பக்கங்கள்

சனி, 13 அக்டோபர், 2018

நாம் தாழ்வுற்றதேன்?

(டாக்டர் ரவீந்திரநாத் தாகூர்)


டாக்டர் ரவீந்திர நாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி இது!

இந்துமதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படித் தவிர வேறுவிதமாகயிருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாகப் பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம், இவ்வண்ணம் நாம் துண்டு துண்டு களாகப் பிரிந்து போய்விட்டோம், இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் ஒருவர் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய்விட்ட தனால், நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி, உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்துவிட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டை பிறருக்கு வசப்பட்டுப் போகும் படி கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது.

நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்துக் கொண்டவர்களாக ஆகிவிட் டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்கு வர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள் ஜாதிப்பிரிவு களை மீறக் கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் - இவ்வளவு தண்டனை யென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலி யுறுத்தி நிலைநிறுத்தும் சாஸ்திரங்களை யும், பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத் தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்துவிட் டோம்.

- விடுதலை 6.7.1953, பக்கம் 3

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக