பக்கங்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2018

'இந்துத்துவா'

இந்துத்துவா என்றால் மதமல்ல - ஒரு தத்துவம் என்றெல்லாம் பேசுவார்கள் - இந்த வார்த்தையின் மூலமே இதனைக் காட்டிக் கொடுத்து விடும். இன்றைக்குப் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் நிலை என்ன?

இதோ சில:

உத்தரப்பிரதேச மாநில துணை அரசுப்பணியாளர்கள் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி,   சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-

பண்டித் மனைவியை பண்டித்தாயின் என்று அழைப் பார்கள், சமாரின் மனைவியை எப்படி அழைப்பார்கள்?

(இந்தியில்)

சமார் மனைவி .................

சமாராயின்

சமாரின்

சமாரி

சமீர்

அதாவது பார்ப்பான் மனைவியை பிராமணத்தி என்று அழைப்பார்கள் சக்கி லியனின் மனைவியை எப்படி அழைப்பார்கள்? (தமிழில்)

சக்கிலியன்  மனைவி .................

சக்கிலிச்சி

சக்கிலியி

சக்கிலி

சக்கி

புதுடில்லி (12, மார்ச் 2018): சி.பி.எஸ்.இ. பாடப் பிரிவில் 6 ஆம் வகுப்பு தேர்வில்.....

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பிரிவுகளுக்கு என்.சி.ஆர்.டி. எனப்படும் பாட நூல் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 6 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றுள்ளது. அதில் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு 4 விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் என்று தரப்பட்டுள்ளன.

இந்தக் கேள்வி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்தக் கேள்வித்தாள் வேகமாகப் பரவியது.

இந்த லட்சணத்தில் தேசிய கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் புதிய புதிய முகமூடிகளை அணிந்துகொண்டு இந்துத்து வாவை இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் நஞ்சாக விதைக் கும் விபரீதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமஸ்கிருத வாரம் நடத்தச் சொல்லுவது, யோகா' நடத்தச் சொல்லுவது என்பதெல்லாமே இந்துத்துவாவை புகுத்தும் ஏற்பாடுதான்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- மயிலாடன்
-  விடுதலை நாளேடு, 18.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக