பக்கங்கள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மாபெரும் கோழை பாரதி - எதிர்வினை (95)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (95)

மார்ச் 1-15 2022

மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மாபெரும் கோழை பாரதி

நேயன்

இந்து தர்மத்தை ஆங்கிலேயர்கள் அழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன். இக்கொலையில் பாரதிக்கும் தொடர்பு உண்டு என்று ஆங்கிலேயர்கள் அய்யப்படவே, தனக்கும் இக்கொலைக்கும் தொடர்பு இல்லையென்று 8.4.1914இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டொனால்டுக்கு பாரதி கடிதம் எழுதுகிறார்.

ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும். ஆனால், அவரைப் புதுவையில் பார்த்ததாகச் சாட்சியம் அளித்த தபால் ஆபீஸ் குமாஸ்தாகூட வாஞ்சி அய்யர் என் வீட்டுக்கு வந்தார் என்றோ என்னைச் சந்தித்து என்னுடன் காணப்பட்டார் என்றோ சொல்லத் துணியவில்லை. இக்கடிதத்தில் மேலும் பாரதி எழுதியிருப்பது என்னவென்றால், 1912இலேயே தன் நிலையை விளக்கி, சென்னை கவர்னராக இருந்த லார்டு கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை கவர்னராக லார்டு பென்ட்லாண்டு வந்ததும் பாரதி தன் நிலையை விளக்கி அவருக்கும் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ள-தாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி மூன்று வருஷங்களுக்குப் பிறகு தொலை தூரத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் ஒரு சிற்றூரில் யாரோ ஒருவர், கொடுங்-கோன்மைக்குப் பெயர் வாங்கிவிட்ட ஒரு கலெக்டரைச் சுட்டுக் கொன்றாரென்பதால், போலீஸ் கீழ் மட்ட ஆட்களது யோசனையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக்கி என் மீது வாரண்டு பிறப்பித்தது… ஆனால் மேன்மை தங்கிய கவர்னரின் விருப்பம்கூட, அவருடைய பிற்போக்கான சகாக்களால் தடுக்கப்-படுகிறதென நான் கருத வேண்டியிருக்கிறது ஆகையால், பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராகிய உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை அனுப்புகிறேன். நீங்கள் எனக்கு லார்டு பென்ட்லாண்டு நீதி வழங்க அவருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.

பாரதியின் இக்கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்ன? பாரதி ஆங்கிலேயரின் தயவின் மூலம் வழக்கு எதுவும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார். இப்போது அவரிடமிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே போய் விட்டது.

மேலே கண்ட கடிதத்தை எழுதிய அதே 1914 ஆம் ஆண்டில் தான், பாரதி அச்சமில்லை என்ற பாடலை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் ……

…… உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பாரதி ஆங்கில ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த போதுதான் இப்பாடலை அவர் இயற்றியுள்ளார். பெரும்பாலான தமிழறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும், இப்பாடலை மேற்கோள் காட்டிப் பாரதியின் வீரத்தைப் புகழ்கின்றனர். ஆனால், உண்மையில் பாரதி வீரமுடன் வாழ்ந்தாரா என்றால் இல்லை என்பதுதான் இதன் மூலம் நமக்கு விடையாகக் கிடைக்கிறது.

1916 மே 25இல் ‘சுதேசமித்திரனில்’ சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து வருமாறு:

பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்-தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916இல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார்.

1916 டிசம்பர் 26ஆம் தேதி ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் அவர் எழுதுகிறார்: எல்லா ஜாதி-யாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு _- செலவு உள்பட எல்லா விவகாரங்களுக்கும், மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம். பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகு முறையில் மாற்றம் இருக்கும் எனக் கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச் சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர். பாரதிக்குக் கடலூர் சப்_-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

Om Sakthi
District Jail, Cuddalore,
28 November – 1918.

His Excellency Lord Pentland,
Governor,
Fort St. George, Madras.

The Humble petition of
C.Subramania Barathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy. I.G (C.I.D) was send by your Excellency’s Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain.
                   Your Excellency’s
               most obedient Servant
          C.Subramania Bharathi.
(G.O. No.1331 dt. 18.12.1918 Public)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக