பக்கங்கள்

திங்கள், 29 அக்டோபர், 2018

'மைலீசுவரன்!'



தந்தை பெரியார் சொல்லிய பர்லாங்கேசுவரன், மைலீசு வரன் என்பது இதுதானோ? சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக முட்புதர்கள் மண் டிக்கிடக்கின்றன. விபத்துகளை ஏற்படுத்தும் சாலைகளால் உயிர்ப் பலிகள் நாளும் நடக்கின்றன. இன்று போட்ட சாலை அடுத்த மாதத்தில் காணாமல் போய்விடுகிறது. நேற்று கட்டிய பாலம் இன்று உடைகிறது. இவற்றைத் தடுக்க வழி காணாமல் மைல் கல்லுக்கு பூஜை போட்டு என்ன பயன்?

(தகவல்: அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி)

படிப்பிற்கும்,பகுத்தறிவுக் கும் சம்பந்தமேயில்லை என்ப தற்கு இது ஒன்று போதாதா?

கற்கள்தான் பிற்காலத்தில் கடவுளாயின என்று திராவிடர் கழகத்தினர் கூறினால், இவர் களுக்கு இதுதான் வேலை!' என்று மே(ல்)தாவிதனத்துடன் பேசும் பிரமுகர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?

சில காவல் நிலையங்களில் கிடா வெட்டிப் பூஜை போடு கின்றனர். எதற்குத் தெரியுமா? சம்பந்தப்பட்ட காவல் நிலைய வட்டார எல்லைக்குள் குற் றங்கள் அதிகரித்து விட்டன வாம் - அவற்றை நிரூபிப்பதில் சிரமங்கள் இருக்கின்றனவாம். அதற்காக ஆடு வெட்டிப் பூஜைகள், யாகங்கள் நடத்து கிறார்கள்.

போட்டிருப்பது காக்கி - மனப்பான்மையோ காவி.

மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ-எச்). முதலில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு இதனை உணர்த்தவேண்டும்.

நடைபாதைக் கோவில் களைஅகற்றவேண்டும்என்ற உச்சநீதிமன்ற ஆணை ஏற்கெனவே இருக்கிறது.என்ன வெட்கக்கேடுஎன்றால், நீதிமன்ற வளாகங்களுக்குள் ளேயே கோவில்களைக் கட் டுகிறார்கள் - குடமுழுக்கு நடத்துகிறார்கள் - அந்த வளா கத்தில் உள்ள நீதிபதிகள் சாஷ்டாங்கமாக விழுந்து கும் பிடுகிறார்கள் (அண்மைத் தகவல் - தருமபுரி நீதிமன்ற வளாகம்).

வேலியே பயிரை மேய்ந் தால்பாதுகாப்புக்குவழி எங்கே?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 27.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக