பக்கங்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

தமிழவேள் உமாமகேசுவரனார்

 

தமிழறிஞர்கள்

மே 1-15,2022

தமிழவேள் உமாமகேசுவரனார்

(7.5.1883 – 9.5.1941)

தமிழவேள் வேம்பப்பிள்ளை உமாமகேசுவரனார் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தஞ்சை – கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தமிழ்க் கல்லூரியும் நினைவுக்கு வந்தே தீரும்.

தஞ்சை கரந்தட்டான்குடியில் (கரந்தை) பிறந்தவர் இவர் (7.5.1883). அந்தக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் சட்டம் படிப்பது என்பதே அரிதினும் அரிது. இவரோ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதனைச் சாதித்துக் காட்டிய தலைநிமிர் தமிழராவார்.

அந்தக் காலத்திலேயே பார்-_அட்_-லா படித்த ஏ.டி.பன்னீர்செல்வமும், வழக்குரைஞர் உமாமகேசுவரனாரும் தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சியின் உரமிக்க நிமிர்ந்த தூண்களாக ஒளிவீசினர்.

காந்தியார் அவர்கள் தஞ்சாவூரில் ‘உக்கடை ஹவுசில்’ தங்கி இருந்தார். (16.9.1927) அப்பொழுது காந்தியாரை நீதிக்கட்சி சார்பில் சந்தித்தவர்களில் ஒருவர் உமாமகேசுவரனார் ஆவார்.

பிராமணர் _ – பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும் என்று காந்தியாரிடம் கோரிக்கை வைத்தார்.

‘தமிழ்ப் பொழில்’ என்னும் இதழையும் நடத்தினார். ஸ்ரீமான், ஸ்ரீமதி என்ற வட சொற்களுக்குப் பதில் திருமகன், திருவாட்டி என்னும் சொற்களை அதில் கையாண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக