்னிலத்தில் கூடிய நன்னிலம் வட்டார சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன கூறுகிறது?


"பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நம் மக்களைப் படிக்கும் படிச் செய்வது பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகும் என இம்மாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடைப் பரப்பவும், புத்தம் புதிய தொழில்முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும், உலக மொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே, தாய்மொழிக்கு அடுத்தப்படியாக நமது இளைஞர்கள் கற்க வேண்டும்" என்று இன்றைக்கு 88 ஆண்டுகளுக்கு முன் 1931இல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதை எண்ணும் பொழுது இந்த குடுமிகளிடம் எவ்வளவு காலத்திற்குத்தான் மாரடைப்பது என்று தெரியவில்லை.


இந்தி ஏன் என்பதற்கு முதலமைச்சர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சொன்ன காரணம் என்ன தெரியுமா?


" இந்தியைப் படித்தால் சமஸ்கிருதம் படிக்க எளிதாகும்" (குடிஅரசு - 30.7.1939) என்று கோணிப் பைக்குள்ளிருக்கும் பூனைக்குட்டியை வெளியில் விட்டாரே!"


"வாயாடி" சத்தியமூர்த்தி அய்யர் அதற்கு ஒரு படி மேலே போய், இந்தித் திணிப்புக் குள்ளிருக்கும் பார்ப்பனீய நஞ்சைக் கூச்ச மில்லாமல் கொட்டினாரே!


"என் கைக்கு அதிகாரம் வந்தால் - நான் சர்வாதிகாரியானால்-  இந்தியர்களை இந்தி யுடன், சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனைப் பேரும் கட்டாயம் சமஸ்கிருதும் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை யையும் உடனே ஏற்படுத்தி விடுவேன். ஏனெனில் காந்தியார் உயிருடன் இருக்கும் போதே இராமஇராஜ்ஜியம் ஏற்பட்டு விட வேண்டும் என்பது என் ஆசை. இராம இராஜ்ஜியம் வருணா சிரம தர்மத்தை அவரவர்தம் ஜாதி முறைப்படியே தொழில் செய்ய வேண்டும் என்று தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திராவிடக் கவியாகியே கம்பரே இதை ஒப்புக் கொண்டும் இருக்கிறார். இதைப் பற்றிய வடமொழி இலக்கியத்தைத் தமிழில் மொழிப் பெயர்த்தும் இருக்கிறார்.


இராமஇராஜ்ஜியம் ஏற்பட வேண்டுமானால் எல்லோரும் சமஸ்கிருதம் படித்தே தீர வேண் டும்" (மா.இளஞ்செழியன் தீட்டிய "தமிழன் தொடுத்த போர்!") என்று வெளிப் படையாக பச்சைப் பார்ப்பனத்தனத்தை நிர்வாணமாக காட்டிவிட்டாரே!


சத்தியமூர்த்தி முதல் குருமூர்த்தி அய்யர் வரை இந்தியைக் கொண்டு வந்தே தீரவேண்டும் என்று குடுமியை அவிழ்த்து விட்டு கும்மாளம் போடுவதன் நோக்கம் - போக்கிரித்தனம் என்ன வென்று  இப்பொழுது விளங்கியிருக்குமே!


பார்ப்பான் குடுமி சும்மா ஆடுமா!

- விடுதலை நாளேடு, 12.6.19


சிந்தியுங்கள்! தோழர்களே!

10.04.1948 - குடிஅரசிலிருந்து...

நாம் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குத் தெளிவாக பார்ப் பனர், பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சி காங்கிரசு தியாகிகளுக்குள்ளாகவே தேர்தலில் தலைகாட்டியது என்றாலும், முக்கிய பலன் ஒன்றும் நாம் அடைந்து விடப் போவதில்லை.

இந்த ஆட்கள் நாளைக்குச் சுலபமாக மாறி மறுபடியும் பார்ப்பனர்கள் காலில் விழமாட்டார்கள் என்றும் நம்மால் கருத முடியாது. நாளை விடியற் காலையிலேயே கூட இவர்கள் பார்ப்பான் காலில் நுழைந்து வெளி வருவார்கள். ராஜகோ பாலாச்சாரியை விரட்டிய சிப்பாய்கள் தானே இவர்கள்!

பிறகு இவர்கள் தலைவரே இங்கு வந்தால் வெட்கக் கேடு என்று வடநாடு சென்று ராஜகோபாலாச்சாரியார் காலில் விழவில்லையா?

*********


நாம் 100க்கு 95 பேர்கள், 100க்கு 3 பேரிடம் அல்லல் படுகிறோம். நம் மானத் தை, வீரத்தை, காணிக்கையாக வைத்து உயிர் வாழ்கிறோம்.

*********


அரசியலில் புகுந்தாலே எவனுடைய யோக்கியதையும் கெட்டுப் போகுமே, கெட்டுப் போய்த்தானே இருக்கிறது. அரசியல் என்பது வடிகட்டின அயோக் கியத்தனம் என்று ஒரு மேல் நாட்டு அறிஞர் கூறியிருக்கிறார் என்று நான் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன்.

*********


காந்தியார் உயிரோடு இருந்திருப்பாரா னாலும் இந்த 7, 8 மாத அனுபவத்தைக் கொண்டு ஏதாவது அவர் செய்யக் கூடும். அமைப்பை மாற்றியமைக்கக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அவரும் கொல்லப்பட்டு விட்டார்.

*********


நேருவே பொது உடைமைத் தத்து வத்தை நசுக்கத் துணிந்து விட்டதாகக் கூறி பொது உடைமைவாதிகளே ஓடிப் போங்கள் என்று கூறி விட்டார். படேலோ, சமதர்மவாதிகளே வெளியே றுங்கள் என்று கூறிவிட்டார். சண்முகமோ முதலாளிகளைக் காப்பாற்றுவதுதான் ஏழைகளைக் காப்பாற்றுவதாகும் என்று சொல்லி விட்டார். வைத்திய நாதய்யரோ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் வகுப்புவாதிகளே வெளியேறுங்கள் என்று கூறிவிட்டார். பொது உடைமை கூடாது என்றால், சமதர்மம் கூடாது என்றால், முதலாளிகள் கொள்கை வாழ வேண்டுமென்றால், வகுப்பு நீதி கூடாது என்றால், பின் எதற்காக ஒரு ஆட்சி இருக்கவேண்டும்.

பார்ப்பனர்களை ஆதரிக்க, அவர்கள் மதத்தைக் காப்பாற்றிக் கொடுக்க அவர்களின் கையாட்களான பணக்கார மிராசுதாரர்களைக் காப்பாற்ற மற்றும் பார்ப்பன அடிமைகளான முதலாளிகளை அவர் இஷ்டபபடி வேண்டுமளவும் சுரண்டுதல் செய்ய அனுமதிகள், மற்றும் காலிகளுக்கும் கொலைகார கொடுங் கோலர்களுக்கும் ஏதேனும் வசதிசெய்து கொடுக்க இன்றுள்ள உயர்வு தாழ்வுகளை அப்படியே நிலைக்கச் செய்ய, இதற்காகவா ஒரு ஆட்சி இருக்க வேண்டும்?

*********


தற்போது ஏதாவது நல்ல காரியம் நடக்கிறதென்றால் அதெல்லாம் நாம் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக் காமல் இருப்பதால்தான் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

அந்தப் பக்கம் தலைவைத்து விட்டோமோ அவ்வளவு தான் தாமதம். அப்புறம் நேற்றுச் சண்டை யிட்டுக் கொண்ட இரண்டு பேருமே ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை ஒழிக்கப் பார்ப்பார்கள்.

ஆகவே ஒதுங்கியிருப்பது தான் மிக நல்ல காரியம். ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஒதுங்கியிருந்தா லொழியத் திராவிடர் கழகத்தின் சமுதாயச் சீர்திருத்தத் திட்டம் சீக்கிரம் நிறைவேறாது என்பதற்காகத்தான்.

*********


வெளியிலிருந்து மக்களுடைய உணர்ச் சியைக் கிண்டிவிட்டு அவ்வுணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஆட்சியாளர்களைச் சட்டமியற்றும்படி வற்புறுத்தி வருவது தான் நமது திட்டம். அப்படிப்பட்ட திட்டத்தின் மூலம்தான் நமது லட்சியமும் விரைவில் கைகூடும். சமுதாய இழிவு நீக்கப் பிரசாரம்தான் நமது திராவிடர் கழகத்தின் முக்கியமான வேலை.

*********


இனி இந்துவாக இருக்க மாட்டேன். நான் இனி சூத்திரனாக இருக்க மாட் டேன். இந்துமத அடையாளம் அணிய மாட்டேன் என்று முழக்கம் செய்தல் வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் கூறுவார் களானால், பார்ப்பனர்களே முன்வந்து மனுதர்மமே  மக்களுக்கு எழுதப்பட்ட தல்ல. அது தேவாளுக்கு எழுதப்பட்ட தாக்கும் என்றுகூறி தம்மையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

*********


கருஞ்சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று யார் கூறினாலும், பூணூல் அணிந்த கூட்டம் நாட்டில் இருக்கும்வரை கருஞ்சட்டை அணிந்த கூட்டமும் இருந்தே தீரும். உச்சிக் குடுமி உள்ளவரை கருப்புக் கொடியும் பறந்து தீரும் என்று சொல்லிவிடுங்கள்.

*********


உங்களை எந்தப் பார்ப்பனன் இது ஏன் என்று கேட்டாலும் நீ உயர்ஜாதி என்று காட்டிக் கொள்ள நீ பூணூல் அணிந்து கொள்ளும்போது நான் சூத்திரனல்ல. இந்துவல்ல என்று காட்டிக் கொள்ள நான் ஏன் கருஞ்சட்டை அணிந்து கொள்ளக்கூடாது என்று ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.

*********


சட்டசபையைப் பற்றிக் கவலை வேண்டாம். மந்திரி பதவிக் கவலை வேண்டாம். அதைப் பார்ப்பனருக்கும் அவர்கள் அடிமைக்கும் விட்டு விடுங்கள். நாம் கட்டுப்பாடான பிரசாரம் செய்து மக்களை மானமுள்ளவர்களாக ஆக்கி னால் எந்தக் காரியமும் கைகூடும். மந்திரிகள் நமக்குச் சலாம் போடுவார்கள்.

*********


பார்ப்பானைத் தவிர்த்து வேறு எந்த ஜாதியாவது காந்தியாரைச் சுட்டிருந்தால் அந்த ஜாதி மனிதன் ஒருவனையாவது கண்காட்சிக்காவது காணமுடியுமா?

- விடுதலை நாளேடு, 8. 6. 19

திங்கள், 17 ஜூன், 2019

ஆஷ்சை கொன்று வெறி தீர்த்த வாஞ்சி

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆஷ், (Robert William Escourt Ashe) வாஞ்சிநாதன் எனும் சாதி வெறியரால் சுட்டு கொல்லப்பட்ட நாள் - 17.06.1911.

''குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்கள் மட்டுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்று கடவுளின் பெயரால் விதிக்கப்பட்டிருந்த  "விதியை" உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருந்த  தாழ்த்தப்பட்டிருந்த சாணார் (நாடார்) சமூகப் பெண்ணை தன் காரில் ஏற்றிய ஆட்சித் தலைவர், சுற்றிப்போகும் வழியால் காலதாமதமாகும் என்பதால் குறுகிய வழி எது எனக் கேட்கிறார்.

அருகிலிருந்தவர்கள் அக்ராஹாரம் வழியே போனால்தான் சீக்கிரமாக போகமுடியும் ஆனால் அது பிராமணர்கள் வசிக்கும் தெரு, பிறர் சென்றால் தீட்டாகிவிடும் என்றனர்.

அதை  stupid என்று சொல்லி காரை அக்ரஹாரப் பாதையில் கொண்டுசெல்லும்படி ஓட்டுனருக்கு கட்டளையிடுகிறார் மாவட்ட ஆட்சியர் .

அதை அறிந்து வழிமறித்த பார்ப்பனர்கள் அக்ரஹாரம் தீட்டாகிவிட்டது என்று வழி மறித்து ஆஷ்க்கு  எதிராகக்  கத்துகிறார்கள்.

தனது பிஸ்டலை காட்டி மிரட்டிவிட்டு அக் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் ஆஷ்.

பார்ப்பனர்கள் அக்ரஹாரத்தின் புனிதத்தைக்  கொடுத்த ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல சீட்டுக் குலுக்கி போட்டு அதில் வாஞ்சிநாதன் பெயரை தெரிவுசெய்கின்றனர்.

தனது அக்ரஹாரத்தை தீட்டாக்கிய ஆஷ்-ஐ மறைந்திருந்து சுட்டுக்கொள்கிறார் வாஞ்சிநாதன்.

பின்னாளில் அதையே வெள்ளையனை இந்திய விடுதலைக்காக சுட்டுக் கொன்ற சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாத ஐயர் என்று கதை அளந்து வரலாறாக்கப்படுகிறார் வாஞ்சிநாதன்.

கொலைக் கேசில் ரோட்டோரப்  புளிய மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட கட்டமொம்முலு எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை தூக்கி சாப்பிடும் கதை வாஞ்சிநாதன் கதை.  நன்றி விஷ்வா விஸ்வனாத்
- பகிரி வழியாக