பக்கங்கள்

ஞாயிறு, 5 மே, 2019

கொலை களம்: கோவிலுக்குள் புகுந்து பூசாரி அடித்துக் கொலை!

கம்பம், மே 5  கம்பம் அருகே கோவிலுக்குள் புகுந்து பூசாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட் டத்தில்  சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த சுருளி அருவியில் குளிப்ப தற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுருளி அருவியில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்த மான பூதநாராயணன் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், சங்கிலி கருப்பசாமி கோவில் கைலாசநாதர் கோவில், போன்ற கோவில்களுக்கும்  பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பூத நாராயணன் கோவிலில் உள்ள உண்டி யலை உடைப்பதற்காக அடையாளம் தெரியாத 2  நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அப்போது கோவிலுக்குள் பூசாரியான சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த மலையன் (வயது 70), திண்டுக்கல் மாவட்டம் சிறீராமபுரத்தைச் சேர்ந்த பால சுப்பிரமணி (59) ஆகிய இருவரும் கோவி லுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் பூசாரிகள் எழுந்து அவர்களை தடுக்க முயன்றனர். இத னால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர் அருகில் இருந்த இரும்பு கம்பியால் பூசாரி மலையனின் தலையில் பலமாக தாக்கினர்.
இதை பார்த்த மற்றொரு பூசாரி பால சுப்பிரமணி தடுக்க முயன்றார். அவ ரையும் கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மலையன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ராயப்பன் பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாஸ்கரன், உத்தமபாளையம்  காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டி, கம்பம் ஆய்வாளர் பொன்னிவளவன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த பாலசுப்பிர மணியை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலையனின் உடலை உடற் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். கோவிலுக்குள் புகுந்து பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட் டது அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
- விடுதலை நாளேடு, 5.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக