பக்கங்கள்

திங்கள், 22 அக்டோபர், 2018

கன்னித்திரை

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கஞ்சர்பட் என்னும் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அந்த சமூகத்தில் ஒரு விசித்திர வழக்கம் உள்ளது. அந்த சமூகப் பெண்கள் திருமணத்துக்கு முன்பு கன்னித்தன்மை பரி சோதனை செய்துகொள்வது அவசியம் ஆகும். இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் அந்த பெண் இவ்வாறு பரி சோதனைக்கு உட்பட மறுத்து உள்ளார்.

கன்னித்தன்மை பரிசோத னைக்குஉட்படுத்துவது தன்னை அவமானப்படுத்தும் செயல் என அவர் கூறியுள்ளார். அதற்கு அந்த சமூகத்தினர் ஒப்புக்கொள் ளாததால்சமூகத்தினரைமீறி  காவல்துறையினர்பாதுகாப்பு டன் திருமணம் செய்து கொண்டார். அது முதல் அந்தப் பெண்ணிடம் அவருடைய சமூகத்தினர் பேசுவதை தவிர்த்துள்ளனர்.

இந்தஆண்டுநவராத் திரி விழாவில் திருமணமான அந்தப் பெண் கலந்துகொண்டு கோலாட்டம் ஆடி உள்ளார். திடீரென அந்த விழாவில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஊரார்ஒலிபெருக்கிமூலம் குறிப்பிட்ட பெண் ஊர் நிகழ்ச் சியில் கலந்து கொண்டதால் விழா நிறுத்தப்படுவதாக அறி வித்தனர். இதனைஅடுத்துஅந்தப் பெண்ணும் அவரது உற வினரும் விழாநடைபெறும் இடத்தை விட்டு வெளியேறி னர். அதன் பிறகு மீண்டும்  விழா தொடங்கப் பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அறிவியல் காலத்தில் மதம் உயிர் வாழத் தகுதியற்றது என்ப தற்கு இது ஒன்றே போதும்.

மருத்துவ ரீதியாக கன் னித்தன்மை (Virginity) இழப்பு என்பது எப்பொழுதும் எந்த பெண்ணுக்கும் ஏற்பட லாம். சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண்கள், விளையாட்டில் பங்குகொள்ளும் பெண்கள், மாடிப் படிகளை அடிக்கடி பயன்படுத்தும் பெண்கள் இதற்கு ஆட்படலாம்.

மருத்துவ ஆய்வு என்ன கூறுகிறது?

அதீத மன உளைச்சல் காரணமாக அந்த மன அழுத் தத்தை சமாளிக்க ஆக்சிடாக் சின்என்றஹார்மோன் உடலுக்குள் சுரக்கிறது. அந்த ஹார்மோன்அதிகம்சுரக்கும் பொழுது, அதை சமன்படுத்திட உடலில் சுரக்கும் எதிர் ஹார் மோன்களால் கன்னித்தன்மை இழக்கும் நிலை ஏற்படும். வேதிப் பொருள் அதிகம் கலக் கப்பட்ட உணவை எடுத்துக் கொள்வதாலும் இது நிகழலாம்.

அறிவியல் என்ன சொல் கிறது என்பதுதான் முக்கியம்.  மூட அறியாமையாம் மதத்தின் கால்மாட்டில் உட்கார்ந்து முடிவு செய்யக்கூடாது.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 20.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக