பக்கங்கள்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

பாரதியின் வழக்குரைஞர்கள்! - எதிர்வினை (100)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (100)

2022 கட்டுரைகள் மே 16-31 2022

பாரதியின் வழக்குரைஞர்கள்!
நேயன்

பாரதி பிறப்பதற்கு முன்பே, மராட்டிய மாநிலத்தில் கோலோச்சிய ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் மகாத்மா ஜோதிராவ் பூலே (1827_1890) உறுதியுடன் தீவிரமாகப் போராடினார். ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்ததுபோலவே, அவர்களுடைய புராணங்கள், சாஸ்திரங்கள், சனாதன தர்மங்கள், சடங்குகள் போன்றவற்றையும் கடுமையாக எதிர்த்தார். ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி வளர்ச்சி, உழைப்பாளர் உரிமை போன்றவற்றிற்கு அவரும் அவருடைய துணைவர் சாவித்திரியும் களத்தில் இறங்கி தொண்டாற்றி, வெற்றியும் பெற்றனர்.
பாரதி காலத்திலே, கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியில், சாணார் சமுதாய மக்களால் தோள்சீலைப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. நாராயணகுரு ஜாதிக்கு எதிராய் வலுவான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.
அதேபோல் அய்யா வைகுண்டர், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராய்க் கடுமையாகக் கருத்துகள் கூறி, மக்களைத் திரட்டியுள்ளார். சாஸ்திர, சம்பிரதாயங்களைத் தகர்த்து தன்மானத்தோடு வாழ வழிகாட்டி-யுள்ளார்.
ஆனால், அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த பாரதி வர்ணாஸ்ரமம், சனாதனம், சாஸ்திரம் இவற்றை ஆதரித்ததோடு, ஜாதிக் கொடுமைகளை அலட்சியப்படுத்தியும் கருத்துகள் வெளியிட்டுள்ளார்.
“ஜாதி பேதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எல்லாத் தேசங்களிலும் உள்ளது. இந்தியாவில் கொஞ்சம் தீவிரமாகவும், விநோதமாகவும் மாற்றுவதற்கு கஷ்டமாகவும் உள்ளது’’ என்கிறார் பாரதி. இது உண்மைக்கு மாறான பொய்யான கருத்து. ஜாதிமுறை இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதே உண்மை! மேலும், சனாதன தர்மத்தில் உள்ள ஜாதிகள், சூரிய ஜோதியில் காணப்படும் ஏழு வர்ணங்கள் போலவே அவசியத் தன்மை கொண்டவை. ஜாதி அழிவுக்குக் கருவியாகாது’’ என்கிறார் பாரதி. (பாரதி புதையல், பாகம் -2, பக்கம் 180)
பாரதியை முற்போக்காளராய்க் காட்ட முட்டுக் கொடுக்கின்ற ஆள்கள் ஒருபக்கம் என்றால், மோசடியாக அவர் கவிதைகளில் திருத்தங்கள் செய்தும் பாரதியை முற்போக்காளராய்க் காட்டுகின்றனர்.
எடுத்துக்காட்டாக,
“வேத முடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்’’
என்ற பாடல். இதில் உள்ள “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்ற வரியை எடுத்துக்கொண்டு, பாரதி ஜாதியை மறுத்தார், வெறுத்தார், எதிர்த்தார் என்கின்றனர்.
ஆனால், உண்மை என்ன?
1915 பிப்ரவரி ‘ஞானபானு’ இதழில் ‘ஜாதி உயர்வு இல்லை பாப்பா’’ என்றுதான் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. அதாவது ஜாதியில் உயர்வு இல்லை என்பதே பாரதியின் நிலைப்பாடு. ஆனால், ஜாதி வேண்டும் என்பதே அவர் கொள்கை. அதன்படியே, “ஜாதி உயர்வு இல்லை பாப்பா’’ என்று பாரதி எழுதியுள்ளார். ஆனால், இதை பின்னால், “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று திருத்தி மோசடி செய்துள்ளனர்.
பாரதி எழுதிய கீழ்க்கண்ட பாடலை ஆய்வு செய்தால் இதை உறுதி செய்யலாம்.
“நாலு வகுப்பும் இங்கொன்றே –

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக