பக்கங்கள்

சனி, 13 அக்டோபர், 2018

பார்ப்பனர் சிறு தொகையினர் தான். ஆனால்...



பார்ப்பனரிடம் ஏனய்யா பயம்? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு? அவர்கள் 100-க்கு 3 பேர்தானே! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ? சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும்பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு பாதுகாப்புக் கோர வேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம் தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக் கொள்வர் - அத்தோழர்கள்... சமுகத்தைக் கவனித்தால் பார்ப்பனர் சிறு தொகையினர்; பார்ப்பனரல்லாதாரின் மூச்சு, பாப்பனரைத் திணற வைக்கும்... அவ்வளவு அதிக எண்ணிக்கை உள்ளவர்கள்தான் பார்ப்பனரல்லாதார்.

ஆனால் பார்ப்பனீயம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. இதுவரை அதற்குப் பலவழிகளிலும் தரப்பட்ட படை பலத்தைப் பொறுத்திருக்கிறது.

- அண்ணா, (திராவிட நாடு 25.4.1948)

-விடுதலை ஞாயிறுமலர், 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக